Posts

Showing posts from May, 2015

புண்ணியம் செய்து புகுந்தேனோ ?

Image
யோகிராம்சுரத்குமார் விசிறிசாமியார் என்ற பாலகுமாரன் கவிதை/கதைத்தொகுப்பு அதில்... //பாவிகளை என்னிடம் வரவிடுங்கள் அவர்களிடம் பரிவோடு இருக்க ஆசைப்படுகிறேன் என்றார் ஏசு... என்னையும் நீ அழைத்தாய் பாவி என்பதாலா ? புண்ணியம் செய்து புகுந்தேனா?// இதை இன்று படிக்கையில் அவரின் விஷாத மனமும் அவரின் விசார மனமும் ஆச்சரியம் தரும். ஆனால் எனக்கோ இன்றும் இதே கேள்வி உண்டு. உருவம் இன்றி அருவம் தொட இயலாது. திசை நோக்கி தொழுவதும் ஒரு வகையான உருவ வழிபாடே.... யோகியின் சிலை ஒன்று வீட்டிற்கு வரவேண்டும் என்பது என் நெடுநாள் அவா...அதற்காக நான் முயற்சித்தப்போது கிடைக்காத ஒன்று. முகநூல் நண்பர் மாம்பலம் விஸ்வநாதன் மூலம் எனக்கு ஒரு தொடர்பு எண் கிடைத்தது. சரஸ்வதியிடம் கேட்டேன். உன் இஷ்டம் உன்னால அதை வைத்து ஒழுங்கா பூஜை செய்ய முடியும்னா சரி என்றாள். மீண்டும் குழப்பம். அய்யன் பாலகுமாரன் அவர் மகன் சூர்யாவின் திருமண நிகழ்வுகளாக பதிவேற்றியவாறு இருக்க.... என் கேள்வி யோகியோடு...என் வீடு உன் விக்ரகம் தாங்குமா....எனக்கு தகுதியுண்டா.... இது அனைத்தும் ஏப்ரல் - 5 இரவில்... கேள்விகள் தின்ன உறங்கிப்போன...

திருப்பம் தந்த திருப்பட்டூர்

Image
யோகிராம்சுரத்குமார் "அவன் அருளாலே அவன் தாள் பற்றி..." என்பது மிக சத்தியமான வார்த்தை. பிரம்மா கோவில் போகணும் என்று சொல்ல தெரியும் என்ற டாக்ஸி டிரைவர் சமயபுரம் சென்று "மிஸ் பண்ணீட்டேங்க முடிச்சிட்டு வாங்க போயிடலாம் "என்று சொல்ல நான், சரஸ்வதி ,ராம்குமார் , சசிதரன் நால்வரும் சமயபுரம் சென்று திருப்பட்டூர் வர நடை சார்த்தப்பட்டது. மணி 12.10 pm. ஸ்ரீரங்கம் திரும்பினோம் இது சென்ற வருட சித்திரை மாதம. ஏப்ரல் 30 இரவு ஏழு மணி. எக்மோர் வந்துடு...சசி...சிறுகனூர் எறங்கிட்டு அப்புறம் திருச்சி போகலாம் டிராவல்ஸ் தானே நிறுத்த சொல்லலாம். சரி ஆபிஸ்ல் இருந்து கிளம்பிட்டேன் இது சசி. இரவு எட்டு மணி. தங்கச்சிக்கு பிரஷர் அதிகமாயிடுச்சு. அதனால் நாளைக்கு சிசேரியன். ஆஸ்ப்பிட்டல் போகணும் சாரி என்னால் வரமுடியாது மீண்டும் சசி. தனியே துவங்கியது என் திருப்பட்டூர் பயணம். இது என்ன திருப்பட்டூர். யார் சொன்னார்கள். அய்யன் பாலகுமாரன் அறிமுகம் மூலம் நான். அறிந்தவர். ராம்ஜி வெங்கட்ராமன் அவரின் நூல் தந்த அறிமுகம் திருப்பட்டூர். மே 1- 2015. காலை 5.50. சிறுகனூர் வெளியே வாங்க என்று ...