இறையுணர்தலின் வனங்களில் - 5 - உண்மையான சுயம்
உ
யோகி ராம்சுரத்குமார்
சுவாமி ராமதீர்த்தரின் ஆங்கில கட்டுரைகள் கொண்ட 7 தொகுதி நூல்களின் தமிழ் மொழிப்பெயர்ப்பு
இறையுணர்தலின் வனங்களில்
By
உண்மையான சுயம்
சான் பிரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் ஹால் – ல் ஜனவரி 7, 1903 ல் ஆற்றப்பட்ட விரிவுரை.
அனைத்து வல்லமையும் பெற்ற இறையின் வடிவமாயிருக்கும் பெண்மணிகள் மற்றும் கனவான்களே,
ஜெர்மனியின் நாட்டுப்புறக் கதைகளில் ஒன்றில் ஒரு மனிதன் அவனது நிழலையே தொலைத்த கதையை நாம் கேட்டிருக்கிறோம் அது மிகவும் விசித்திரமானது. தனது நிழலை தொலைத்த மனிதன் அதற்காக வருந்த அவனது நண்பர்களும் அவனை கைவிட்டு விலகினர். அவனது எல்லா வளங்களும் அவனிடமிருந்து நகர்ந்தன. அவனும் மிகுந்த துக்கத்தில் இருந்தான். தனது நிழலின் இழப்பிற்காக தனது அனைத்து பொருள்களையும் இழக்கும் ஒருவனைப்பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள் ? நிழலை இழக்கும் மனிதனுக்கு கூட சில நம்பிக்கைகள் இருக்கக்கூடும். ஆனால் தனது பொருள்களை இழக்கும் ஒருவனுக்கு என்ன நம்பிக்கை இருக்கும் ? இந்த உடல் மீதா ?.
இந்த உலகில் பெரும்பான்மையான மக்கள் இவ்விதமாகவே இருக்கிறார்கள். பெரும்பாலான மனிதர்கள் தங்கள் நிழலினை இழக்காதவர்கள் ஆனாலும் தங்கள் பொருள்களை இழந்திருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். என்னவொரு அற்புதத்திலும் அற்புதம் ! உடல் என்பது வெறும் நிழல். உண்மையான சுயம், உண்மையான ஆத்மன் என்பதே நிஜம். பலரும் அவனது நிழல் , அவனது உடல் பற்றி கூறினாலும், வெகுசிலரே அவனிடம் அவனது உண்மையான சுயம், உண்மையான ஆத்மா , உண்மையான ஆத்மன். நீங்கள் யார் ? உங்களின் சொந்த ஆன்மாவை இழந்து மொத்த உலகத்தையும் பெறுவதால் என்ன பயன் ? ஆத்மனின் இழப்பு, இழப்பு, இழப்பு. என்ன இழப்பு ? குதிரையா ? குதிரையோட்டி ? குதிரையோட்டியின் இழப்பு. உடல் என்பது குதிரையைப் போன்றது. ஆத்மன் அல்லது உண்மையான சுயம் , ஆன்மா குதிரையோட்டியைப் போன்றது. குதிரையோட்டியே தொலைந்து போனவன், குதிரை அங்கேயே உள்ளது. ஆனால் பலரும் குதிரையைப்பற்றி சிறிதளவோ, அனைத்து தகவல்களையோ மட்டுமே தருகிறார்கள். ஆனால் நாமோ குதிரையோட்டி குறித்து சிறிதளவேனும் அறிய விரும்புகிறோம். ஏனெனில் அவரே குதிரையின் உரிமையாளர். இன்றிரவு நாம் குதிரையோட்டிப்பற்றி அல்லது உண்மையான சுயம் குறித்து முன்மொழிந்து அறிவோம். அது மிகவும் ஆழமான பாடம் இதற்கு உலகத்தின் தத்துவவியலாளர்கள் பலர் தங்கள் மூளைகளை செலவழித்து தங்களால் இயன்ற சிறப்பான விளக்கத்தைச் சொல்ல முயற்சித்திருக்கின்றனர். இது மிகவும் ஆழமான பாடம். அதன் நீதியை இந்த குறுகிய ஒரு மணிநேர விரிவுரைக்குள் அடக்குதல் சிரமம். இருப்பினும் நாம் முடிந்த அளவு சில கதையின் மூலமாகவோ அல்லது விளக்கம் மூலமாகவோ எளிமையாக்க முயல்வோம்.
