ஐந்து முதலைகளின் கதை - ஒரு பார்வை

யோகிராம்சுரத்குமார் ---------------------------------------- அரபு தேசத்து எண்ணெய் கிணறுகளே பல வணிகர்ளை தனது வயிற்றுக்குள் சொருகி வைத்துருக்கும் முதலை எனத்துவங்கும் முதல் அத்தியாயம் இந்த நாவலின் களனை விளக்கிவிடுகிறது. வணிகம் என வந்துவிட்டால் பெண்களையும் நண்பர்களையும் அனுமதிக்க கூடாது என அறிவுரை வழங்கும் பீட்டர் வழங்கிய நிறுவன பெயரே நாவலின் பெயராகவும் உள்ளது. விமான நிலையத்தில் உள்ள எல்லோரும் ஏன் கஷ்டமான காலங்களில் உதட்டை பிதுக்குகிறார்கள் என நினைத்துக் கொண்டேன். இங்கு வெளிப்படுகிறது கதைநாயகனின் புதிய உலகம் காண பயணத்தின் முதல் ஆச்சரியம். என்னுடைய கனவுகளைச் சொல்வேன் நான். கனவுகளை அடையும் பாதையில் அவன் சந்தித்த இடர்களைப் பற்றி எனக்குச் சொல்வான். இதில் எனக்குப் பளிச்சிடும் good listener தன்மைகதையிறுதியில் underline ஆகும் போது எனக்கான புரிதல் பற்றி எண்ணம் வலுவானது. பக்கம் 25 இதில் ராஸ்கல் கேங் மூலம் நடைபெறும் கொலை விவரணை இது சாரு எழுத்துப்போல் இருக்கே என எனக்கு தோன்றியது முதல்முறையாக இங்குதான். வணிகமும் தத்துவமும் ஒன்றிணையக்கூடாது பொருள் சேர்ப்பது ஒன்று மட்டும்தான் வணிகத்தி...