எழுத்துக்கு எழுபது - சரஸ்வதி சுவாமிநாதன்
இங்கு சாதித்தவனுக்கு மட்டுமே சரித்திரம் என்பது பம்மாத்து...எல்லோரிடமும் சொல்ல ஒரு சரித்திரம் இருக்கிறது எனக்கு சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்து அவ்வளவே.
இது அவ்வளவே என்பது அய்யன் பாலகுமாரனின் முன்கதைச்சுருக்கம் என்ற கட்டுரைத்தொகுப்பில் வரும் வரிகள்.
இதுவே என் கட்டுரையின் பலம் அதுவும் அய்யனின் விழா மலரில் எழுதும் நம்பிக்கை தருகிறது.
என்ன எழுதப்போறீங்க...சுவாமிநாதன்...உன்னில் நீ நிலைக்காதவரை பிறருக்கு போதிக்கும் அதிகாரம் உனக்கில்லை என்று அய்யன் மேற்கோள் காட்டுவாரே....ஆமாம் இது போதிக்காது...பாதித்தவைகளின் தொகுப்பு....அவர் மொழியில் சொல்வதெனில் வெல்லப்பிள்ளையாரைக் கிள்ளி அவருக்கே நிவேதனம் செய்யும் முயற்சி.
என்ன எழுதப்போறீங்க...சுவாமிநாதன்...உன்னில் நீ நிலைக்காதவரை பிறருக்கு போதிக்கும் அதிகாரம் உனக்கில்லை என்று அய்யன் மேற்கோள் காட்டுவாரே....ஆமாம் இது போதிக்காது...பாதித்தவைகளின் தொகுப்பு....அவர் மொழியில் சொல்வதெனில் வெல்லப்பிள்ளையாரைக் கிள்ளி அவருக்கே நிவேதனம் செய்யும் முயற்சி.
எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது...அப்போது எட்டாம் வகுப்பு அச்சிரப்பாக்கத்தில் படித்துக்கொண்டிருந்த நேரம் அப்பா நாராயணராவ் நூலகர் அரசுவேலை இடமாற்றம் ஆகையில் ஸ்டாக் டேக்கிங் அதனால் சில லட்சம் புத்தகங்களை முகத்தில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு நானும் அக்காவும்....லட்சம்...பத்தாயிரம்...ஆயிரம்...நூறு...பத்து...என பிரித்து பின்னர் ரேக்கில் அடுக்கி தரும் பணியில் அப்பாவிற்கு உதவியாக இருந்தோம்....ரேக்கில் இருந்து சரித்த புத்தகங்களில் ஒரு தலைப்பு ஈர்த்தது....அது கைவீசம்மா கைவீசு....அதை எடுத்தேன் அப்பா நல்ல எழுத்தாளர் படி என்றார்.
பயணம் தொடங்கியது.
இரண்டாவது சூரியன் என் இரண்டாம் நாவல்.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் நேரம் முன்கதைசுருக்கம் கைக்கு வந்தது. என் நண்பன் ஒருவன் மெல்ல அவனின் அடல்ட்ரியில் பிறன்மனை விழைய...என்னை வழிமாற்றியது.....அய்யனின் முன்கதைச்சுருக்கம்...
நான் என்னென்ன தவறுகள் செய்தேன் என்று உணரும் முன் நாற்பதை தொட்டுவிட்டேன் எல்லாப்பெண்களிலும் நான் என் அம்மாவைத்தான் தேடியிருக்கிறேன்...நான் போனதும்...போய்வந்ததும்.....நீங்கள் போக ஆசைப்படுவதும் ஒன்றேயான விஷயங்கள் இதில் போய் அறிந்து கொள்ள ஏதுமில்லை....
என்ற வரிகள் என் மனதிற்கு கடிவாளம்...எனக்கான கவசம்...என் வாழ்க்கைப்போருக்கு அய்யன் தந்த வாள்...வென்றேன் என்று நான் இன்று கூவக்காரணம் அய்யன்.