இந்த பாடம் முன்பொரு சமயம் 15 அல்லது 16 வயது சிறுவனுக்கு விளக்கப்பட்டது அவனும் அதனை குறுகிய காலத்தில் மிகத்தெளிவாக புரிந்து கொண்டான். அந்த 15 அல்லது 16 வயது சிறுவனால் இந்த பாடம் தெளிவாக புரிந்து கொள்ளப்பட்டதெனில், நீங்கள் அனைவரும் முனைப்பான , சிதறல் இல்லாத கவனத்தை தந்தால் இந்த பாடத்தை முழுமையாக புரிந்துகொள்ளமுடியும். விளக்கப்படும் முறையாக அந்த சிறிய சிறுவனுக்கு எது பின்பற்றப்பட்டதோ அதே முறையே உங்களுக்கும் பயன்படுத்தப்படும்.
ஒரு சமயம் ஓர் இந்திய அரசனின் மகன் ஒருவன் இந்த ராமாவைக் காண மலைக்கு வந்து ஒரு கேள்வியை முன் வைத்தான், “ சுவாமி, சுவாமி, கடவுள் என்றால் என்ன ? “ இது மிகுந்த ஆழமான கேள்வி, கடுமையான பிரச்சனை. இந்த ஒரு கேள்விக்கான பதிலை மொத்த மதங்களும் விசாரிப்பதற்கான காரணமிருக்கிறது. நீங்களோ இதனை முழுவதுமாக மிக குறுகிய காலகட்டத்தில் அறிய விரும்புகிறீர்கள் என்று நான் பதில் கூற, அவன் , “ ஆம் , ஐயா ஆம் , சுவாமி எங்கு சென்றால் இது விளக்கப்படும் ? எனக்கு அதை விளக்குங்கள்.” என்று அந்த சிறுவன் கேட்டான். “ அன்பான இளவரசே , நீ கடவுள் பற்றி அறிய விரும்புகிறாயா ? கடவுளோடு நீ அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறாயா ? ஆனால் நீ அதற்கான விதிமுறைகளை அறியவில்லை. ஒரு மனிதன் இன்னொரு பெரும் ஆளுமையை சந்திக்க விரும்பினால் , முதலில் அவன் தனது அறிமுக அட்டையை அனுப்பி, அவன் தனது பெயர், முகவரியை பகிரவேண்டுமல்லவா ? இப்பொழுதோ நீங்கள் கடவுளை காண விரும்புகிறீர்கள். எனவே நீங்கள் உங்கள் அறிமுக அட்டையை கடவுளுக்கு அனுப்புதல் சிறந்தது. கடவுள் உன்னை நீங்கள யார் என்று அறிந்துகொள்ள அது உதவும். எனவே உங்கள் அறிமுக அட்டையை தாருங்கள், ராமா அதனை நேரடியாக கடவுளின் கையில் தருவான். கடவுளும் உங்களிடம் வருவார். நீங்களும் கடவுள் யார் என்று பார்க்க இயலும்” என்று கூற, “ நன்று “ என அந்த சிறுவன் சொன்னதோடு. “ இது மிகச்சரி , இது காரணமுள்ளது, நான் யார் என்பதை உங்களுக்கு நேரடியாகவே கூறிவிடுகிறேன். நான் அரசனின் மகன், ஹிமாலயத்தில் வசிப்பவன். இதுவே என் பெயர்.” இதனை அவன் ஒரு காகிதத்தில் எழுதினான். அதனை எடுத்து இந்த ராமா படித்தான். ஆனால் அந்த கடிதம் நேரடியாக கடவுளிடம் தரப்படாமல் அது இளவரசனிடமே திருப்பி தரப்பட்டு, “ ஓ இளவரசனே, நீ யார் என்பதை நீ அறியமாட்டாய். நீ கல்வியறிவில்லாதவனைப் போன்றவன், அறியாமையை கொண்ட தனது பெயரையே எழுத தெரியாத ஒருவன் உனது தந்தையை சந்திக்க முடியுமா, அரசனும் அவனை சிறப்பாக வரவேற்பாரா ? இளவரசே, நீங்கள் உங்கள் பெயரை எழுதவில்லையெனில், எப்படி கடவுள் உங்களை வரவேற்பார் ? முதலில் நீங்கள் யார் என்பதை எங்களிடம் கூறுங்கள், பின்னர் கடவுள் உங்களை அணைக்கும் கரங்களோடு வந்து ஏற்றுக்கொள்வார்.”
