Posts

Showing posts from January, 2021

இறையுணர்தலின் வனங்களில் - 2 - சுயத்தின் விரிவாக்கம்

Image
  உ யோகி ராம்சுரத்குமார் சுவாமி ராமதீர்த்தரின் 7 தொகுதி ஆங்கில கட்டுரைகளின்  நூலின்    தமிழ்மொழிப்பெயர்ப்பு  By  சரஸ்வதி சுவாமிநாதன்  சுயத்தின் விரிவாக்கம் அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவின் அகாடமி ஆஃப் சயின்ஸ் – ல் டிசம்பர் 16, 1902 ல் ஆற்றப்பட்ட விரிவுரை. எனது சுயத்தின் வடிவமாயிருக்கும் பெண்மணிகள் மற்றும் கனவான்களே,  இன்றிரவு நாம் சுயத்தின் விரிவாக்கம் குறித்து சிறிது கேட்க இருக்கிறோம். நீங்கள் வாழ்க்கையின் அளவுகள் , ஆன்மீக முன்னேற்றத்தின் நிலைகள்  அல்லது இந்த தலைப்பை சுயநலத்தின் தூய்மையாக்கும் அளவுகள் என்றும் நீங்கள் அழைக்கலாம். ஒருவேளை இதன்மூலம் கிடைக்கும் முடிவுகள் உங்களை திடுக்கிடவும் வைக்கலாம்.  வட்டங்கள்   உங்கள் முன் இருக்கும் படத்தில் ஒரு நேர்கோடும், சில வட்டங்களும் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள்.  “ இதன் பயன்கள் என்ன ? இந்த வட்டங்கள் சுயத்தின் விரிவாக்கத்திற்கு என்ன செய்யும் ?” என்றும் நீங்கள் வினவக்கூடும். சிலர் தங்கள் இதயங்களில் இவைகள் வட்டங்களே அல்ல என்றும் கூறக்கூடும். அவைகளை வளைந்த நீள்வட்டங்கள் என்றும் கூறலாம்...

இறையுணர்தலின் வனங்களில் - 1 - உள்ளே மகிழ்ச்சி

Image
உ யோகி ராம்சுரத்குமார் சுவாமி ராமதீர்த்தரின் 7 தொகுதி ஆங்கில கட்டுரைகளின்  நூலின்    தமிழ்மொழிப்பெயர்ப்பு  By  சரஸ்வதி சுவாமிநாதன்  இறையுணர்தலின் வனங்களில் சத்தியம் உனது பிறப்புரிமை. அதனை  வலியுறுத்தி இந்த பிரபஞ்சத்தின் தலைவனாயிரு. சத்தியத்தின் உருமாற்றம் - அது நீதான்.  - ராமா தொகுதி – 1 சுவாமி ராமதீர்த்தரின் முழுமையான தொகுப்பு  ராமாவின் வாக்குறுதி பல ஆன்மாக்களின் மூலமாக பணிபுரிந்தோ அல்லது தனித்து செயல் புரிந்தோ , ராமா மிகத்தீவிரமாக தனது சத்திய வாழ்வை உட்புகுத்தி இன்னும் பத்து வருடங்களுக்குள் இருள் மற்றும் பலவீனத்தை இந்தியாவில் இருந்து அகற்றுவதாக வாக்குறுதியளிக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதிக்குள், இந்தியா அதன் அசலான மகிமையைவிட கூடுதலான மகிமையோடு மீட்டெடுக்கப்படும். இந்த வார்த்தைகள் பதிவு செய்யப்படட்டும். சுவாமி ராமதீர்த்தர்  ஜனவரி 1, 1900 ராமா ஒரு அத்வைதி தற்சமயம் பாகிஸ்தானில் உள்ள கிராமமான முராரிவாலா ( பஞ்சாப் ) என்ற தொலைதூர கிராமத்தில் 1873 ல் அக்டோபர் 22 ஆம் தேதி பிறந்து தீர்த்த ராமா என்ற  முன்பு அழைக்கப்பட்டவரே சுவாமி ...

'ஹிந்து' என்ற வார்த்தையின் மூலம் - பகுதி - 5

Image
                                                'ஹிந்து' என்ற வார்த்தையின் மூலம்     ஆங்கில மூலம்  :  பிரேம்நாத் மகாஜனி . தமிழாக்கம்  :  சரஸ்வதி சுவாமிநாதன் அத்தியாயம் - 5  சமஸ்கிருத இலக்கியம்  சமஸ்கிருதத்திற்கு முன்பே பிராகிருதமே வழக்கு மொழியாக இருந்தது , அதிலிருந்தே ‘ ஹிந்து' என்ற தற்கால வார்த்தை தோன்றியது . பிராகிருதத்திற்கும் வேத சமஸ்கிருத மொழிக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு . பவிஷ்ய மஹாபுராணம் முதல் அத்தியாயம் , பாடல் 5 - ல் சமஸ்கிருதமே காலம் கடந்த இந்தியாவின் மொழியாக இருந்து வந்தது என்பதைக் குறிப்பிடுகிறது . உலகத்தின் பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் பகுதிகளில் மக்கள் இந்த மொழியை கடன்பெற்றிருந்தனர் . “ தந்தை ”, “ தாத்தா ”, “ சகோதரன் ”, “ கணவன் ” போன்ற வார்த்தைகளின் வேர்களும் இம்மொழியில் உண்டு . அதேபோல் “ ஜெயின் ” என்ற வார்த்தையின் வேர் “ செயின் ” ( Sain )   என்பதிலும் , “ சஃப்டா சிந்து ” ( ஏழுகடல் அல்லது ஏழு ...