கல்லூரி...தமிழ் மீடியம் பயின்றவன் ஆங்கில வழிக்கு மதுராந்தகம் to சென்னை பயணம்...கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட மனநிலை....Boyle's law எழுத தெரியாமல் Boils law எழுதி யுவராஜ் என்ற நண்பனும் பலரும் கைக்கொட்டி சிரித்த அவமானம்...இதுவே பெரியவலி என்று துவண்ட நேரம்...பந்தயப்புறா கையில் கிடைத்து....செல்வி பேப்பர் வெயிட் கேட்கத்தெரியாமல் டேபிள் வெயிட் என்று கேட்டு தன் முதல் வேலையில் சகப்பெண்களிடம் அவமானப்பட....பாலகுமாரனும் சாந்தாவும் அந்தப்பெண்ணுக்கு உரமாக அமைய...பற...பற...மேலே...மேலே...என்று சொல்ல...நான் பாரதியின் திருவல்லிக்கேணி இல்லம் சென்றேன்...பாலாவின் ஊக்கம்...பாரதியின் வரிகள் என்னை உயரம் தள்ளியது.
கல்லூரி முடித்து வேலைக்கு முயற்சியின்றி இருக்க....ஏதாவது செய்...சும்மா இருக்காதே என்று நெல்லுக்கு இறைத்தநீர் என்று சொல்ல...ITI யில் வேலைக்கு சேர்ந்தேன்....அந்தநேரம் பிள்ளையார் சிலை பால்குடிக்க ...பரப்பு இழுவிசை பாடம் நான் எடுக்க எனக்கு நாற்பது மாணவர்கள்...எழுந்து முதலில் கைத்தட்டலை தந்தனர்.
கல்லூரியில் வாழ்க்கையும் மனசும் என்ற கட்டுரையை சுப.வீரபாண்டியன் என்ற தமிழ் பேராசிரியர் எழுதச் சொல்கையில் அய்யனின் பல வரிகளை எழுதியே அதைச் சமர்ப்பித்தேன். அன்று உனக்குப்பிடித்தமான அவரின் வரி எது என்று கேட்க....
ஆசைப்பட்டது ஆசைப்பட்ட வித்த்தில் ஆசைப்பட்ட நேரத்தில் கிடைப்பதுதான் வாழ்க்கை அப்படி கிடைக்காமல் போவதில்தான் இருக்கிறது சுவாரஸ்யம் என்ற அய்யனின் வரிகளைச்சொன்னேன்.....வரிகளின் வீர்யம் உன்னில் இறங்கட்டும் என்று அந்த பகுத்தறிவாளர் வாழ்த்தினார்...இந்த வரிகளே இன்றும் வாழ்வை நகர்த்துகிறது.
வேலையிடம் அய்யனின் நண்பன் சுப்ரமணரயராஜூ பணிபுரிந்த டி.டி.கே எல்.ஐ.ஜி...பல நூறு பெண்கள் சூழ்ந்த இடம்...கற்புவெறி என்ற அய்யன் நாவல்...பணியிடம்
..கோவில்...எழவு வீடு இங்கு பெண்கள் தன்னிலை மறந்து இயல்பாக பரவசமாக இருக்குமிடங்கள் அங்கேயெல்லாம் ஆண் ஒழுக்கமாக இருக்க உயர்வான் என்றது நான் தெளிவானேன் இதே நேரத்தில் கௌரி என்ற 53 வயது மேலாளரும் என் ஒழுக்கத்திற்கு நீர் ஊற்றினார்.வேரென நீ இருந்தாய் அதனால் நான் வீழாமல் இருந்தேன் என்று அய்யனை நோக்கி கைதொழுத காலமது.
வேலையிடம் அய்யனின் நண்பன் சுப்ரமணரயராஜூ பணிபுரிந்த டி.டி.கே எல்.ஐ.ஜி...பல நூறு பெண்கள் சூழ்ந்த இடம்...கற்புவெறி என்ற அய்யன் நாவல்...பணியிடம்
..கோவில்...எழவு வீடு இங்கு பெண்கள் தன்னிலை மறந்து இயல்பாக பரவசமாக இருக்குமிடங்கள் அங்கேயெல்லாம் ஆண் ஒழுக்கமாக இருக்க உயர்வான் என்றது நான் தெளிவானேன் இதே நேரத்தில் கௌரி என்ற 53 வயது மேலாளரும் என் ஒழுக்கத்திற்கு நீர் ஊற்றினார்.வேரென நீ இருந்தாய் அதனால் நான் வீழாமல் இருந்தேன் என்று அய்யனை நோக்கி கைதொழுத காலமது.
குடும்பி என்ன செய்ய வேண்டும் என்று அறியாத நேரம்....திருமணத்திற்கு காத்திருக்கும் அக்கா...ஓய்வு பெற்றாலும் அரசு கருவூலத்தில் பணம் இன்மையால் பல தவணைகளில்...4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மூன்று தவணையில் அவரின் செட்டில்மென்ட் கிடைக்குமாம்...