அந்த சிறுவன் இந்த பாடத்தை உள்வாங்கி சிந்தித்துவிட்டு கூறுகையில், “ சுவாமி, சுவாமி, இப்பொழுதான் நான் பார்க்கிறேன். நான் எனது சொந்த பெயரை எழுதுவதிலேயே தவறை இழைத்துவிட்டேன். நான் இந்த உடலின் முகவரியையே உங்களிடம் தந்திருக்குறேன். நான் யார் என்பதை அந்த காகிதத்தில் குறிப்பிடவே இல்லை.”
அந்த இளவரசனோடு உடனிருந்த உதவியாளனுக்கு எதுவும் புரியவில்லை. அந்த இளவரசனே தனது உதவியாளனுக்கு தெளிவாக விளங்கவைக்க முயன்றான். அவன் தனது உதவியாளனிடம், “ திருவாளர் அல்லது இன்னாரின் இன்னார் என்று அறிமுக அட்டையில் இருப்பவை யாரைக் குறிப்பிடுகிறது ? “. அந்த மனிதன் “என்னை” என்றான். அந்த உதவியாளனின் கையிலிருந்த கழியை வாங்கிக்கொண்ட இளவரசன் , “ திருவாளர் மற்றும் இன்னாரின் இன்னாரே இந்த கழி யாருடையது ? “ என வினவ, அந்த மனிதன், “என்னுடையது” என்றான். “நன்று, இந்த தலைப்பாகை யாருடையது ?” அந்த மனிதன், “ என்னுடையது” என்றான். இளவரசன் அவனிடம் , “ மிக நன்று. இந்த தலைப்பாகை உன்னுடையதெனில் , இந்த தலைப்பாகைக்கும் உனக்கும் ஒரு உறவு இருக்கிறது, இது உன் உடைமை, இதன் உரிமையாளர் நீ , அப்படியெனில் நீ இந்த தலைப்பாகையல்ல, தலைப்பாகை உன்னுடையது”. அதனைக்கேட்ட அவன், “ உண்மையில் இது மிகவும் தெளிவாக உள்ளது” என்றான். இளவரசன் உதவியாளனின் காதுகளை பற்றிக்கொண்டு, “இந்த காதுகள் யாருக்கு சொந்தமானவை ?” என்று கேட்க, அவன், “என்னுடையது” என்றான். இளவரசன் அதற்கு, “ மிகச்சரி, காதுகள் உன்னைச் சேர்ந்தவை அவைகள் உன்னுடையவை ஆனால் நீ காது அல்ல. அதேபோல் மூக்கு உன்னுடையதே ஆனால் நீ மூக்கு அல்ல. அப்படியெனில் , இந்த உடல் யாருடையது ? “ ( உதவியாளனின் உடலை சுட்டிக்காட்டி இளவரசன் கேட்டான் ) அந்த உதவியாளனோ, “இந்த உடல் என்னுடையது, இந்த உடல் என்னுடையது” என்றான். இளவரசன் அவனிடம், “ இந்த உடல் உன்னுடையதெனில் நீ இந்த உடலாக இருக்கமாட்டாய் ஏனெனில் இதுவரை எதுவெல்லாம் உன்னுடையது என்றாயோ அதுவெல்லாம் நீயல்ல வேறேதோவொன்றுடையது என்பதைப்போல் இந்த உடலுக்கும் நீ உரிமையாளன், தலைவன். ஆனால் இந்த உடலோ உனது உடையைப் போன்றது. உனது குதிரையைப் போன்றது. நீ அதன் உரிமையாளன் மட்டுமே. இப்பொழுது நீ யார் ?” என்று இளவரசன் வினவ, உதவியாளன் இளவரசன் கூற விழைவதைப் புரிந்து கொண்டான். “ சரி, சரி , நான் மனம், நான் மனம், நான் மனமாகத்தான் இருக்க வேண்டும்.” என்று இளவரசனிடம் ஒப்புக்கொண்டான்.
