திருப்பம் தந்த திருப்பட்டூர்
யோகிராம்சுரத்குமார்
"அவன் அருளாலே அவன் தாள் பற்றி..." என்பது மிக சத்தியமான வார்த்தை. பிரம்மா கோவில் போகணும் என்று சொல்ல தெரியும் என்ற டாக்ஸி டிரைவர் சமயபுரம் சென்று "மிஸ் பண்ணீட்டேங்க முடிச்சிட்டு வாங்க போயிடலாம் "என்று சொல்ல நான், சரஸ்வதி ,ராம்குமார் , சசிதரன் நால்வரும் சமயபுரம் சென்று திருப்பட்டூர் வர நடை சார்த்தப்பட்டது. மணி 12.10 pm.
ஸ்ரீரங்கம் திரும்பினோம் இது சென்ற வருட சித்திரை மாதம.
ஏப்ரல் 30 இரவு ஏழு மணி.
எக்மோர் வந்துடு...சசி...சிறுகனூர் எறங்கிட்டு அப்புறம் திருச்சி போகலாம் டிராவல்ஸ் தானே நிறுத்த சொல்லலாம்.
சரி ஆபிஸ்ல் இருந்து கிளம்பிட்டேன் இது சசி.
இரவு எட்டு மணி.
தங்கச்சிக்கு பிரஷர் அதிகமாயிடுச்சு. அதனால் நாளைக்கு சிசேரியன். ஆஸ்ப்பிட்டல் போகணும் சாரி என்னால் வரமுடியாது மீண்டும் சசி.
தனியே துவங்கியது என் திருப்பட்டூர் பயணம்.
இது என்ன திருப்பட்டூர். யார் சொன்னார்கள். அய்யன் பாலகுமாரன் அறிமுகம் மூலம் நான். அறிந்தவர். ராம்ஜி வெங்கட்ராமன் அவரின் நூல் தந்த அறிமுகம் திருப்பட்டூர்.
மே 1- 2015.
காலை 5.50.
சிறுகனூர் வெளியே வாங்க என்று டிராவல்ஸ் கிளீனர் குரல் கொடுக்க இறங்கினேன்.
நெடுஞ்சாலை கடந்து எதிர்சாரி வர...கோயிலுக்கு ஆட்டோ என்று ஒருவர் வந்தார். அம்பது ரூபாய். முன்னூறு ரூபாய் நான்கு கோயில் சுற்றிய பிறகு மீண்டும் நெடுஞ்சாலை வர சரியென சொல்லி கண்ணன் என்ற டிரைவரோடு புறப்பட்டேன்.
விதியை மாற்றும் தலத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வரவில்லை என்று சொல்லப்பட்டாலும்....அவர் அமைத்து தந்த இலவச கழிவறை...குளியலறை என்னை புத்துணர்வாக்க....அவர் கட்டமைத்த தங்கும் அறை என் ஸ்மார்ட் போனுக்கு கண்ணன் பாதுகாப்பில் 100℅ புத்துணர்வு பெற்றது.
துண்டு ஆம்னி வேன் மீது சுருக்கிட்டு காயவைத்து பயணம் தொடங்கியது.
முதல் கோவில் என அவர் காட்டியது.
காசி விஸ்வநாதர் ஆலயம். குரு என்பவர் உங்களை மாற்றும் முன் உங்களை சில அதிர்வு மிக்க இடங்களுக்கு அனுப்புதல் மண்ணை மேலும் குழைவாக்கும் செயல் என்றே தோன்றுகிறது.
அது நானும் நண்பன் குமரவேல்...ரவிசங்கர் எல்லோரும் கடலூர் சென்ற நேரம் அப்போது திருபாதிரிபுலியூர் என்று பெயர் கேட்டு விசாரிக்க பல ஊர்களின் பெயர்கள் புலியூர் என முடிவதையும் அந்த ஊர் பெயர் அவ்விதம் முடிய காரணம் புலியின் கால்களை கொண்ட வியாக்ரபாதர் என்பவரின் வழிபாடு என்று அறிந்தோம்.