அம்மாவிற்கு முதுகெலும்பில் சிக்கல் அறுவைசிகிச்சை என்ற நிலை...கையிருப்பு 4 லட்சம்....திருமணத்திற்கு அக்கா....அய்யனின் கட்டுரை ஒன்றில....நோய்தீருமிடம் என்று மைலாப்பூர் ஷீரடி பாபாவை பற்றி எழுதுகிறார்.
நானும் நண்பனும் அங்கு விரைகிறோம்...பாபாவின் உதி வாங்கி அம்மாவிற்கு தினமும் தந்தோம்....அம்மாவிற்கு 14 வருடம் வாழ்க்கை அறுவைசிகிச்சையின்றி நகர்ந்தது....
என் பொறுப்பு என்ன ? வெள்ளை ஸ்டிரைக்கர் போல இரு....கேரம் போர்ட் போல் குடும்பம்....ஒருபுறம் பெற்றோர்...மறுபுறம் உடன்பிறந்தோர்....இன்னொருபுறம் மனைவி....இன்னொருபுறம் குழந்தைகள்....எல்லாவற்றையும் பணம் சம்பாதித்து நிரப்பு....தேவைகளை பூர்த்தி செய்...சும்மா இரு நான் செஞ்சேன் என்று நினைக்காமல்....வெள்ளையாய் ஸ்டிரைக்கரா இரு....என்று அவர் நாவல் சொல்லியது....எப்படி செய்ய....
நானும் நண்பனும் அங்கு விரைகிறோம்...பாபாவின் உதி வாங்கி அம்மாவிற்கு தினமும் தந்தோம்....அம்மாவிற்கு 14 வருடம் வாழ்க்கை அறுவைசிகிச்சையின்றி நகர்ந்தது....
என் பொறுப்பு என்ன ? வெள்ளை ஸ்டிரைக்கர் போல இரு....கேரம் போர்ட் போல் குடும்பம்....ஒருபுறம் பெற்றோர்...மறுபுறம் உடன்பிறந்தோர்....இன்னொருபுறம் மனைவி....இன்னொருபுறம் குழந்தைகள்....எல்லாவற்றையும் பணம் சம்பாதித்து நிரப்பு....தேவைகளை பூர்த்தி செய்...சும்மா இரு நான் செஞ்சேன் என்று நினைக்காமல்....வெள்ளையாய் ஸ்டிரைக்கரா இரு....என்று அவர் நாவல் சொல்லியது....எப்படி செய்ய....
Beg...borrow... Steal...உன் தோளில் பொறுப்பைச்சும என்றார்....அந்த கடுமையான வரிகளே என்னை தெளியவைத்தன....பெறும் கடன் பெற்றேன்... அக்காவின் திருமணம் நடந்தது....
கடன் தீர என்ன செய்ய....பரிக்கல் போ என்று அய்யன் ஒரு கட்டுரையில் சொன்னார்....கடன் சுமை குறைந்தது.
2004 ல் யோகியின் அதிஷ்டானத்தில் அய்யனை ஜூன் மாதம் கும்பாபிஷேகத்தில் தரிசனம் செய்தேன்....அந்த தரிசனத்திற்கு பிறகு மிகவும் கீழ் நிலையில் இருந்த எனக்கு சென்னையில் வேலை பிரபாஸ் வீ கேரில் கிடைத்து. குருவருளால் என் தன்னம்பிக்கை துளிர்த்த நேரமது.
2006 ல் இன்னொரு மாலை நாளில் முண்டக்கண்ணியம்மன் வாசலில் அய்யனை தரிசித்தப்போது என் வாழ்க்கையில் நாளை ஒரு புது வேலைக்கு சேரப்போறேன் உங்க ப்ளஸிங் தேவை என கூற....என் மார்பில் தட்டி யோகிராம்சுரத்குமார் என்றார்...அந்தப்பணியிடத்தில் இன்றைய என் சகதர்மினியை சரஸ்வதியை சந்தித்தேன்...காதலாகி...திருமணம் ஆகஸ்ட்- 15 2010 வடபழனி கோவில் என முடிவாக...முதல்நாள் ஐயா என் திருமணம் நாளை என்று சொல்லி கிரி டிரேடிங் வாசலில் மயிலாப்பூரில் வாழ்த்து பெற்றேன்....மீண்டும் நெஞ்சில் ஒரு தட்டு ஆனால் அந்த தட்டின் அதிர்வு இருநாட்கள் தொடர்ந்து இருந்தது.
