Posts

Showing posts from December, 2016

ஐந்து முதலைகளின் கதை - ஒரு பார்வை

Image
யோகிராம்சுரத்குமார் ---------------------------------------- அரபு தேசத்து எண்ணெய் கிணறுகளே பல வணிகர்ளை தனது வயிற்றுக்குள் சொருகி வைத்துருக்கும் முதலை எனத்துவங்கும் முதல் அத்தியாயம் இந்த நாவலின் களனை விளக்கிவிடுகிறது. வணிகம் என வந்துவிட்டால் பெண்களையும் நண்பர்களையும் அனுமதிக்க கூடாது என அறிவுரை வழங்கும் பீட்டர் வழங்கிய நிறுவன பெயரே நாவலின் பெயராகவும் உள்ளது. விமான நிலையத்தில் உள்ள எல்லோரும் ஏன் கஷ்டமான காலங்களில் உதட்டை பிதுக்குகிறார்கள் என நினைத்துக் கொண்டேன். இங்கு வெளிப்படுகிறது கதைநாயகனின் புதிய உலகம் காண பயணத்தின் முதல் ஆச்சரியம். என்னுடைய கனவுகளைச் சொல்வேன் நான். கனவுகளை அடையும் பாதையில் அவன் சந்தித்த இடர்களைப் பற்றி எனக்குச் சொல்வான். இதில் எனக்குப் பளிச்சிடும் good listener தன்மைகதையிறுதியில் underline ஆகும் போது எனக்கான புரிதல் பற்றி எண்ணம் வலுவானது. பக்கம் 25 இதில் ராஸ்கல் கேங் மூலம் நடைபெறும் கொலை விவரணை இது சாரு எழுத்துப்போல் இருக்கே என எனக்கு தோன்றியது முதல்முறையாக இங்குதான். வணிகமும் தத்துவமும் ஒன்றிணையக்கூடாது பொருள் சேர்ப்பது ஒன்று மட்டும்தான் வணிகத்தி...

சத்தியம் என்ற சொல் - எழுத்துச்சித்தர் பாலகுமாரன்

Image
உ  யோகிராம்சுரத்குமார் சத்தியம் என்ற சொல்   எழுத்துச்சித்தர் பாலகுமாரன்  ( 01.12.2016 ) நல்லவர்களுக்கு ஏன் துன்பம் அதிகம் என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு. இதற்கு பதில் மகாபாரத்தில் உண்டு. பஞ்சபாண்டவர்களில் ஏன் கிருஷ்ணன் அர்ஜூன்னைத் தேர்ந்தெடுத்தான் இதற்கு பதில் துன்பங்களில் மிகப்பெரியத்துன்பம் ஒரு ஆண்மகனை அவன் ஆணல்ல என்று சொல்லுதலே அத்தகைய துன்பத்தை அடைந்தவன் அர்ஜூனன். பிருங்நலை என்ற பெண்ணாக அஞ்ஞாத வாசகாலத்தில் இருந்த ஒரு வருடத்தில் அவன் கிருஷ்ணன் மீது கொண்ட நம்பிக்கையை விடவில்லை அதனாலேயே கிருஷ்ணன் அர்ஜூனன் மீது அன்பு கொண்டு அவனையே போரில் முன் நிறுத்துகிறார். கடவுள் என்ற சத்தியத்தை தொட அர்ஜூனன் போல் நம்பிக்கை வேண்டும். யோகிராம்சுரத்குமார் உடன் அய்யன் பாலகுமாரனுக்கு இருந்த அணுக்கம் போல் நமக்கும் கிடைக்காதா என்ற ஏக்கம் அனைவருக்கும் இருக்கும் அவ்விதம் குருவை சத்தியத்தைப் பற்றிக்கொள்ள என்ன வழி என்று சொல்ல அய்யா பாலகுமாரனை மேடைக்கு அழைக்கிறேன் உங்கள் கரகோஷம் அவரை வரவேற்கட்டும். இதுவரை திருமதி.சம்பத்லட்சுமி பாலாஜி. இனி அய்யன் பாலகுமாரனி...