எழுத்துக்கு எழுபது - எதிரொலி - 3
71. எம். சுசீந்திரன்
அய்யாவின் ஒவ்வொரு நாவலும் PhD கொடுக்கும் அளவிற்கு தகுதி பெற்றிருக்கிறது.
72. நடராஜன் மாரியப்பன்
அய்யா தாலி எடுத்துக் கொடுக்க திருமணம் செய்து கொண்ட பாக்கியம் பெற்றவர்களில் நானும் ஒருவன். தீர்வுகளின் தியான மண்டபம் எங்கள் குருநாதர் பாலகுமாரன்.
73. கல்பனா
Balkumar is doing my fathers work என்பது யோகி ராம்சுரத்குமார் வாக்கு.
74. சாந்தி கோவிந்தராஜ்
நீங்களே சுயமாக யோசிப்பதைத்தான் முதலில் சொல்லிகொடுப்பார். எந்த தராசிலும் வைத்து நிறுத்தி சமன் செய்யமுடியாது.
75. அறம் கிருஷ்ணன்
தனக்கும் பாலகுமாரன் இராஜேந்திரன் சோழன் இடையே ஆன பயணத்தை விவரிக்கிறார்.
76. எஸ். லட்சுமி நரசிம்மன்
இந்தக்குமிழியின் ஓட்டம், இந்தக் குமிழியின் கைகளில் இல்லை என்பது மட்டும் புரிகிறது என்ற அய்யனின் தமிழரசி பேட்டியை குறிப்பிடும் கட்டுரை.
77. R. ஜெயக்குமார்
எது கடவுள் தேட பாலகுமாரன் புத்தகம். எது கடவுள் நீ உணர பாலகுமாரன் குரு பகவானின் சந்திப்பு. இது நிகழ நாமும் கடவுளை உணர்வோம்.
78. ஹரிஹரன்
பாலகுமாரனின் எழுத்தின் மேதைமை அதை காசி சொம்பில் அடக்க எண்ணுதல் அடியேனின் பேதைமை.
79. K. சுதா
அவர்களின் கதையை பற்றிய விவரமான கடிதம்.
80. எம்.சுப்பிரமணியன்
அன்பாலான ஒரு நிறை மனிதன் பாலகுமாரன்.
81. பூமாலை
சும்மா இரு என்ற அய்யனின் ஆசிப்பற்றி பூமாலை.
82. சி.காந்தி நேரு
அய்யனின் எளிமை , வலிமை எது என்று விளக்குகிறார்.
83. ரேவதி
மகளாக பிறக்க வரம் கேட்கிறார்.
84. பாலசந்தர்
எழுத்து மூலம் மலர்ந்த தன் ஆன்மீகப்பயணம்.
85. கணேசன் - மகேந்திரா
கடவுள் நமக்கு பிரச்சனைகள் தருவது நம்மை மேலும் தெளிவுப்படுத்தி , பலப்படுத்ததானே தவிர நமக்கு கஷ்டங்களை கொடுக்க அல்ல.
86. பவித்ரன்
தன் கசடுகளை களைய பிரார்த்திக்கும் கடிதம்.
87. V.ராஜ சங்கர்
அய்யன் மிக எளிதாய் just கைகுலுக்கல் போல் நம்முள் பல உயரிய விஷயங்களை விதைத்து விடுகின்றனர்.
88. கிருத்திகா ஸ்ரீதர்
பசியைக்கூட சரியாகச் சொல்லத் தெரியாத அவனது உயரம் சத்சங்கம் தந்த உரம். அய்யனின் ஆசி. நான் கொண்ட தன்மை எனக்கு கிடைத்த தெளிவு அய்யன் தந்தது.
அகன்றோ அருகிருந்தோ என்னை செலுத்தும் ஆன்ம ஒளியின் மூலம் அய்யனே, எழுத்துச் சித்தர் பாலகுமாரனே. அன்னார் திருவடி சரணம் சரணம்.