அந்த வியாக்ரபாதரின் பிருந்தாவனம் அமைந்த இடம் இந்த காசி விசுவநாதர் ஆலயம். நல்ல அதிர்வுகள் மன ஒருமைப்பாடு என சில நிமிடங்கள் அமர ஏற்ற இடம். அந்த பிருந்தாவனம் இனிய முறையில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அதில் தசாவதார காட்சிகள் செதுக்கப்பட்டிருக்கிறது. அபிஷேக நேரத்தில் செல்ல ரசிக்கலாம். பிரகார சுவர்களில் பல கால கலப்புகளுடன் சிற்பங்கள் அதன் தொன்மையையும் நம் இன்றைய சிதைக்கும் மனநிலையையும் காட்டுகிறது.
வெளி கோபுரத்தில் இரண்டு உடும்பு சிறபம் கதையோ...காரணமோ இதற்கு இருக்ககூடும்.
அடுத்து விதியை மாற்றும் பெருமாள் என்ற கோயிலுக்கு அழைத்துச் சென்றார் காரோட்டி கண்ணன். உள்ளே நுழையும் போதே திறந்தவெளிப்பிராகாரத்தில் வரவேற்றது பல்லவர்கால பெருமாள்...எனக்கேனோ....அந்த அலங்காரங்கள் தாண்டி பின்னங்கள் எதுவும் தென்படவில்லை ஆயினும் வீதியில் நிற்கும் அந்த விதியை மாற்றும் பெருமாள்...பிரயோகசக்ரதாரியாக இருக்கும் அவர் விரைவில் தன் பிரயோஜனம் காட்டும் காலம் கனியும் என்று தோன்றியது. காலை எட்டு மணி வெயிலே தாளாத கரிய நிற அந்த அர்சசகர் பெருமாளுக்காக கை ஏந்தியது நான் கண்ட முதல் வறிய பெருமாள் கோயிலாக தோன்றியது.
அடுத்து பிரம்மா கோவில் பார்த்துட்டு பொறுமையாக வாங்க நான் இங்கே கண் அயர்கிறேன் என்று கண்ணன் சொன்னதின் அர்த்தம் வெளியே வர ஆன நேரத்தில் புரிந்தது.
நாயக்கர் கால நெடிதுயர்ந்த நுணுக்கமான சிற்பங்கள் கடந்து மூலவர் பிரம்மபுரீஸ்வரர் தரிசனம் பெற்று பிரம்மாவிடம் ஜாதகம் வைத்தோ....வெறும் அர்ச்சனை செய்தோ... மஞ்சள் பெற்று திரும்பி அவசரமாக பிரகாரத்தில் ஓடாதீர்கள்.
உங்கள் இடப்புறத்தில் ஒரு கண்ணாடி கதவுடன் கூடிய மண்டபம் இருக்கும் அதனுள் சென்று அமருங்கள் அதுவே பதஞ்சலி முனிவர் ஜீவசமாதி அது என்ன ஜீவசமாதி...லிங்கம் வைத்த இடத்தில் எவரேனும் அடங்கியிருப்பின் அது ஜீவசமாதி. அருகே இருக்கும் பாதாளலிங்கம் இங்கு ஜீவசமாதி இருப்பதை உறுதி செய்கிறது.
பிரம்மாவின் தரிசனம் உங்கள் விதியை மாற்றும் என்பது ...இந்த ஜீவசமாதியும் உங்கள் சுவாசம் மற்றும் உடலின் யோக பயிற்சிகள் உங்கள் விதியை மதியை மாற்றும் என்பது உறுதி அதன் ஆரம்பமாகவே இந்த பிரம்மா வழிபாடு இருந்திருக்ககூடும்.
பிரம்மதீர்த்தம் வர...எங்கே எங்கே என்று பரிதவித்து மனம் கைலாசநாதர் கோவிலை தேடியது.
பார்வை நின்ற இடத்தில் அட பல்லவர்காலத்து மணல்கற்கள் காலம் கடந்து நிற்கிறதே என்று ஆச்சரியம் நெருங்க நெருங்க அதன் அழிவை கண்டு மருகியது.