2004 ல் யோகியின் அதிஷ்டானத்தில் அய்யனை ஜூன் மாதம் கும்பாபிஷேகத்தில் தரிசனம் செய்தேன்....அந்த தரிசனத்திற்கு பிறகு மிகவும் கீழ் நிலையில் இருந்த எனக்கு சென்னையில் வேலை பிரபாஸ் வீ கேரில் கிடைத்து. குருவருளால் என் தன்னம்பிக்கை துளிர்த்த நேரமது.
2006 ல் இன்னொரு மாலை நாளில் முண்டக்கண்ணியம்மன் வாசலில் அய்யனை தரிசித்தப்போது என் வாழ்க்கையில் நாளை ஒரு புது வேலைக்கு சேரப்போறேன் உங்க ப்ளஸிங் தேவை என கூற....என் மார்பில் தட்டி யோகிராம்சுரத்குமார் என்றார்...அந்தப்பணியிடத்தில் இன்றைய என் சகதர்மினியை சரஸ்வதியை சந்தித்தேன்...காதலாகி...திருமணம் ஆகஸ்ட்- 15 2010 வடபழனி கோவில் என முடிவாக...முதல்நாள் ஐயா என் திருமணம் நாளை என்று சொல்லி கிரி டிரேடிங் வாசலில் மயிலாப்பூரில் வாழ்த்து பெற்றேன்....மீண்டும் நெஞ்சில் ஒரு தட்டு ஆனால் அந்த தட்டின் அதிர்வு இருநாட்கள் தொடர்ந்து இருந்தது.
டிசம்பர் - 1 மீண்டும் 2014 ல் சந்திப்பு சத்சங்க யோகி ஜெயந்திவிழாவில்....அன்றே முதலில் நடந்தது....அய்யனின் பாதம் பற்றிய நிகழ்வு....எனக்குள் எந்த மாற்றமும் இல்லையே....என்று கேட்க....உன்னில் நீ உடைந்து அழும் நேரம் அது உன்னில் எழும் என்றார் அய்யன்.
உடைந்து அழுதேன்.
பின்னர் உடையார் பற்றிய ஒரு சந்திப்பிற்காக நண்பர் சசிதரன் உடன் அய்யன் அகத்திற்கு விஜயம்...அங்கே என்னுள் இருக்கும் பல அழுக்குகளை எரித்த நிகழ்வு....கண்ணில் இருக்கும் பீளையை குரு குச்சி மூலம் நீக்குவதுபோல்...என் கர்வக்கொம்பு ஒடித்த நிகழ்வுகள்....நேரடியான வார்த்தைகள் இல்லை...கூர்த்த பார்வை சூழ்ந்திருந்த நடத்தப்பட்ட பாடங்கள் அதை முழுவதாக உள்வாங்கி அசைப்போட பல புரிதலகள்....பல தீர்க்க தரிசனங்கள்....ஆசிர்வாதங்கள்....எச்சிரிக்கை மணிகள்....யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா.
குரு என்பவர் யார் ? தலையணைப்பூக்களில் தகப்பனாக தாடி மழிக்க கற்றுத்தந்தவர் அவரே அவர் அகத்து சந்திப்பில் என் கர்வத்தை எனக்கு காட்டினார். என் குறை எனக்கு ஒரளவு புரிபட....யோகிநாமம் சொல்லியவாறு இருந்தேன்.
குரு நாமம் மெல்ல என்னை சமனப்படுத்த....யோகியின் ஆராதனை நாள் 26.02.2014 ல் அவரது வீட்டிற்கு அவராலேயே அழைக்கப்பட்டது என் பாக்கியம்...பூர்வ ஜென்ம புண்ணியம்.
அவரின் கையெழுத்து பிரதி முதல் பல பொக்கிஷங்களை பரிசளித்தார். அதனினும் பெரிய பரிசாக....பாலா மந்திரம்...யோகிநாமம்....ஸ்ரீராம் ஜெயராம் என பலவையும் பலமாக என்னுள் இறக்கப்பட்டன.
அய்யனின் சுந்தரகாண்டம் படித்த நேரம் மனம் ஒரு குரங்கல்ல மாருதி என்ற வார்த்தை தோன்ற அதை என் முகநூல் பக்கத்தில் பதிவு செய்தேன். அதை கண்டு பாராட்டிய அய்யன் பாலகுமாரன் நீ திருவண்ணாமலைக்கு செல்லும் முன் என்னை அழை உனக்கு ஒரு பரிசு தருகிறேன் என்றார்.
