Posts

Showing posts from June, 2016

மதுரையில் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் ஐயா ஆற்றிய அருளுரை. By வடவள்ளி ரவிசந்திரன்

Image
இந்த பதிவு அய்யனின் உரையை ஒலிப்பதிவை கேட்டு உள்வாங்கி வரிசைக்கிரமமாக இதை தட்டச்சு செய்து இதை பதிவு செய்தவர் நண்பர் வடவள்ளி ரவிசந்திரன் அவரின் முயற்சியை நகல் எடுத்து என் blog ல் ஏற்றியது மட்டுமே என் பணி. யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா. மதுரையில் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் ஐயா ஆற்றிய அருளுரை . யோகிராம் சுரத்குமாரம் யோகிராம் சுரத்குமாரம் தேவ ஜாதி மனித ரூபம் யோகிராம் சுரத்குமாரம் . திருவண்ணாமலை மஹான் , கடவுளின் குழந்தை , அடியார்க்கு நல்லான் எங்கள் சத்குருநாதன் யோகிராம் சுரத்குமார் அவர்கள் பாதங்களில் என் சிரம் பதிய வைத்து அறிவார்ந்த இந்த மதுரை சபையின் முன்பு , இந்த சங்கத்தமிழ்ச் சபையின் முன்பு என் சிறிய உரையைத் துவக்குகின்றேன் . இந்தக் கூட்டம் போதாது . உங்களுக்கு யோகம் என்கிற விஷயம் பற்றி சரியாகத் தெரியவில்லை . இதை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால்தான் வர முடியும் . கடினம்தான் . இது ஈசியான வழி இல்லை . நல்லா மாமிச உணவு சாப்பிட்டுவிட்டு கொஞ்ச...