புண்ணியம் செய்து புகுந்தேனோ ?

யோகிராம்சுரத்குமார் விசிறிசாமியார் என்ற பாலகுமாரன் கவிதை/கதைத்தொகுப்பு அதில்... //பாவிகளை என்னிடம் வரவிடுங்கள் அவர்களிடம் பரிவோடு இருக்க ஆசைப்படுகிறேன் என்றார் ஏசு... என்னையும் நீ அழைத்தாய் பாவி என்பதாலா ? புண்ணியம் செய்து புகுந்தேனா?// இதை இன்று படிக்கையில் அவரின் விஷாத மனமும் அவரின் விசார மனமும் ஆச்சரியம் தரும். ஆனால் எனக்கோ இன்றும் இதே கேள்வி உண்டு. உருவம் இன்றி அருவம் தொட இயலாது. திசை நோக்கி தொழுவதும் ஒரு வகையான உருவ வழிபாடே.... யோகியின் சிலை ஒன்று வீட்டிற்கு வரவேண்டும் என்பது என் நெடுநாள் அவா...அதற்காக நான் முயற்சித்தப்போது கிடைக்காத ஒன்று. முகநூல் நண்பர் மாம்பலம் விஸ்வநாதன் மூலம் எனக்கு ஒரு தொடர்பு எண் கிடைத்தது. சரஸ்வதியிடம் கேட்டேன். உன் இஷ்டம் உன்னால அதை வைத்து ஒழுங்கா பூஜை செய்ய முடியும்னா சரி என்றாள். மீண்டும் குழப்பம். அய்யன் பாலகுமாரன் அவர் மகன் சூர்யாவின் திருமண நிகழ்வுகளாக பதிவேற்றியவாறு இருக்க.... என் கேள்வி யோகியோடு...என் வீடு உன் விக்ரகம் தாங்குமா....எனக்கு தகுதியுண்டா.... இது அனைத்தும் ஏப்ரல் - 5 இரவில்... கேள்விகள் தின்ன உறங்கிப்போன...