உ யோகி ராம்சுரத்குமார் சுவாமி ராமதீர்த்தரின் ஆங்கில கட்டுரைகள் கொண்ட 7 தொகுதி நூல்களின் தமிழ் மொழிப்பெயர்ப்பு இறையுணர்தலின் வனங்களில் By சரஸ்வதி சுவாமிநாதன் மனதின் சுவரில் சுயத்தின் சூரியன் சான் பிரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் ஹால் – ல் ஜனவரி 12, 1903 ல் ஆற்றப்பட்ட விரிவுரை. மாறாததின் வடிவமாயிருக்கும் பெண்மணிகள் மற்றும் கனவான்களே, இன்றைய இரவின் சொற்பொழிவின் தலைப்பு மாறக்கூடியதிலிருக்கும் மாறாதது. துவங்கும் முன், ராமாவிடம் தொடர்ந்து முன் வைக்கப்படும் சில கேள்விகளுக்கான விடையைப் பற்றி ஒருசில வார்த்தைகள் பேசுவோம். நீங்கள் அணிந்திருக்கும் உடையின் வண்ணத்தின் முக்கியத்துவம் என்ன ? ஏன் பௌத்தர்கள் மஞ்சள் நிற ஆடைகளை உடுத்துகின்றனர் ? வேதாந்த சாதுக்கள் அல்லது சுவாமிகள் செந்நிற உடைகளை ஏன் அணிந்திருக்கின்றனர் ? ஒவ்வொரு மதத்திற்கும் மூன்று அம்சங்கள் உண்டு. ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு தத்துவம், ஒரு புராணம் மற்றும் அதன் சடங்கு போன்றவை உண்டு. தத்துவங்கள் இல்லாமல் எந்த மதமும் நிற்க இயலாது. அப்போதுதான் அது கற்ற, அறிவார்ந்த, பகுத்தறிவு கொண்ட மக்...