89. ஸ்ரீமதி கேசன்
அய்யன் தந்த கொல்லூர் , சோழதேசபயண அழைப்பை மீண்டும் பெற காத்திருப்பதை சொல்கிறார்.
90. மணிமேகலை
குரு என்பவர் நம் எதிரில் இருக்கும் கடவுள் என்கிறார்.
91. வெங்கடேஷ்
உங்கள் ஸ்மிருதி....மூலம் நீங்கள் எங்களை வழி நடத்துவீர்கள்.
92. உஷா பாலகிருஷ்ணன்
பாலா மூலம் தனக்கு கிடைத்த அனாஹத காட்சியும் ஆசிர்வாதமுமே அனுபவ பகிர்வாய்.
93. நந்தினி ஜகதீஷ்
நெகிழ்வின் உச்சம். நீர் விதைத்ததை நாங்கள் வளர்க்கிறோம் என்ற உறுதியோடு இருக்கும் தம்பதியினர்.
94. முனைவர். சி.நா. மகேஸ்வரன்
ஒரு அனுபவம் பிரார்த்தனையோடு ஒரு கடிதம்.
95. நீலவேணி ஆனந்த்
அய்யன் கதைகளில் பெண்மை போற்றும் மேற்கோள் காட்டிய கடிதம், ஆகாயத்திற்கும் , நமக்கும் இருக்கும் இடைவெளியே பிரம்மாண்டம் என்ற அய்யன் வரிகளை சிலாகிக்கிறது.
96. S.V.ரமணன்
தினமணிக்கதிரில் தொடங்கி முகநூல் வரை நீளும் தனது பயணத்தை விவரிக்கிறார்.
97. சுப்ரமணியம் ராஜாமணி
ஏகன் அனேகனாக தத்துவத்தை சொல்லும் அனுபவம்.
98. ஸ்ரீநிவாசன் ரெங்கராஜன்
மாலனின் வரிகளை குறிப்பிட்டு அவர் மனம் கவர்ந்த சில நாவல்களை குறிப்பிட்டுள்ளார். " மரபு பேசாமல் குதர்க்கம் பேசிச் சிரிக்காமல் ஒரு விளக்கை ஏற்றியிருக்கிறாய். இதற்காக ஒரு தலைமுறை உனக்குக் கடன்பட்டிருக்கிறது" இந்த மாலன் வரிகளின் தீர்க்கதரிசனத்தை இன்று நாம் உணர்கிறோம்.
99. நவீன் பாலா
வாழ்த்தும் பிரார்த்தனையும்.
100. பாஸ்கர் சேஷாத்திரி
அவர் கண்கள் தீர்க்கம். அவரை நோக்க ஒருவர் சத்தியம் பழக வேண்டும். இந்த வரிகள் இவரது நட்பை புரிதலை காட்டுகிறது.
101. சரஸ்வதி சுவாமிநாதன்
அய்யன் வரிகளின் பாதிப்பு வாழ்வின் எல்லாநிலைகளிலும் அது காட்டிய வழி என்று பகிர்ந்த கட்டுரை. இது விழாமலரில் வந்தது என் பாக்கியம். விழாவில் பங்கேற்றது பூர்வஜென்ம புண்ணியம்.
102. இரா.கலைத்தென்றல்
தஞ்சைமண் காப்பாற்ற ஒரு கதறலான வேண்டல்.
103. லதா மனோகரன்
ஒன்றா...இரண்டா...பலநூறா பகிர என அசந்து நிற்கும் கடிதம்.
104. ஜெய்காந்த்
கடலோரக்குருவிகள் என்ற நாவல் அதன் தாக்கமே கடிதம்.
105. மௌனகுரு
அய்யனோடு நடந்த தன் முதல் சந்திப்பை உள் மற்றும் வெளிமுகமாகவும் பார்த்த நேர்மையான கடிதம்.
106. அ.கோவிந்தராஜூ
தன்னை மெல்ல புடமிட்ட அய்யன் நாவலின் வரிகளைக்கொண்டு தொடுத்த ஒரு மாலை.
