Posts

Showing posts from 2016

ஐந்து முதலைகளின் கதை - ஒரு பார்வை

Image
யோகிராம்சுரத்குமார் ---------------------------------------- அரபு தேசத்து எண்ணெய் கிணறுகளே பல வணிகர்ளை தனது வயிற்றுக்குள் சொருகி வைத்துருக்கும் முதலை எனத்துவங்கும் முதல் அத்தியாயம் இந்த நாவலின் களனை விளக்கிவிடுகிறது. வணிகம் என வந்துவிட்டால் பெண்களையும் நண்பர்களையும் அனுமதிக்க கூடாது என அறிவுரை வழங்கும் பீட்டர் வழங்கிய நிறுவன பெயரே நாவலின் பெயராகவும் உள்ளது. விமான நிலையத்தில் உள்ள எல்லோரும் ஏன் கஷ்டமான காலங்களில் உதட்டை பிதுக்குகிறார்கள் என நினைத்துக் கொண்டேன். இங்கு வெளிப்படுகிறது கதைநாயகனின் புதிய உலகம் காண பயணத்தின் முதல் ஆச்சரியம். என்னுடைய கனவுகளைச் சொல்வேன் நான். கனவுகளை அடையும் பாதையில் அவன் சந்தித்த இடர்களைப் பற்றி எனக்குச் சொல்வான். இதில் எனக்குப் பளிச்சிடும் good listener தன்மைகதையிறுதியில் underline ஆகும் போது எனக்கான புரிதல் பற்றி எண்ணம் வலுவானது. பக்கம் 25 இதில் ராஸ்கல் கேங் மூலம் நடைபெறும் கொலை விவரணை இது சாரு எழுத்துப்போல் இருக்கே என எனக்கு தோன்றியது முதல்முறையாக இங்குதான். வணிகமும் தத்துவமும் ஒன்றிணையக்கூடாது பொருள் சேர்ப்பது ஒன்று மட்டும்தான் வணிகத்தி...

சத்தியம் என்ற சொல் - எழுத்துச்சித்தர் பாலகுமாரன்

Image
உ  யோகிராம்சுரத்குமார் சத்தியம் என்ற சொல்   எழுத்துச்சித்தர் பாலகுமாரன்  ( 01.12.2016 ) நல்லவர்களுக்கு ஏன் துன்பம் அதிகம் என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு. இதற்கு பதில் மகாபாரத்தில் உண்டு. பஞ்சபாண்டவர்களில் ஏன் கிருஷ்ணன் அர்ஜூன்னைத் தேர்ந்தெடுத்தான் இதற்கு பதில் துன்பங்களில் மிகப்பெரியத்துன்பம் ஒரு ஆண்மகனை அவன் ஆணல்ல என்று சொல்லுதலே அத்தகைய துன்பத்தை அடைந்தவன் அர்ஜூனன். பிருங்நலை என்ற பெண்ணாக அஞ்ஞாத வாசகாலத்தில் இருந்த ஒரு வருடத்தில் அவன் கிருஷ்ணன் மீது கொண்ட நம்பிக்கையை விடவில்லை அதனாலேயே கிருஷ்ணன் அர்ஜூனன் மீது அன்பு கொண்டு அவனையே போரில் முன் நிறுத்துகிறார். கடவுள் என்ற சத்தியத்தை தொட அர்ஜூனன் போல் நம்பிக்கை வேண்டும். யோகிராம்சுரத்குமார் உடன் அய்யன் பாலகுமாரனுக்கு இருந்த அணுக்கம் போல் நமக்கும் கிடைக்காதா என்ற ஏக்கம் அனைவருக்கும் இருக்கும் அவ்விதம் குருவை சத்தியத்தைப் பற்றிக்கொள்ள என்ன வழி என்று சொல்ல அய்யா பாலகுமாரனை மேடைக்கு அழைக்கிறேன் உங்கள் கரகோஷம் அவரை வரவேற்கட்டும். இதுவரை திருமதி.சம்பத்லட்சுமி பாலாஜி. இனி அய்யன் பாலகுமாரனி...

