தேடலின் விதை - 1


----
யோகிராம்சுரத்குமார்
-------------------------------------


தேடலின் விதை...

உரைக்கப்பட்ட வரலாற்றை விட மறைக்கப்பட்ட வரலாறே அதிகம். புதினம் என்ற பெயரில் தனது அரிப்பிற்கு சொறிந்து கொள்ளும் சீப்பாக ( cheap ஆகவும் ) வரலாற்றை திரித்து எழுதுபவர்கள் நிறைந்து இருக்கும் காலத்தில்...சோழர்களை தனது ஜாதீய அடையாளமாக மாற்ற முயற்சிக்கும் பலருக்கிடையே இத்தகைய முயற்சி பெரும் வரவேற்பிற்கு உரியது.

இந்த நூலிற்கான ஒருங்கிணைப்பு வேலையை செய்தது மட்டுமே தனது பணி என்று விலகி நிற்பது திரு்.ராஜாராம் கோமகனின் பெருந்தன்மையாக இருப்பினும் அவரை பாராட்டுதல் நமது கடமைகளில் ஒன்று.

அய்யன் பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்கள் வரலாற்றையும் , கற்பனையையும் அளவாக கலந்து தரும் புதினங்கள் வரலாற்றின் மீது ஆவலை மட்டுமன்றி இத்தகைய வரலாற்றுத் தேடலுக்கும் வழிகாட்டும் என்பதே நிஜம்.

ஒரு காதல் நிவந்தம் என்ற பாலகுமாரனின் நாவல் படித்துவிட்டு 21 வருடங்களுக்கு முன் செய்த திருவாரூர் , பனையவரம் பயணத்தை விட இன்றைய கங்கை கண்ட சோழனும், குடவாயில் பாலசுப்பிரமணியன் , கோமகன் அவர்களின் கட்டுரை படித்து விட்டு ஆடிதிருவாதிரை என்ற கல்வெட்டு தடவி பார்க்க பயணிப்பது என்பது பெரும் சுகம். இந்த நூல் தந்த தாக்கங்கங்களை, தேடல்களை, வெளிச்சக் கீற்றுகளை உங்களிடம் பகிர்வது எனது முதன்மையான பணி என்று கருதுகிறேன்.

குறிப்பாக சரித்திர நாவல் படிப்பது மட்டுமன்றி அய்யன் பாலகுமாரன் சில தரவுகளை அறிய களத்திற்கே சென்று ஆய்வு செய்து நமக்கு நாவலைத் தருவதைப் போல் இத்தகைய நூலுக்கும் நமது ஆதரவு நீள வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

இனி நூல் பற்றி.....

80 கட்டுரைகள் 11 தலைப்புகளில் இந்த நூலில் முனைவர். இல.தியாகராசன் மற்றும் முனைவர். பெ. இரவிச்சந்திரன் மூலம் தொகுக்கப்பட்டுள்ளது. இது ஒரு அரசின் வேலை , ஆனால் இதை இராஜேந்திரன் என்ற ஒற்றை மனிதருக்காக இவர்கள் இதை செய்திருக்கிறார்கள் என்பதே நிஜம்.

1

இராஜேந்திரனின் பிறந்த மாதம் , நட்சத்திரம் ஆகியவற்றை உறுதி செய்யும் இக்கட்டுரை 'நாம் பிறந்த ஆடித் திருவாதிரை' என்பதை படத்துடன் இருக்கும் இடத்தையும் , கல்வெட்டு பாடத்தையும் தருகிறது.

2

இராஜேந்திரசோழரின் குடும்பம் குறித்த இக்கட்டுரை. இராஜராஜனின் மக்கள் பற்றிய விவரம், திருவையாறு கோவில் கல்வெட்டுக்கள் 108 / 1995 - 96 நேரில் பார்த்துப் படிக்கப்பட்டது என்ற உறுதியை தருகிறது அடுத்தப்பயணத்தில் இதை தேட வரலாறு தாண்டி தனிப்பட்ட ஆர்வமும் இருக்கிறது . கைஈச்சோப்பி - விசிறி என்ற தகவல் இருக்கிறது.

பெண்டாட்டி என்ற சொல்லின் பொருள் என்னவென்று அறிய ARE 3 of 1905 பற்றிய தேடல் அழகு.

அணுக்கியார் பரவை நங்கையார் என்ற தலைப்பில் வரும் வரிகள் ரசனையான காதல்.