ஆகஸ்ட் - 15 2014 ல் எங்கள் திருமணநாளுக்கு யோகிராம்சுரத்குமார் ஆசிரமத்தில் பாதபூஜைக்கு முன்பதிவு செய்து முன்நாள் அய்யனை தொடர்பு கொண்டு என்ன பரிசு என்று கேட்க " மீளா அடிமை எனப்பகர்" திரும்ப வருகையில் நீ வேறு சுவாமிநாதன் என்றார் அய்யன்.
பின்னர் உடையார் பற்றிய ஒரு சந்திப்பிற்காக நண்பர் சசிதரன் உடன் அய்யன் அகத்திற்கு விஜயம்...அங்கே என்னுள் இருக்கும் பல அழுக்குகளை எரித்த நிகழ்வு....கண்ணில் இருக்கும் பீளையை குரு குச்சி மூலம் நீக்குவதுபோல்...என் கர்வக்கொம்பு ஒடித்த நிகழ்வுகள்....நேரடியான வார்த்தைகள் இல்லை...கூர்த்த பார்வை சூழ்ந்திருந்த நடத்தப்பட்ட பாடங்கள் அதை முழுவதாக உள்வாங்கி அசைப்போட பல புரிதலகள்....பல தீர்க்க தரிசனங்கள்....ஆசிர்வாதங்கள்....எச்சிரிக்கை மணிகள்....யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா.
குரு என்பவர் யார் ? தலையணைப்பூக்களில் தகப்பனாக தாடி மழிக்க கற்றுத்தந்தவர் அவரே அவர் அகத்து சந்திப்பில் என் கர்வத்தை எனக்கு காட்டினார். என் குறை எனக்கு ஒரளவு புரிபட....யோகிநாமம் சொல்லியவாறு இருந்தேன்.
குரு நாமம் மெல்ல என்னை சமனப்படுத்த....யோகியின் ஆராதனை நாள் 26.02.2014 ல் அவரது வீட்டிற்கு அவராலேயே அழைக்கப்பட்டது என் பாக்கியம்...பூர்வ ஜென்ம புண்ணியம்.
அவரின் கையெழுத்து பிரதி முதல் பல பொக்கிஷங்களை பரிசளித்தார். அதனினும் பெரிய பரிசாக....பாலா மந்திரம்...யோகிநாமம்....ஸ்ரீராம் ஜெயராம் என பலவையும் பலமாக என்னுள் இறக்கப்பட்டன.
அய்யனின் சுந்தரகாண்டம் படித்த நேரம் மனம் ஒரு குரங்கல்ல மாருதி என்ற வார்த்தை தோன்ற அதை என் முகநூல் பக்கத்தில் பதிவு செய்தேன். அதை கண்டு பாராட்டிய அய்யன் பாலகுமாரன் நீ திருவண்ணாமலைக்கு செல்லும் முன் என்னை அழை உனக்கு ஒரு பரிசு தருகிறேன் என்றார்.
ஆகஸ்ட் - 15 2014 ல் எங்கள் திருமணநாளுக்கு யோகிராம்சுரத்குமார் ஆசிரமத்தில் பாதபூஜைக்கு முன்பதிவு செய்து முன்நாள் அய்யனை தொடர்பு கொண்டு என்ன பரிசு என்று கேட்க " மீளா அடிமை எனப்பகர்" திரும்ப வருகையில் நீ வேறு சுவாமிநாதன் என்றார் அய்யன்.
அதையே வேண்டுதலாக யோகியின் அதிஷ்டானத்தில் வைத்தேன். புலி வாயில் சிக்கிய மாம்சம் ஆனேன்.
ஒரு வியாழனில் 1994 ல் யோகியை தரிசித்து அவருக்கு சிகரெட் தட்சணையாக தந்தப்போதும்....அதன்பின் 2014 ல் மீண்டும் யோகியின் தொடர்பு இடையில் பலவித வாழ்வின் ரௌத்திரம் தாக்கி திசைமாறி மீண்டும் யோகியின் பாதம் இத்தனைநாளும் எனை காபந்து செய்தது யார் ? என்ற கேள்வியோடு தூங்க....அதிகாலையில் எவரோ என் தலையை தடவியாத ஒரு உணர்வு எழுந்தேன்....அய்யன் அவரின் முகநூல் பதிவில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் பலரோடு என் பெயரையும் குறிப்பிட்டு ஏனோ மனதால் அவர்களை தொட்டு வருடுகிறேன் என்று பதிவிட்டுருந்தார்.விதிர்த்து போனேன்.
