Posts

Showing posts from March, 2020

விசிறி சாமியாருடன் ஸ்ரீ எம்.

Image
விசிறி சாமியாருடன் ஸ்ரீ எம்  திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்த்துமே, ஃபங்க்கா பாபா என்றும், விசிறி சாமியார் என்றும் அழைக்கப்பட்ட யோகி ராம்சுரத்குமார் அவர்களைத் தேடினேன்.  காஞ்சியில் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் இந்த விசிறி சாமியார் குழந்தை போலப் பழகுவதாகவும், அடிக்கடி பைத்தியக்காரர் போல நடந்து கொள்வதாகவும் கூறி இருந்தார்.  அவர் ஒரு காலத்தில் வட இந்தியாவில் எங்கோ ஒரு பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார் என்றும், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளை நன்றாக அறிந்தவர் என்றும் கூறியிருந்தார்.  அவரைக் கோவிலின் தேர் இருந்த இடத்துக்கு அருகில் சிறியதொரு குடிசையில் கண்டு பிடித்தேன். சிலர் அவரைச் சுற்றி நின்றிருந்தனர்.  அவர் அழகாகவும், பருத்தும், நீளமான சாம்பல் நிற முடியும், சாம்பல் நிற தாடியும் கொண்டிருந்தார். வேஷ்டி கட்டிக் கொண்டு, பல மாதங்களாகத் தோய்க்கப்படாத வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட ஒரு கோட்டையும் அணிந்து இருந்தார். என்னை அவர் உள்ளிருந்து கூர்ந்து பார்த்து கையை ஆட்டினார். " வா, வா....! இங்கே உட்கார்....! " என்று அன்பான தெ...

ஸ்ரீ எம் - ன் 'காசும், பிறப்பும்'

Image
ஸ்ரீ எம் - ன் 'காசும், பிறப்பும்' சரஸ்வதி சுவாமிநாதன்   அய்யன் பாலகுமாரன் எழுதிய ஒரு நாவலின் தலைப்பு 'காசும் , பிறப்பும் '  இந்த நாவல் ஒரு ஆன்மாவின் பல பிறவிகளைப்பற்றி பேசும் நாவல். ஒரு சீடனின் ஆசைகளை ஒரு குரு உடனிருந்து வழிநடத்த அவன் பல பிறவி அனுபவங்களையும், தற்போதைய வாழ்வையும், எதிர்கால முடிவையும் சீடனுக்கு குரு உணர்த்தும் நாவல். இந்த நாவலில் அய்யன் பாலகுமாரனே சீடன். குருவாக இருப்பவர் திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் என்பதை வாசிப்போர் உணர முடியும். இந்த தலைப்பு, ஆண்டாள் திருப்பாவையில் கையாண்ட வரிகள். அந்த வரி.... ' காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து....' மூச்சின் செயல்பாடே வாழ்க்கை என்று விளக்கும் இந்த நாவல் படித்து வளர்ந்த எனக்கு 'ஸ்ரீ எம்' அவர்களின் இவ்விரு நூல்களான 'இமயகுருவின் இதய சீடன்' மற்றும் 'பயணம் தொடர்கிறது' என்ற இரண்டு நூல்களும் சமீபத்தில் வாசிக்க கிடைத்தது. இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்காக அவதரித்த ஷீரடி சாய்பாபாவை இன்று பல இந்து அமைப்புகள் எதிர்ப்பதும், அவரை முஸ்லீம் என அடையாளப்படுத்துவதையும் இன்று...