விஷாதயோகம் - வியப்புரை

யோகிராம்சுரத்குமார் வியப்புரை உத்தவ கீதை என்று ஒன்று உண்டு. பாகவதத்தின் இறுதிப் பகுதியில் உத்தவரும் கிருஷ்ணரும் பேசிக்கொள்ளும் நீண்ட நெடும் உரையாடல் பகுதி இது . இதன் சிறப்பு என்னவெனில் , பகவான் கிருஷ்ணர் தன்னை முழுவதும் வெளிப்படுத்தியது உத்தவர் என்கிற உத்தவசுவாமியிடம்தான் . ஏனெனில் , கீதை முழுவதும் கிருஷ்ணன் யோகியாகவே வலம் வருவான். அர்ஜுனனை முன்னிலையாகக் கொண்டு சகல ஆன்மிக மார்க்கங்களையும் தரிசிக்கச் செய்வான். ஆனால் , உத்தவ கீதையில் தனக்குப் பிடித்த சிறு பூ , பட்டாம்பூச்சி , மாதம் , வேதம் , கானம் என்று பெரும் பட்டியலைக் கொடுப்பான் . ‘‘ உத்தவா நான் உன்னிடம் மட்டுமே என்னைக் கொட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறேன் ’’ என்பான் . இந்த நூலும் அதுபோன்றுள்ளது . அணுக்கம் நிறைந்ததாக உள்ளது . விஷாத யோகம் உத்தவ கீதையைப் போலல்லவா இனிக்கிறது என்று தோன்றியது . ஏனெனில் , ஐயா பாலகுமாரன் அவர்கள் கேட்கப்படும் கேள்விக்கும் மேலானதொரு வினாவை உள்ளுக்குள் தோற்றுவித்துக்கொண்டே நகர்கிறார். பல இடங்களில் வினாவை விரித்து பதில்களால் வினாவை நிறைவு செய்கிறார். பொதுவாகவே , இதுபோன்ற கேள்...