அவரை தொடர்பு கொண்டு யோகிக்கு ஏதேனும் கைங்கரியம் செய்ய வேண்டும் என்று அதிகாலை 4.30 க்கு மெஸென்ஜரில் கேட்க மயிலை சத்சங்க அன்பர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை தொகுக்கச்சொன்னார். முடித்து அவரிடம் தர நீ யோகியிடம் தொடர்பில் இருந்தவர்களின் அனுபவங்களை தொகுத்து வா என்று திசை திருப்பினார்... விலக்கினார்.
ஒரு வியாழனில் 1994 ல் யோகியை தரிசித்து அவருக்கு சிகரெட் தட்சணையாக தந்தப்போதும்....அதன்பின் 2014 ல் மீண்டும் யோகியின் தொடர்பு இடையில் பலவித வாழ்வின் ரௌத்திரம் தாக்கி திசைமாறி மீண்டும் யோகியின் பாதம் இத்தனைநாளும் எனை காபந்து செய்தது யார் ? என்ற கேள்வியோடு தூங்க....அதிகாலையில் எவரோ என் தலையை தடவியாத ஒரு உணர்வு எழுந்தேன்....அய்யன் அவரின் முகநூல் பதிவில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் பலரோடு என் பெயரையும் குறிப்பிட்டு ஏனோ மனதால் அவர்களை தொட்டு வருடுகிறேன் என்று பதிவிட்டுருந்தார்.விதிர்த்து போனேன்.
அவரை தொடர்பு கொண்டு யோகிக்கு ஏதேனும் கைங்கரியம் செய்ய வேண்டும் என்று அதிகாலை 4.30 க்கு மெஸென்ஜரில் கேட்க மயிலை சத்சங்க அன்பர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை தொகுக்கச்சொன்னார். முடித்து அவரிடம் தர நீ யோகியிடம் தொடர்பில் இருந்தவர்களின் அனுபவங்களை தொகுத்து வா என்று திசை திருப்பினார்... விலக்கினார்.
சென்றவருட ஜூன் 2014 இறுதியின் நள்ளிரவு அப்பா....யாரோ பலர் தன்னை அழைப்பதாக கூறி அவர் அறையில் இருந்து என் படுக்கையறைக்கு வந்தார்.... தன்னை பலர் கயிறு கட்டி இழுத்து செல்ல வந்திருப்பதாகவும் நாளை காலை விசாரணை பின் தண்டனை என்றார்.
அவரின் பயத்தை அவரின் மரண அவஸ்தையை அவரின் நடுங்கும் கைகளும் அவரின் குரலும் காட்டியது.
எனக்கு என்ன தெரியும் மரணம் கண்டு அஞ்சாதே என்று விளக்கம் தர முடியாத சாமானியன் நான்.
எங்கள் படுக்கையறையில் இருக்கும் யோகிராம்சுரத்குமார் படம் எடுத்து அவர் நெஞ்சில் வைத்தேன் யோகிநாமம் விடாதுசொன்னேன்.
அப்பா தூங்கத்துவங்கினார்.
திடீரென மிக உரக்க கண்கள் மூடியவாறே யோகிநாமம் சொன்னார்
"பிகார் பிகார் மனச்சா சௌகார் தனி தஞ்சகட பீக கேட்லதனி பாலகுமார்....தனி அசலதம்மா மீ பைலனி மலா பாலகுமார் பாவால பலிங்கஜா " என்றார்.
"பிகார் பிகார் மனச்சா சௌகார் தனி தஞ்சகட பீக கேட்லதனி பாலகுமார்....தனி அசலதம்மா மீ பைலனி மலா பாலகுமார் பாவால பலிங்கஜா " என்றார்.
"தன்னை பிச்சைக்காரன் பிச்சைக்காரன் எனச்சொல்லும் யோகி பெரும் தனக்காரர் அவரிடம் பிச்சைப்பெற்றவர் பாலகுமாரன் யோகி இருக்கையில் அவரை தரிசிக்கவில்லை எனவே என்னை பாலகுமாரனை பார்க்க பாலகுமாரனிடம் என்னை அழைத்துச்செல்" என்றார் அப்பா.
மறுநாள் அதிகாலை அய்யன் பாலகுமாரனிடம் அப்பாவின் உடல்நலம் குறித்து தகவல் மெஸன்ஐரில் தெரிவித்தேன் அய்யன் என் தந்தையின் பேர் ராசி நடசத்திரம் கேட்டு பிரார்த்தனை செய்வதாக சொன்னார்.
யோகி நாமம் சொல்வோரை யோகி கை விடுவதில்லை என்று எனக்கு உரமூட்டினார்.