எழுத்துக்கு எழுபது - எதிரொலி - 3

Image
71. எம். சுசீந்திரன் அய்யாவின் ஒவ்வொரு நாவலும் PhD கொடுக்கும் அளவிற்கு தகுதி பெற்றிருக்கிறது. 72. நடராஜன் மாரியப்பன் அய்யா தாலி எடுத்துக் கொடுக்க திருமணம் செய்து கொண்ட பாக்கியம் பெற்றவர்களில் நானும் ஒருவன். தீர்வுகளின் தியான மண்டபம் எங்கள் குருநாதர் பாலகுமாரன். 73. கல்பனா Balkumar is doing my fathers work என்பது யோகி ராம்சுரத்குமார் வாக்கு. 74. சாந்தி கோவிந்தராஜ் நீங்களே சுயமாக யோசிப்பதைத்தான் முதலில் சொல்லிகொடுப்பார். எந்த தராசிலும் வைத்து நிறுத்தி சமன் செய்யமுடியாது. 75. அறம் கிருஷ்ணன் தனக்கும் பாலகுமாரன் இராஜேந்திரன் சோழன் இடையே ஆன பயணத்தை விவரிக்கிறார். 76. எஸ். லட்சுமி நரசிம்மன் இந்தக்குமிழியின் ஓட்டம், இந்தக் குமிழியின் கைகளில் இல்லை என்பது மட்டும் புரிகிறது என்ற அய்யனின் தமிழரசி பேட்டியை குறிப்பிடும் கட்டுரை. 77. R. ஜெயக்குமார் எது கடவுள் தேட பாலகுமாரன் புத்தகம். எது கடவுள் நீ உணர பாலகுமாரன் குரு பகவானின் சந்திப்பு. இது நிகழ நாமும் கடவுளை உணர்வோம். 78. ஹரிஹரன் பாலகுமாரனின் எழுத்தின் மேதைமை அதை காசி சொம்பில் அடக்க ...

எழுத்துக்கு எழுபது - எதிரொலி - 2

Image
31. இரா.கோமகன் எங்களிடையே காலம் போட்டிருக்கும் முடிச்சு, இறுக்கமானது, இதமானது, பவித்திரமானது. எல்லாவற்றையும் தாண்டி அது ஜென்ம பந்தம் என்கிறார் கோமகன். 32. N. ஜெகநாதன் இது ஒரு அற்புத ஆத்மா. உன்னத பிறப்பு. அடைந்தோர் மட டுமே உணரும் சூட்சமம். 33. ரவிச்சந்திரன் ( க்ளிக் ரவி ) நான் திமிர் பிடிச்சவண்டா. அவ்வளவு சீக்கிரமா சோர்ந்து போகமாட்டேன். பழைய ஃபார்முக்கு வந்துண்டிருக்கேன் என்ற பாலகுமாரனின் டிரைவ் தான் எனக்குப்பிடித்தது என்கிறார் ரவிச்சந்திரன். 34. முனைவர். K.P.வித்யாதரன் நாம் சந்திக்க செல்லும்போது சில மந்திரங்களையும் அவர் சொல்லிக்கொண்டு இருப்பார். நாம் அவரை எதிர்கொள்ளவது என்பது வெறும் ஸ்தூலமாக அல்ல என்பதை நான் பலமுறை உணர்ந்துள்ளேன். அவரின் இருப்பே ஒரு சக்தி வளையத்தை உருவாக்குவதை நான் உணர்ந்திருக்குறேன். என்கிறார் வித்யாதரன். 35. யதார்த்த ஜோதிடர் ஷெல்வி பாலகுமாரன் எழுத்தாளர் என்பது ஒரு சட்டை. உண்மையில் அவர் வேறு. இதை உணர்ந்த பலர் அவருக்கு அருகே உண்டு. அந்த எழுத்து இனிப்பு. ஈர்க்கப்படுவீர்கள். மகரந்தம் இன்னும் ஆழ இருக்கிறது. நல்ல தலையெழுத்து உள்ளோ...