நந்தி இல்லாமல் இறை தரிசனம் இல்லை அதுபோல பீனியல் க்ளாண்ட் என்பதன் உருவகமான பல்லவ நந்தி எப்படி இருக்கும் தெரியுமா ?
அது என்ன நந்தி முன்னால் கற்கள் அடுக்கப்பட்டிருக்கிறதே அட இன்றைய மனி(ப)தர்களின் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடு உழைப்பற்ற அலையல்.
மீ பாவம் என்ற பாவத்தில் நந்தி.
கைலாசநாதர் ஆலயத்தின் அனைத்து sand stone ன் அற்புதங்கள் உங்களை அசத்துவது போல் அதன் அழிவும் உங்களை அசைக்கும் இதை விரிவாக எழுதுவதை விட....
Few pictures are better than thousand words....
திரும்பும் முன் இன்னொரு சிற்பம் இது யார் சாஸ்தாவா ?
மகிழ மரத்தடியில் இன்னொரு நந்தி...மீ டூ என்றது.
கடைசியாக சுந்தரர் அவர் தோழர் சேரமான் எழுதிய திருக்கயிலாய ஞானஉலா அரங்கேறிய கோவில் வந்தோம். பேனா வாங்குங்கள் நோட்டுபுக் வாங்குகங்கள் என்ற வழிமறிப்புகளை கடந்து உள்ளே செல்ல அதன் பழமை உங்களை வரவேற்கும்.
உலா என்பதில் பெண்ணின் ஏழு பருவங்கள் பற்றிய இலக்கியம் என்ற பள்ளிப்பாடம் நினைவிற்கு வர...
என் தாய் ,மனைவி, மகள், மற்றும் சில என்னை வழிநடத்திய பேரிளம் பெண்கள் நினைவிற்கு வந்தனர்.
சாஸ்தாவே அய்யனார் ஆனால் கையில் கத்தி அரிவாள் இல்லை ஓலைச்சுவடி.
மகளுக்காக மகனுக்காக அவள் மற்றும் அவன் வாரிசிற்கென என பிரார்த்தனை செய்து திரும்பினேன்.
அங்கு வந்திருந்த ஒரு தம்பதியினர் மகனுக்கென யானை முன் உள்ள சிதறுகாய் அடித்து அங்குள்ள பலகணி வழியே அய்யானாரை பார்த்து இனிமேல் செல்லம் சூப்பரா படிப்பே என்று சொல்லி அவன் கன்னம் கிள்ள...
நம்பிக்கை அதானே எல்லாம் என்று தோன்றியது.
இந்த யானையின் நான்கு தூண்களும் சுவர்களும் வெவ்வேறு கால கல்வெட்டுகளை காட்டுகிறது ஆனால் அதை நாம் வெளிச்சம் இட்டு அதன் அடித்தளம் வலுவாக்கி அந்த தூண்களை இருட்டாக்கி வரலாறு காட்டும் நம் பகீரதபிரயத்தனங்கள்.
தம்பி இத்தோட திருப்பட்டூர் கோவில் நாலும் முடியுதுங்க....சிறுகனூர் விடறேங்க ரோடு கிராஸ் செய்து ஸ்ரீரங்கம் பஸ் பிடிங்க என்றார்.
நான் பிரம்மா கோவிலை பார்க்க காத்திருந்த தருணங்களை அசைப்போட்டேன்.
என் மகள் போன்ற திவ்யாராம்மூர்த்தி ஒரு மகளுக்கு தாயானாள் என்ற செய்தி வர வாழ்த்துக்கள் என்றேன்...அவர்களின் காத்திருப்பு மகளாய் அவர்கள் கரங்களில்....
பிரம்மன் படைப்பை...பிறப்பை உடனிருந்து முதலில் ரசித்த மகிழ்வில் பலர்.
தனியே திருப்பத்திற்கு காத்திருக்கும் நான்...
பயணங்கள் முடிவதில்லை தனித்திருப்பினும்...
யோகிராம்சுரத்குமார்
யோகிராம்சுரத்குமார்
யோகிராம்சுரத்குமார்
ஜெயகுருராயா.