யோகி நாமம் சொல்வோரை யோகி கை விடுவதில்லை என்று எனக்கு உரமூட்டினார்.
அன்று அதிகாலை ஐந்து மணிக்கு என் கைப்பற்றி கண்ணீர் மல்க அக்காவையும் அவரின் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள சொல்லி என்னிடமும் சரஸ்வதியிடமும் சொன்ன அப்பா.
காலை பத்து மணிக்கு அக்கா வீட்டிற்கு செல்வதாக சொல்லி கிளம்பினார்.
யோகியை காணாத அவர் அன்று புறா வடிவில் யோகியை கண்டார்.
அய்யனிடம் நிலம் பணிந்து வணங்கி எழுந்தார்.
அய்யன் அவர் நெஞ்சு நீவி விட்டார். அப்பாவிற்கு பரம சந்தோஷம்.
கிருஷணாவதாரம் படித்தார். காசும் பிறப்பும்....சொர்க்கம் நடுவிலே.....ஒரு வழிப்பாதை.....யோகிராம்சுரத்குமார் சரிதம்.....நான் மயிலை யோகிராம்சுரத்குமார் சத்சங்கத்தினரிடம் பெற்று குருவருளால் எழுதிய சில நூறு பக்கங்களை படித்தார்.
கிருஷணாவதாரம் படித்தார். காசும் பிறப்பும்....சொர்க்கம் நடுவிலே.....ஒரு வழிப்பாதை.....யோகிராம்சுரத்குமார் சரிதம்.....நான் மயிலை யோகிராம்சுரத்குமார் சத்சங்கத்தினரிடம் பெற்று குருவருளால் எழுதிய சில நூறு பக்கங்களை படித்தார்.
அக்கா கட்டிய சோளிங்கர் தாயத்தோ இல்லை சகலமும் நிறைந்த சந்தோஷமோ ஏதோ ஒன்று அவருள் பரிபூரணமாக இருக்க நெஞ்சுவலி என்று சொல்லி விழுந்து பெரும் அவஸ்தைகள் இன்றி இந்த ஜீன் 2 2015 இந்த மண்ணுலகம் விட்டு போனார்.
அவரின் மரணபயம்....பயமற்ற மரணம் இரண்டும் இருவேறு துருவங்கள் அவைகளை கண்ணுற்றவன் நானும் சரஸ்வதியும்.
இன்று அவரில்லை.....அவர் நிச்சயம் கரையேறுவார் அது சத்தியம் என் உணர்வு தூக்கலாய் இருப்பினும் அதில் கடுகளவும் பொய்யில்லை.
சதசங்க பாடல் ஒன்று நினைவில் அதுவே சத்தியம்.
" நேராக்கும்: நெஞ்சுகதிச் சீராக்கும்
நீவிவிடக் கீழார்க்கும் க்ஷேமம் பிறக்கும்
துணையார்க்கும் செய்திடவழி நோக்கும்
வணங்குவீர் யோகிராம்சுரத்குமாரனை."
நீவிவிடக் கீழார்க்கும் க்ஷேமம் பிறக்கும்
துணையார்க்கும் செய்திடவழி நோக்கும்
வணங்குவீர் யோகிராம்சுரத்குமாரனை."
இனி சொல்வதற்கு ஏதுமில்லை.
இன்றைய வாழ்வு இனிமையாக நிறைவாக என் மனைவியோடு யோகியின் நாமம் சொல்லி நகர்கிறது....குறையொன்றுமில்லை என்று கூவத்தோன்றுகிறது. காரணம் எது ?
இதுவரை நான் பகிர்ந்தவை என் அனுபவங்கள்....முன்கதைசுருக்கம்...வேறு எவ்விதமாகவும் என் அனுபவத்தை பகிர முடியாது....அய்யா உள்ளே இருக்கிறார்....வார்த்தையெல்லாம் வெளியே இருக்கிறது என்கிற குணா வசனத்தொனியில் தான் என் அனுபவங்களை நான் தர இயலும்.
ஏனெனில் எனக்கு எல்லாமுமாய் ஆனது அய்யன் எழுத்து....என்னை அருகில் அழைத்து அணைத்தப்போதிலும்....விலக்கி என்னை சூட்சமமாக வழிநடத்தும் போதிலும் என்னுள் ஓங்கி ஒலிக்கும் விஷயம்....
