
கங்கை கொண்ட சோழன் - பாகம் 1 --------------------------------------------------- யோகிராம்சுரத்குமார் ----------------------------- அகலாது அணுகாது தீக்காய்வார் போல் மன்னனிடம் இருக்க வேண்டும் என்ற திருக்குறள் போல் நானும் அய்யன் பாலகுமாரனிடம் அணுகி...அகன்று இன்று இங்கிருந்து பார்க்க யோகியின் அலகிலா விளையாட்டின் காரணம் புரிகிறது. இந்த விலகல் மட்டுமே என்னை நடுநிலையில் பல பாடங்களை புரிய செய்துள்ளது. உடையார் படித்தப்போது இருந்த பிரமிப்பு...பரவசம் இந்த கங்கை கொண்ட சோழனில் இல்லை....மனம் மெல்ல இதை அய்யன் செதுக்கிய விதம் பற்றி மெல்ல மெல்ல அசைப்போட்டு பிறகு நகரும் மனநிலை எனக்கு வந்திருப்பது காலத்தின் இனிய மாற்றம். அதற்கு எனக்கு தூண்டுகோலாக இருந்த அய்யன் பாலகுமாரனுக்கும்....கடவுளின் குழந்தை அடியார்க்கு நல்லான்...நாயேனையும் நயந்து வந்து என்னை என் நினைவின்றி ஆண்டு கொண்ட யோகிராம்சுரத்குமார் பாதம் பணிகிறேன். இனி முதல் பாகம் நுழைவோம்.... நான் வாசித்தது ஐந்தாம் பதிப்பு பாகம் ஒன்று அத்தியாயங்கள் இங்கு எண்ணிடப்பட்டு குறிப்பிடப்படும். 1 நானூறு வருடங்கள் கழித்து சோழ சாம்ராஜ்யம் வீழ நடுக்க...