"அவன் அருளாலே அவன் தாள் பற்றி..." என்பது மிக சத்தியமான வார்த்தை. பிரம்மா கோவில் போகணும் என்று சொல்ல தெரியும் என்ற டாக்ஸி டிரைவர் சமயபுரம் சென்று "மிஸ் பண்ணீட்டேங்க முடிச்சிட்டு வாங்க போயிடலாம் "என்று சொல்ல நான், சரஸ்வதி ,ராம்குமார் , சசிதரன் நால்வரும் சமயபுரம் சென்று திருப்பட்டூர் வர நடை சார்த்தப்பட்டது. மணி 12.10 pm.
ஸ்ரீரங்கம் திரும்பினோம் இது சென்ற வருட சித்திரை மாதம.
ஏப்ரல் 30 இரவு ஏழு மணி.
எக்மோர் வந்துடு...சசி...சிறுகனூர் எறங்கிட்டு அப்புறம் திருச்சி போகலாம் டிராவல்ஸ் தானே நிறுத்த சொல்லலாம்.
சரி ஆபிஸ்ல் இருந்து கிளம்பிட்டேன் இது சசி.
இரவு எட்டு மணி.
தங்கச்சிக்கு பிரஷர் அதிகமாயிடுச்சு. அதனால் நாளைக்கு சிசேரியன். ஆஸ்ப்பிட்டல் போகணும் சாரி என்னால் வரமுடியாது மீண்டும் சசி.
தனியே துவங்கியது என் திருப்பட்டூர் பயணம்.
இது என்ன திருப்பட்டூர். யார் சொன்னார்கள். அய்யன் பாலகுமாரன் அறிமுகம் மூலம் நான். அறிந்தவர். ராம்ஜி வெங்கட்ராமன் அவரின் நூல் தந்த அறிமுகம் திருப்பட்டூர்.
மே 1- 2015.
காலை 5.50.
சிறுகனூர் வெளியே வாங்க என்று டிராவல்ஸ் கிளீனர் குரல் கொடுக்க இறங்கினேன்.
நெடுஞ்சாலை கடந்து எதிர்சாரி வர...கோயிலுக்கு ஆட்டோ என்று ஒருவர் வந்தார். அம்பது ரூபாய். முன்னூறு ரூபாய் நான்கு கோயில் சுற்றிய பிறகு மீண்டும் நெடுஞ்சாலை வர சரியென சொல்லி கண்ணன் என்ற டிரைவரோடு புறப்பட்டேன்.
விதியை மாற்றும் தலத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வரவில்லை என்று சொல்லப்பட்டாலும்....அவர் அமைத்து தந்த இலவச கழிவறை...குளியலறை என்னை புத்துணர்வாக்க....அவர் கட்டமைத்த தங்கும் அறை என் ஸ்மார்ட் போனுக்கு கண்ணன் பாதுகாப்பில் 100℅ புத்துணர்வு பெற்றது.
துண்டு ஆம்னி வேன் மீது சுருக்கிட்டு காயவைத்து பயணம் தொடங்கியது.
முதல் கோவில் என அவர் காட்டியது.
காசி விஸ்வநாதர் ஆலயம். குரு என்பவர் உங்களை மாற்றும் முன் உங்களை சில அதிர்வு மிக்க இடங்களுக்கு அனுப்புதல் மண்ணை மேலும் குழைவாக்கும் செயல் என்றே தோன்றுகிறது.
அது நானும் நண்பன் குமரவேல்...ரவிசங்கர் எல்லோரும் கடலூர் சென்ற நேரம் அப்போது திருபாதிரிபுலியூர் என்று பெயர் கேட்டு விசாரிக்க பல ஊர்களின் பெயர்கள் புலியூர் என முடிவதையும் அந்த ஊர் பெயர் அவ்விதம் முடிய காரணம் புலியின் கால்களை கொண்ட வியாக்ரபாதர் என்பவரின் வழிபாடு என்று அறிந்தோம்.