107. வே.ம.குமரன்
ஒரு பரிமாணத்தின் நிறைவு நோக்கிய பயணக்கதை.
108. தீட்சண்யா
அய்யன் சொன்ன கருத்துக்களை apply செய்தல் அதுவே வாழ்க்கை.
109. கீதப்ரியன்
Excel file ல் இவர் கதை அதன் திரி அதன் கதாநாயகர்கள் அது தரும் தெளிவு என அவைகளை ஒன்றிணைத்து தன் நண்பர்களுக்கு புத்தகத்தோடு தரும் வழக்கம் கொண்டவர்.
110. P. சிவகாமி
தனக்கு கிடைத்த ஆசிர்வாதம் பற்றி எழுதியுள்ளார்.
111. S.உமா
அழைப்புக்காக காத்திருக்கிறேன் என்கிறார் அது அவர் வாழ்வை புரட்டிப்போடும் ஆசிர்வாதம்.
112. Dr. சீதாலட்சுமி சுப்பிரமணியம்
முன்னம் ஒரு ஜென்மத்து இரணியன் நான். என் மூர்க்கம் அடக்க வந்த நரசிம்மம் நீ....என்ற வரியின் விளக்கம் தேடாமல் வாழ்வை குருவிடம் தந்த சரணாகதி வாழ்க்கை.
113. ஜெகதீஷ்
நான்தான் உனக்கு அப்பா என்ற அய்யன் ஏன் ?
114. டாக்டர்.தமிழ் வேந்தன்
தனக்கும் அய்யனுக்கும் இடையே நடப்பது வெறும் physical meeting. அல்ல என்கிறார் இந்த மருத்துவர்.
115. வல்லநாடன். இல.கணேசன்
ஒரு பிரார்த்தனை என்னவெல்லாம் செய்யும் என்று காட்டும் கடிதம்
116. கா.சித்ரா
தனக்கு ஏற்பட்ட விபத்தின் போது பிரார்த்தனை செய்ததை குறிப்பிடும் கடிதம்.
117. ஜெய்கணேஷ் நாடார்
தன்னை தன் மனச்சக்ர வியூகத்தில் இருந்து காப்பாற்றியதை குறிப்பிடும் கடிதம்.
118. குன்னூர் கீதாலட்சுமி
அய்யன் வாழ்க்கை ஒரு வரலாறு என்கிறார்.
119. வீரபாண்டியன்
மனதின் வயது கூடியது. 18 வயதில் 35 வயது மனிதனாகிப் போனது. எழுதியது ஒரு படி நெல்லில் ஓர் நெல்தான் என்கிறார் இவர்.
120. ஷர்மிளா முருகன்
வினை முடித்தன்ன இனியள் என்ற வரியை சிலாகிக்கும் மனம்.
121. அருண்குமார்
உன்னை அறிந்தால் மேடைப்பேச்சு சாதிக்க துடிக்கும் ஒவ்வொருவரும் காணவேண்டிய காணொளி.
122. ராதிகா வெங்கட்
அகல்யா வில் தொடங்கிய பயணம் அவரை குரு காண்பதாக தொடரும் கடிதம்.
123. குற்றாலம் வள்ளி நாயகம்
இதுபோதும் தந்த உள் மாற்றங்களை தான் மேற்கொள்ள வேண்டிய பயணதூரம் பற்றி விளக்குகிறார்.
124. Pandian
I am still reading his books from which i find lot of advice and guidance to tackle different situations in life - both career and personal.
125. சுவாமிநாதன் - உமா சுவாமிநாதன்
ஒரு நட்பின் சிலாகிப்பு.
126. சபேஷ்
அய்யனின் சாரதியின் அன்பு.
127. டாக்டர்.கே.பாமாபதி
என்றேனும் ஒருநாள் சித்திக்கும் என்ற ஆசிர்வாதம் பெற்ற அனுபவம் சொல்கிறார்.
128. எஸ். ஆர். செந்தில்குமார்
நீண்ட....நிறைவான அய்யனோடான நேர்காணல்.
Comments
Post a Comment