பாவிகளை என்னிடம் வரவிடுங்கள் அவர்களிடம் பரிவோடு இருக்க விரும்புகிறேன்....நான் பாவி என்பதால் அழைத்தாயா ? இல்லை புண்ணியம் செய்து புகுந்தேனா ? என்ற அய்யனின் விசிறிசாமியார் பற்றி எழுதிய கவிதையே என்னுள்...
இறையே...இறையே இதுவரை என்னை சுளுவின்றியும்...சுழல் இன்றியும்...கரையேற்றினீர்...என்று எவரையோ கைக்கூப்பித்தொழத்தோன்றுகிறது...யார் அது ? என்ன பெயர் ? தெரியவில்லை....வாழ்க்கையின் எந்தவொரு திருப்பதிலும் நான் சிதறியிருக்ககூடும்....யார் காப்பாற்றியது....யார் காபந்து செய்தது...
இறையே...இறையே இதுவரை என்னை சுளுவின்றியும்...சுழல் இன்றியும்...கரையேற்றினீர்...என்று எவரையோ கைக்கூப்பித்தொழத்தோன்றுகிறது...யார் அது ? என்ன பெயர் ? தெரியவில்லை....வாழ்க்கையின் எந்தவொரு திருப்பதிலும் நான் சிதறியிருக்ககூடும்....யார் காப்பாற்றியது....யார் காபந்து செய்தது...
வழிநடத்திய அய்யனின் எழுத்தா ? அவரை ஆட்டுவிக்கும் யோகியா ? என்னை உள்முகம் திருப்பிவிட்ட ஸ்தூலமாக நம்மிடையே உலவும் அய்யன் பாலகுமாரனா ?
அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நிறைந்திருக்கும் ஆனந்த பூர்த்தியாக இருக்கும் சக்தியின் துகள் ஆட்டத்தையும்....இறை தரிசனத்தையும்...கண்டு எங்கெங்கிலும் நிறைந்த அந்த பரம்பொருளை கண்ட அய்யன் பாலகுமாரன் இன்றைய நிலைத்தாண்டி இன்னும் பலபேரைத்தொடுவார். ஏனெனில் குரு என்பவர் தன்வாழ்வை பிறர்கென தியாகம் செய்பவர். There is no others...என்று புரிந்தவர்.
அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நிறைந்திருக்கும் ஆனந்த பூர்த்தியாக இருக்கும் சக்தியின் துகள் ஆட்டத்தையும்....இறை தரிசனத்தையும்...கண்டு எங்கெங்கிலும் நிறைந்த அந்த பரம்பொருளை கண்ட அய்யன் பாலகுமாரன் இன்றைய நிலைத்தாண்டி இன்னும் பலபேரைத்தொடுவார். ஏனெனில் குரு என்பவர் தன்வாழ்வை பிறர்கென தியாகம் செய்பவர். There is no others...என்று புரிந்தவர்.
இன்று மைலாப்பூரில் அறுபத்து மூவர் திருவிழா...இங்கு தானம் செய்ய தலைமுறை செழிக்கும் என்பார் அய்யன்....தன் எழுத்தை....வாழ்வை...அனுபவத்தை....குருவை பலருக்கு தானம் செய்தவர் அய்யன் பாலகுமாரன் அவருக்கு என் அனுபவத்தை என்னுள் அவரும் அவர் எழுத்தும் தந்த தாக்கத்தை பதிவு செய்வதே நான் செய்யும் தானம்.
இந்த கட்டுரையை காலையில் திருமதி. பாக்யலஷ்மி சேகர் தந்த முகநூல் தகவல் கண்டு எனக்கு தோன்றியவைகளை பதிந்தேன். இது என் உணர்வு. நான் ஒரு எமோஷனல் இடியட் என அய்யன் பாலகுமாரன் எனைத்திட்டியதுண்டு. இந்த கட்டுரையிலும் அபத்தங்கள் இருக்ககூடும்.
ஆனாலும் சத்தியம் ஒரு காட்டாறு....மெல்ல சமனமாகி கடலினுள் கலக்கும் அதுவரை.....
ஆனாலும் சத்தியம் ஒரு காட்டாறு....மெல்ல சமனமாகி கடலினுள் கலக்கும் அதுவரை.....
யோகிராம்சுரத்குமார்
யோகிராம்சுரத்குமார்
யோகிராம்சுரத்குமார்
ஜெயகுருராயா.
யோகிராம்சுரத்குமார்
யோகிராம்சுரத்குமார்
ஜெயகுருராயா.
என்றென்றும் அன்புடன்....
சரஸ்வதிசுவாமிநாதன்.
21.03.2016
Comments
Post a Comment