Posts

Showing posts from April, 2017

விஷாதயோகம் - வியப்புரை

Image
யோகிராம்சுரத்குமார் வியப்புரை     உத்தவ கீதை என்று ஒன்று உண்டு. பாகவதத்தின் இறுதிப் பகுதியில் உத்தவரும் கிருஷ்ணரும் பேசிக்கொள்ளும் நீண்ட நெடும் உரையாடல் பகுதி இது . இதன் சிறப்பு என்னவெனில் , பகவான் கிருஷ்ணர் தன்னை முழுவதும் வெளிப்படுத்தியது உத்தவர் என்கிற உத்தவசுவாமியிடம்தான் . ஏனெனில் , கீதை முழுவதும் கிருஷ்ணன் யோகியாகவே வலம் வருவான். அர்ஜுனனை முன்னிலையாகக் கொண்டு சகல ஆன்மிக மார்க்கங்களையும் தரிசிக்கச் செய்வான். ஆனால் , உத்தவ கீதையில் தனக்குப் பிடித்த சிறு பூ , பட்டாம்பூச்சி , மாதம் , வேதம் , கானம் என்று பெரும் பட்டியலைக் கொடுப்பான் . ‘‘ உத்தவா நான் உன்னிடம் மட்டுமே என்னைக் கொட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறேன் ’’ என்பான் . இந்த நூலும் அதுபோன்றுள்ளது . அணுக்கம் நிறைந்ததாக உள்ளது . விஷாத யோகம் உத்தவ கீதையைப் போலல்லவா இனிக்கிறது என்று தோன்றியது . ஏனெனில் , ஐயா பாலகுமாரன் அவர்கள் கேட்கப்படும் கேள்விக்கும் மேலானதொரு வினாவை உள்ளுக்குள் தோற்றுவித்துக்கொண்டே நகர்கிறார். பல இடங்களில் வினாவை விரித்து பதில்களால் வினாவை நிறைவு செய்கிறார். பொதுவாகவே , இதுபோன்ற கேள்...

தேடலின் விதை - 1

Image
உ ---- யோகிராம்சுரத்குமார் ------------------------------------- தேடலின் விதை... உரைக்கப்பட்ட வரலாற்றை விட மறைக்கப்பட்ட வரலாறே அதிகம். புதினம் என்ற பெயரில் தனது அரிப்பிற்கு சொறிந்து கொள்ளும் சீப்பாக ( cheap ஆகவும் ) வரலாற்றை திரித்து எழுதுபவர்கள் நிறைந்து இருக்கும் காலத்தில்...சோழர்களை தனது ஜாதீய அடையாளமாக மாற்ற முயற்சிக்கும் பலருக்கிடையே இத்தகைய முயற்சி பெரும் வரவேற்பிற்கு உரியது. இந்த நூலிற்கான ஒருங்கிணைப்பு வேலையை செய்தது மட்டுமே தனது பணி என்று விலகி நிற்பது திரு்.ராஜாராம் கோமகனின் பெருந்தன்மையாக இருப்பினும் அவரை பாராட்டுதல் நமது கடமைகளில் ஒன்று. அய்யன் பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்கள் வரலாற்றையும் , கற்பனையையும் அளவாக கலந்து தரும் புதினங்கள் வரலாற்றின் மீது ஆவலை மட்டுமன்றி இத்தகைய வரலாற்றுத் தேடலுக்கும் வழிகாட்டும் என்பதே நிஜம். ஒரு காதல் நிவந்தம் என்ற பாலகுமாரனின் நாவல் படித்துவிட்டு 21 வருடங்களுக்கு முன் செய்த திருவாரூர் , பனையவரம் பயணத்தை விட இன்றைய கங்கை கண்ட சோழனும், குடவாயில் பாலசுப்பிரமணியன் , கோமகன் அவர்களின் கட்டுரை படித்து விட்டு ஆடிதிருவாதிரை என்ற கல்வெட்ட...