அந்த வியாக்ரபாதரின் பிருந்தாவனம் அமைந்த இடம் இந்த காசி விசுவநாதர் ஆலயம். நல்ல அதிர்வுகள் மன ஒருமைப்பாடு என சில நிமிடங்கள் அமர ஏற்ற இடம். அந்த பிருந்தாவனம் இனிய முறையில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அதில் தசாவதார காட்சிகள் செதுக்கப்பட்டிருக்கிறது. அபிஷேக நேரத்தில் செல்ல ரசிக்கலாம். பிரகார சுவர்களில் பல கால கலப்புகளுடன் சிற்பங்கள் அதன் தொன்மையையும் நம் இன்றைய சிதைக்கும் மனநிலையையும் காட்டுகிறது.
வெளி கோபுரத்தில் இரண்டு உடும்பு சிறபம் கதையோ...காரணமோ இதற்கு இருக்ககூடும்.
அடுத்து விதியை மாற்றும் பெருமாள் என்ற கோயிலுக்கு அழைத்துச் சென்றார் காரோட்டி கண்ணன். உள்ளே நுழையும் போதே திறந்தவெளிப்பிராகாரத்தில் வரவேற்றது பல்லவர்கால பெருமாள்...எனக்கேனோ....அந்த அலங்காரங்கள் தாண்டி பின்னங்கள் எதுவும் தென்படவில்லை ஆயினும் வீதியில் நிற்கும் அந்த விதியை மாற்றும் பெருமாள்...பிரயோகசக்ரதாரியாக இருக்கும் அவர் விரைவில் தன் பிரயோஜனம் காட்டும் காலம் கனியும் என்று தோன்றியது. காலை எட்டு மணி வெயிலே தாளாத கரிய நிற அந்த அர்சசகர் பெருமாளுக்காக கை ஏந்தியது நான் கண்ட முதல் வறிய பெருமாள் கோயிலாக தோன்றியது.
அடுத்து பிரம்மா கோவில் பார்த்துட்டு பொறுமையாக வாங்க நான் இங்கே கண் அயர்கிறேன் என்று கண்ணன் சொன்னதின் அர்த்தம் வெளியே வர ஆன நேரத்தில் புரிந்தது.
நாயக்கர் கால நெடிதுயர்ந்த நுணுக்கமான சிற்பங்கள் கடந்து மூலவர் பிரம்மபுரீஸ்வரர் தரிசனம் பெற்று பிரம்மாவிடம் ஜாதகம் வைத்தோ....வெறும் அர்ச்சனை செய்தோ... மஞ்சள் பெற்று திரும்பி அவசரமாக பிரகாரத்தில் ஓடாதீர்கள்.
உங்கள் இடப்புறத்தில் ஒரு கண்ணாடி கதவுடன் கூடிய மண்டபம் இருக்கும் அதனுள் சென்று அமருங்கள் அதுவே பதஞ்சலி முனிவர் ஜீவசமாதி அது என்ன ஜீவசமாதி...லிங்கம் வைத்த இடத்தில் எவரேனும் அடங்கியிருப்பின் அது ஜீவசமாதி. அருகே இருக்கும் பாதாளலிங்கம் இங்கு ஜீவசமாதி இருப்பதை உறுதி செய்கிறது.
பிரம்மாவின் தரிசனம் உங்கள் விதியை மாற்றும் என்பது ...இந்த ஜீவசமாதியும் உங்கள் சுவாசம் மற்றும் உடலின் யோக பயிற்சிகள் உங்கள் விதியை மதியை மாற்றும் என்பது உறுதி அதன் ஆரம்பமாகவே இந்த பிரம்மா வழிபாடு இருந்திருக்ககூடும்.
பிரம்மதீர்த்தம் வர...எங்கே எங்கே என்று பரிதவித்து மனம் கைலாசநாதர் கோவிலை தேடியது.
பார்வை நின்ற இடத்தில் அட பல்லவர்காலத்து மணல்கற்கள் காலம் கடந்து நிற்கிறதே என்று ஆச்சரியம் நெருங்க நெருங்க அதன் அழிவை கண்டு மருகியது.
நந்தி இல்லாமல் இறை தரிசனம் இல்லை அதுபோல பீனியல் க்ளாண்ட் என்பதன் உருவகமான பல்லவ நந்தி எப்படி இருக்கும் தெரியுமா ?