3

இராஜேந்திரனின் இறப்பு, வீரமாதேவியாரின் உடன்கட்டை ஏறிய தகவல் கொண்ட பிரம்மதேசக்கல்வெட்டு.

திருவாமத்தூரில் உள்ள 09/08/1044 வரை அவர் உயிரோடு இருந்தமைக்கான ஆதாரங்களைத்தரும் கல்வெட்டு தேடிப்பயணிக்க வேண்டும்.

4

இராசேந்திர சோழனின் மக்கள் என்ற இந்தக் கட்டுரையில் 'சோழ கேரளன்' பற்றிய ஆய்வின் அவசியத்தை குறிப்பிடுகிறது.

5

இராஜேந்திர சோழனின் பல்வேறு விருதுப்பெயர்கள் அதன் காரணங்கள் அலசப்பட்ட இக்கட்டுரையில் கூழம் பந்தல் என்ற ஊரில் உள்ள மகிபாலகுலகாலன் என்ற பெயர் அழகானது.

6

இராஜேந்திரனின் வெற்றிகள் மெய்கீர்த்தியின் படி 117 நாட்களில் கடாரத்தின் மீது படையெடுத்து 14 நாடுகளை வென்றார் இராஜேந்திரன் என்பது நல்ல தரவு.


7

இலக்கியம் செப்பேடுகளில் கங்கை வெற்றி பற்றிய குறிப்புகள் இக்கட்டுரை.

இன்றைய பொன்னேரி குறித்த அன்றைய குறிப்பினை தேடலாம்.


8

கங்கையும் கடாரமும் இதில் பல கோவில்கள் கங்கையின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக எழுப்பப்பட்டதை குறிப்பிடுகிறது. அதில் 'கெடார்' என்ற கோவில் குறித்த ஆர்வம் எழுகிறது.

9

கொள்ளிப்பாக்கை - குல்பர்கா
மான்யகேடம் - மால்கெட்
ஸ்ரீவிஜயம் - சுமத்ரா
நக்கவாரம் - நிக்கோபார் தீவு.


நாகேஸ்வரர் கோவிலில் உள்ள கங்கை விநாயகர் குறித்த குறிப்பு்.


10

பாண்டியர் போர் குறிப்பிடும் திருவாண்டார்கோயில் கல்வெட்டு


11

முதலாம் ராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியில் உள்ள இலக்கணச்சிறப்பு அழகு.


12

இராஜேந்திரனின் 70 வரிகளைக் கொண்ட மெய்க்கீர்த்தியின் தற்போதைய எச்சங்களான நிலங்களை விளக்கும் கட்டுரை அசத்தல்

13

இராஜேந்திரனின் கல்வெட்டுக்கள் குறித்த அட்டவணை எளிதான புரிதலுக்கு வழிவகுக்கும். அங்காடி, பேரங்காடி என்பவை வணிகவளாகம் குறித்த குறிப்புகளை அன்றைய கல்வெட்டுகளில் காணக்கிடைப்பது நமது உச்சப்பட்ச நாகரீகத்தை காட்டுகிறது.

14

தஞ்சை கோவில் கல்வெட்டுக்களில் இராஜேந்திரன் பற்றிய குறிப்புகள் மூலம் அவரின் கங்கை படையெடுப்பு 11 ஆம் ஆட்சி ஆண்டில் நடந்தது என தெளிவாக தெரிகிறது.


15

மானாம்பாடி கோவில் பற்றிய கட்டுரை நம்மை நாம் பார்க்கும் கண்ணாடி. இராஜேந்திர சோழன் நந்தவனம் என்றொரு நந்தவனத்திலிருந்து இறைவனுக்கு பூக்கள் வந்த தகவலை அறிகிறோம்.

16

அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை கல்வெட்டுக்கள் பற்றி இருக்கும் தனித்தனி கட்டுரைகளோடு பயணிக்க அந்தந்த பகுதி குறித்த புரிதல் அதிகமாகும். 'வலங்கை இடங்கை' பற்றிய செய்தி அந்தகால சாதி சமுதாயத்தை காட்டும்.

இந்த நூல் குறித்து மீண்டும் தொடர்ந்து எழுதுவேன்.

என்றென்றும் அன்புடன்.....
சரஸ்வதிசுவாமிநாதன்.










Comments

Popular posts from this blog

திருப்பம் தந்த திருப்பட்டூர்

எழுத்துக்கு எழுபது - சரஸ்வதி சுவாமிநாதன்

சத்தியம் என்ற சொல் - எழுத்துச்சித்தர் பாலகுமாரன்