விசிறி சாமியாருடன் ஸ்ரீ எம்.
விசிறி சாமியாருடன் ஸ்ரீ எம் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்த்துமே, ஃபங்க்கா பாபா என்றும், விசிறி சாமியார் என்றும் அழைக்கப்பட்ட யோகி ராம்சுரத்குமார் அவர்களைத் தேடினேன். காஞ்சியில் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் இந்த விசிறி சாமியார் குழந்தை போலப் பழகுவதாகவும், அடிக்கடி பைத்தியக்காரர் போல நடந்து கொள்வதாகவும் கூறி இருந்தார். அவர் ஒரு காலத்தில் வட இந்தியாவில் எங்கோ ஒரு பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார் என்றும், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளை நன்றாக அறிந்தவர் என்றும் கூறியிருந்தார். அவரைக் கோவிலின் தேர் இருந்த இடத்துக்கு அருகில் சிறியதொரு குடிசையில் கண்டு பிடித்தேன். சிலர் அவரைச் சுற்றி நின்றிருந்தனர். அவர் அழகாகவும், பருத்தும், நீளமான சாம்பல் நிற முடியும், சாம்பல் நிற தாடியும் கொண்டிருந்தார். வேஷ்டி கட்டிக் கொண்டு, பல மாதங்களாகத் தோய்க்கப்படாத வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட ஒரு கோட்டையும் அணிந்து இருந்தார். என்னை அவர் உள்ளிருந்து கூர்ந்து பார்த்து கையை ஆட்டினார். " வா, வா....! இங்கே உட்கார்....! " என்று அன்பான தெ...