எழுத்துக்கு எழுபது - எதிரொலி - 2

31. இரா.கோமகன் எங்களிடையே காலம் போட்டிருக்கும் முடிச்சு, இறுக்கமானது, இதமானது, பவித்திரமானது. எல்லாவற்றையும் தாண்டி அது ஜென்ம பந்தம் என்கிறார் கோமகன். 32. N. ஜெகநாதன் இது ஒரு அற்புத ஆத்மா. உன்னத பிறப்பு. அடைந்தோர் மட டுமே உணரும் சூட்சமம். 33. ரவிச்சந்திரன் ( க்ளிக் ரவி ) நான் திமிர் பிடிச்சவண்டா. அவ்வளவு சீக்கிரமா சோர்ந்து போகமாட்டேன். பழைய ஃபார்முக்கு வந்துண்டிருக்கேன் என்ற பாலகுமாரனின் டிரைவ் தான் எனக்குப்பிடித்தது என்கிறார் ரவிச்சந்திரன். 34. முனைவர். K.P.வித்யாதரன் நாம் சந்திக்க செல்லும்போது சில மந்திரங்களையும் அவர் சொல்லிக்கொண்டு இருப்பார். நாம் அவரை எதிர்கொள்ளவது என்பது வெறும் ஸ்தூலமாக அல்ல என்பதை நான் பலமுறை உணர்ந்துள்ளேன். அவரின் இருப்பே ஒரு சக்தி வளையத்தை உருவாக்குவதை நான் உணர்ந்திருக்குறேன். என்கிறார் வித்யாதரன். 35. யதார்த்த ஜோதிடர் ஷெல்வி பாலகுமாரன் எழுத்தாளர் என்பது ஒரு சட்டை. உண்மையில் அவர் வேறு. இதை உணர்ந்த பலர் அவருக்கு அருகே உண்டு. அந்த எழுத்து இனிப்பு. ஈர்க்கப்படுவீர்கள். மகரந்தம் இன்னும் ஆழ இருக்கிறது. நல்ல தலையெழுத்து உள்ளோ...