Posts

Showing posts from July, 2016

எழுத்துக்கு எழுபது - எதிரொலி - 2

Image
31. இரா.கோமகன் எங்களிடையே காலம் போட்டிருக்கும் முடிச்சு, இறுக்கமானது, இதமானது, பவித்திரமானது. எல்லாவற்றையும் தாண்டி அது ஜென்ம பந்தம் என்கிறார் கோமகன். 32. N. ஜெகநாதன் இது ஒரு அற்புத ஆத்மா. உன்னத பிறப்பு. அடைந்தோர் மட டுமே உணரும் சூட்சமம். 33. ரவிச்சந்திரன் ( க்ளிக் ரவி ) நான் திமிர் பிடிச்சவண்டா. அவ்வளவு சீக்கிரமா சோர்ந்து போகமாட்டேன். பழைய ஃபார்முக்கு வந்துண்டிருக்கேன் என்ற பாலகுமாரனின் டிரைவ் தான் எனக்குப்பிடித்தது என்கிறார் ரவிச்சந்திரன். 34. முனைவர். K.P.வித்யாதரன் நாம் சந்திக்க செல்லும்போது சில மந்திரங்களையும் அவர் சொல்லிக்கொண்டு இருப்பார். நாம் அவரை எதிர்கொள்ளவது என்பது வெறும் ஸ்தூலமாக அல்ல என்பதை நான் பலமுறை உணர்ந்துள்ளேன். அவரின் இருப்பே ஒரு சக்தி வளையத்தை உருவாக்குவதை நான் உணர்ந்திருக்குறேன். என்கிறார் வித்யாதரன். 35. யதார்த்த ஜோதிடர் ஷெல்வி பாலகுமாரன் எழுத்தாளர் என்பது ஒரு சட்டை. உண்மையில் அவர் வேறு. இதை உணர்ந்த பலர் அவருக்கு அருகே உண்டு. அந்த எழுத்து இனிப்பு. ஈர்க்கப்படுவீர்கள். மகரந்தம் இன்னும் ஆழ இருக்கிறது. நல்ல தலையெழுத்து உள்ளோ...

பொன்.வாசுதேவன் அண்ணாவிற்கு...

Image
                                                                யோகிராம்சுரத்குமா ர்           உன்மத்தப் பித்தன் -------------------------------------- அன்பு தம்பி சுவாமிநாதனுக்கு என்று பொன்.வாசுதேவன் சொல்லும் போது....எங்களுக்கிடையே ஆன உறவை நூல் , நூலகம், நூலகர் ( என் அப்பா நாராயணராவ் ) மதுராந்தகம் என பலதும் விரிகிறது....எங்களுக்கிடையே அதிக உரையாடல் இல்லை எனினும் எங்களின் விரல்களுக்கிடையே ஊர்ந்து கொண்டிருக்கிறது அன்பெனும் உயிர் நிலை. ( உங்கள் முதல் கவிதையில் சுட்ட வரிகள் தான் அண்ணா ) வாழ்வின் அநித்யம் நிதரசனம் இரண்டையும் இணைத்து நீ வெறும் பார்வையாளானாய் இரு என்று அன்றைய / இன்றைய வாசுதேவன் சொல்கிறார்கள். இது இரண்டாம் கவிதை. மிகத்தெளிவான தீர்க்கமான உன்மத்த நிலையில் மூன்றாம் கவிதை....நீயுமில்லை....நானுமி ல்லை என்கிறது ஆனால் பித்தன் என்கிறது பொதுப்பார்வை. இது கவிதை...

எழுத்துக்கு எழுபது - எதிரொலி - 1

Image
                                                                        யோகிராம்சுரத்குமார்                                                                          -------------------------------------------- - வெற்றிலைக்கொடி என்ற நாவலில் உடம்பு முழுக்க எறும்பு ஊறும் கனவா அப்படி என்றால் சக்தி உள்ளே ததும்புகிறது என்று அர்த்தம் என்பார் அய்யன். நேற்று காலை ஜூலை - 5 முதல் இன்னமும் என்னுள் சக்தியின் அரவணைப்பு அய்யனின் திருப்பாதம் தந்திருக்கிறது. அவரின் அன்பான என் மனைவி பற்றிய விசாரிப்பு நாயினும் கடையேனான எனக்கு கிடைத்த அன்பின் பெருக்கு. . இன்றே இந்த மலர் முழுக்க படித்துவிட ஆவல் உண்டு....ஆயினும் அதிகம் ...

எழுத்துக்கு எழுபது - சரஸ்வதி சுவாமிநாதன்

Image
                                                                யோகிராம்சுரத்குமார்                                                   --------------------------- இங்கு சாதித்தவனுக்கு மட்டுமே சரித்திரம் என்பது பம்மாத்து ... எல்லோரிடமும் சொல்ல ஒரு சரித்திரம் இருக்கிறது எனக்கு சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்து அவ்வளவே . இது அவ்வளவே என்பது அய்யன் பாலகுமாரனின் முன்கதைச்சுருக்கம் என்ற கட்டுரைத்தொகுப்பில் வரும் வரிகள் . இதுவே என் கட்டுரையின் பலம் அதுவும் அய்யனின் விழா மலரில் எழுதும் நம்பிக்கை தருகிறது . என்ன எழுதப்போறீங்க ... சுவாமிநாதன் ... உன்னில் நீ நிலைக்காதவரை பிறருக்கு போதிக்கும் அதிகாரம் உனக்கில்லை என்று அய்யன் மேற்கோள் காட்டுவாரே .... ஆமாம் இது போத...