இறையுணர்தலின் வனங்களில் - 5 - உண்மையான சுயம்

உ யோகி ராம்சுரத்குமார் சுவாமி ராமதீர்த்தரின் ஆங்கில கட்டுரைகள் கொண்ட 7 தொகுதி நூல்களின் தமிழ் மொழிப்பெயர்ப்பு இறையுணர்தலின் வனங்களில் By உண்மையான சுயம் சான் பிரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் ஹால் – ல் ஜனவரி 7, 1903 ல் ஆற்றப்பட்ட விரிவுரை. அனைத்து வல்லமையும் பெற்ற இறையின் வடிவமாயிருக்கும் பெண்மணிகள் மற்றும் கனவான்களே, ஜெர்மனியின் நாட்டுப்புறக் கதைகளில் ஒன்றில் ஒரு மனிதன் அவனது நிழலையே தொலைத்த கதையை நாம் கேட்டிருக்கிறோம் அது மிகவும் விசித்திரமானது. தனது நிழலை தொலைத்த மனிதன் அதற்காக வருந்த அவனது நண்பர்களும் அவனை கைவிட்டு விலகினர். அவனது எல்லா வளங்களும் அவனிடமிருந்து நகர்ந்தன. அவனும் மிகுந்த துக்கத்தில் இருந்தான். தனது நிழலின் இழப்பிற்காக தனது அனைத்து பொருள்களையும் இழக்கும் ஒருவனைப்பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள் ? நிழலை இழக்கும் மனிதனுக்கு கூட சில நம்பிக்கைகள் இருக்கக்கூடும். ஆனால் தனது பொருள்களை இழக்கும் ஒருவனுக்கு என்ன நம்பிக்கை இருக்கும் ? இந்த உடல் மீதா ?. இந்த உலகில் பெரும்பான்மையான மக்கள் இவ்விதமாகவே இருக்கிறார்கள். பெரும்பாலான மனிதர்கள் தங்கள் நிழலினை இழக்...