Posts

Showing posts from February, 2021

இறையுணர்தலின் வனங்களில் - 4 - மனதின் சுவரில் சுயத்தின் சூரியன்

Image
உ  யோகி ராம்சுரத்குமார்  சுவாமி ராமதீர்த்தரின் ஆங்கில கட்டுரைகள் கொண்ட 7 தொகுதி நூல்களின் தமிழ் மொழிப்பெயர்ப்பு இறையுணர்தலின் வனங்களில் By  சரஸ்வதி சுவாமிநாதன்  மனதின் சுவரில் சுயத்தின் சூரியன் சான் பிரான்சிஸ்கோவின் கோல்டன்  கேட் ஹால் – ல் ஜனவரி  12, 1903 ல் ஆற்றப்பட்ட விரிவுரை. மாறாததின் வடிவமாயிருக்கும் பெண்மணிகள் மற்றும் கனவான்களே, இன்றைய இரவின் சொற்பொழிவின் தலைப்பு மாறக்கூடியதிலிருக்கும் மாறாதது.  துவங்கும் முன், ராமாவிடம் தொடர்ந்து முன் வைக்கப்படும் சில கேள்விகளுக்கான விடையைப் பற்றி ஒருசில வார்த்தைகள் பேசுவோம். நீங்கள் அணிந்திருக்கும் உடையின் வண்ணத்தின் முக்கியத்துவம் என்ன ?  ஏன் பௌத்தர்கள் மஞ்சள் நிற ஆடைகளை உடுத்துகின்றனர் ?  வேதாந்த சாதுக்கள் அல்லது சுவாமிகள் செந்நிற உடைகளை ஏன்  அணிந்திருக்கின்றனர் ?  ஒவ்வொரு மதத்திற்கும் மூன்று அம்சங்கள் உண்டு. ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு தத்துவம், ஒரு புராணம் மற்றும் அதன் சடங்கு போன்றவை உண்டு. தத்துவங்கள் இல்லாமல் எந்த மதமும் நிற்க இயலாது. அப்போதுதான் அது கற்ற, அறிவார்ந்த, பகுத்தறிவு கொண்ட மக்...

திரு. பெருமாள் சடையன் எனும் 'விதையின் உயிர்ப்பு'

Image
திரு. பெருமாள் சடையன் அவர்களின் நினைவு நாள் மீள் பதிவு.  சிவனணைந்த பெருமாள் - ஒரு அறிமுகம்  1966 ஆம் ஆண்டு சிவனணைந்த பெருமாள் சடையன் என்பவர் யோகிராம்சுரத்குமாருடன் தொடர்பில் வந்தார். இவர் நாடார் இனத்தைச் சேர்ந்தவர். முத்துக்குட்டி சாமி என்ற பெயரில் கன்னியாக்குமரியில் 300 ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒருவரை வழிபடுபவர். நமது பெருமாள் சடையனும் நாடார் இனத்தை சேர்ந்தவர் ஆவார். அவர் தாமரைக்குளத்தில் பிறந்து திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். அவர் ஒரு பித்தளை பாத்திர வியாபாரி. ராஜகோபுரத்திற்கு எதிரே இருந்துள்ளது இவரது கடை. அவருக்கு இயல்பிலேயே சாதுக்களுக்கும் சன்னியாசிகளுக்கும் உதவும் உள்ளமும் பக்தியும் இருந்து வந்துள்ளது.  பெருமாள் சடையனை முதல் பார்வையில் வசீகரித்த யோகியார், அவர் கடைக்கு அவ்வப்போது செல்வதை வழக்கமாக கொண்டார். அவர் எங்கு அழைத்தாலும் அவரைப் பின் தொடர்வது பெருமாளின் வழக்கமானது. தன் வீட்டில் இருந்து வரும் உணவை இருவரும் பகிர்ந்து கடையிலேயே அமர்ந்து உண்டனர்.  பெருமாளின் கவனம் மெல்ல வியாபாரத்தில் இருந்து நழுவி யோகிராம்சுரத்குமார் பக்கம் நகர்ந்தது. ஒரு கட்டத்தில் கடையையே மூட ...

இறையுணர்தலின் வனங்களில் - 3 - வரையறுக்கப்பட்டதிலிருக்கும் எல்லையற்ற தன்மை

Image
  உ  யோகி ராம்சுரத்குமார்  சுவாமி ராமதீர்த்தரின் 7 தொகுதி ஆங்கில கட்டுரைகளின்  நூலின்    தமிழ்மொழிப்பெயர்ப்பு  By சரஸ்வதி சுவாமிநாதன்  வரையறுக்கப்பட்டதிலிருக்கும் எல்லையற்ற தன்மை சான் பிரான்சிஸ்கோவின் க்ரேட் கோல்டன் ஹால் – ல்  ஜனவரி  10, 1903 ல் ஆற்றப்பட்ட விரிவுரை. எல்லையற்ற ஒன்றின் வடிவமாயிருக்கும் பெண்மணிகள் மற்றும் கனவான்களே,  இந்த விஷயத்தை துவங்கும் முன் ,  நான் இந்த உலகத்தின் அன்பான பார்வையாளர்களிடம் சில வார்த்தைகள் பேசவேண்டும்.   மக்கள் பொதுவாக தங்களின் சொந்த காதுகளின் மூலமாக எதையும் கேட்பதில்லை, மற்றவர்களின் காதுகளின் வழியே மட்டுமே இங்கே அனைத்தும் கேட்கப்படுகிறது. அவர்கள் தங்களின் கண்களின் மூலம் எதையும் காணாமல் நண்பர்களின் கண்களின் வழியே காண்கின்றனர். அவர்கள் தங்கள் சுவைகளையும் தங்களின் சுவை மூலம் அறியாமல் அடுத்தவர்களின் சுவைகளின் மூலமே அறிகின்றனர். இது எவ்வளவு நியாயமற்றது ! இவ்வுலக மனிதர்களே , இனி கேட்பதற்கு உங்களுக்கு சொந்தமான காதுகளைப் பயன்படுத்துங்கள், அனைத்து சந்தர்ப்பங்களிலும் உங்களுக்கு சொந்தமான கண்களைப...