அது என்ன நந்தி முன்னால் கற்கள் அடுக்கப்பட்டிருக்கிறதே அட இன்றைய மனி(ப)தர்களின் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடு உழைப்பற்ற அலையல்.
மீ பாவம் என்ற பாவத்தில் நந்தி.
கைலாசநாதர் ஆலயத்தின் அனைத்து sand stone ன் அற்புதங்கள் உங்களை அசத்துவது போல் அதன் அழிவும் உங்களை அசைக்கும் இதை விரிவாக எழுதுவதை விட....
Few pictures are better than thousand words....
திரும்பும் முன் இன்னொரு சிற்பம் இது யார் சாஸ்தாவா ?
மகிழ மரத்தடியில் இன்னொரு நந்தி...மீ டூ என்றது.
கடைசியாக சுந்தரர் அவர் தோழர் சேரமான் எழுதிய திருக்கயிலாய ஞானஉலா அரங்கேறிய கோவில் வந்தோம். பேனா வாங்குங்கள் நோட்டுபுக் வாங்குகங்கள் என்ற வழிமறிப்புகளை கடந்து உள்ளே செல்ல அதன் பழமை உங்களை வரவேற்கும்.
உலா என்பதில் பெண்ணின் ஏழு பருவங்கள் பற்றிய இலக்கியம் என்ற பள்ளிப்பாடம் நினைவிற்கு வர...
என் தாய் ,மனைவி, மகள், மற்றும் சில என்னை வழிநடத்திய பேரிளம் பெண்கள் நினைவிற்கு வந்தனர்.
சாஸ்தாவே அய்யனார் ஆனால் கையில் கத்தி அரிவாள் இல்லை ஓலைச்சுவடி.
மகளுக்காக மகனுக்காக அவள் மற்றும் அவன் வாரிசிற்கென என பிரார்த்தனை செய்து திரும்பினேன்.
அங்கு வந்திருந்த ஒரு தம்பதியினர் மகனுக்கென யானை முன் உள்ள சிதறுகாய் அடித்து அங்குள்ள பலகணி வழியே அய்யானாரை பார்த்து இனிமேல் செல்லம் சூப்பரா படிப்பே என்று சொல்லி அவன் கன்னம் கிள்ள...
நம்பிக்கை அதானே எல்லாம் என்று தோன்றியது.
இந்த யானையின் நான்கு தூண்களும் சுவர்களும் வெவ்வேறு கால கல்வெட்டுகளை காட்டுகிறது ஆனால் அதை நாம் வெளிச்சம் இட்டு அதன் அடித்தளம் வலுவாக்கி அந்த தூண்களை இருட்டாக்கி வரலாறு காட்டும் நம் பகீரதபிரயத்தனங்கள்.
தம்பி இத்தோட திருப்பட்டூர் கோவில் நாலும் முடியுதுங்க....சிறுகனூர் விடறேங்க ரோடு கிராஸ் செய்து ஸ்ரீரங்கம் பஸ் பிடிங்க என்றார்.
நான் பிரம்மா கோவிலை பார்க்க காத்திருந்த தருணங்களை அசைப்போட்டேன்.
என் மகள் போன்ற திவ்யாராம்மூர்த்தி ஒரு மகளுக்கு தாயானாள் என்ற செய்தி வர வாழ்த்துக்கள் என்றேன்...அவர்களின் காத்திருப்பு மகளாய் அவர்கள் கரங்களில்....
பிரம்மன் படைப்பை...பிறப்பை உடனிருந்து முதலில் ரசித்த மகிழ்வில் பலர்.
தனியே திருப்பத்திற்கு காத்திருக்கும் நான்...
பயணங்கள் முடிவதில்லை தனித்திருப்பினும்...
யோகிராம்சுரத்குமார்
யோகிராம்சுரத்குமார்
யோகிராம்சுரத்குமார்
ஜெயகுருராயா.
i wish to visit this temple and pray to Lortd Bhramapuresswara and padanjali munivar early with all greetings for blessings of brahma
ReplyDelete