“இது மிகுந்த தெளிவாக உள்ளதா ?” என்ற கேள்வியொன்று இளவரசனிடம் வைக்கப்பட்டது. “ இப்பொழுது, நீ உனது உடலில் எத்தனை எலும்புகள் உள்ளது என்று கூற இயலுமா ? நீ காலையில் உண்ட உணவு இப்பொழுது உடலில் எங்குள்ளது என்று கூற இயலுமா ?” இளவரசனால் பதிலளிக்க இயலவில்லை, இருப்பினும் அவனது உதட்டில் இருந்து வெளிவந்த வார்த்தையானது, “ நன்று, எனது அறிவு அங்கே போக இயலவில்லை. நான் அதனை படிக்க இயலவில்லை. நான் உடலியல், உடற்கூறியல் போன்றவற்றை இதுகாறும் படித்ததில்லை. எனது மூளை இதனை பிடிக்க இயலவில்லை. எனது மனம் இதனை புரிந்து கொள்ள இயலவில்லை.” என்றான்.
இப்பொழுது இளவரசனை நோக்கி, “அன்பான இளவரசனே, இனிய சிறுவனே , நீ உனது மனம் இதனை புரிந்துகொள்ள இயலவில்லை என்றாய். உனது அறிவு அதனை அடைய முடியவில்லை என்றாய். உனது மூளையால் இதனை விளங்கிக்கொள்ள இயலவில்லை என்கிறாய். இவைகளை நீ கூறுவதன் மூலம் நீ மூளை, அறிவு மற்றும் மனம் போன்றவை உன்னுடையது என்பதை ஒப்புக்கொண்டு அவைகளை அனுமதிக்கிறாய். ஆனால் நீ அறிவோ, மூளையோ, மனமோ இல்லையெனில் நீ என்பது யார் ? சிந்தனை செய். தயவு செய்து சிந்தனை செய். மிகுந்த கவனத்தோடிரு, மிகச்சரியாக நீ யார் என்பதை எங்களுக்கு கூறு. அப்பொழுதான் கடவுள் உன்னருகே வருவார், நீ கடவுளை காண இயலும். கடவுளின் முன்னிலையில் நேரடியாக நீ உன்னை அறிமுகம் செய்து கொள்ள இயலும். நீ யார் என்பதை தயவு செய்து எங்களிடம் கூறு.”
அந்த சிறுவன் சிந்திக்கத் தொடங்கினான், சிந்தித்து, சிந்தித்து ஓரளவுக்கு மேல் செல்ல முடியாமல் தவித்தான். அவனுடைய உடல், “ எனது அறிவு, எனது மனம் இதற்குமேல் செல்ல இயலாது.” என்று கதறியது.
ஓ , எவ்வளவு உண்மையான வார்த்தைகள் இவை ! உண்மையில் மனம் அல்லது அறிவினால் உண்மையான தெய்வீகம் அல்லது உள்ளிருக்கும் இறையை அடைய இயலாது.
உண்மையான ஆத்மன், உண்மையான கடவுள் வார்த்தைகளுக்கும், மனதிற்கும் வசப்படாத ஒன்று.
அந்த சிறுவன் சிறிது நேரம் அமர்ந்து அவன் இதுவரை அடைந்த அறிவைப்பற்றி தியானிக்குமாறு பணிக்கப்பட்டான். “ நான் உடல் அல்ல. நான் மனமல்ல “ அப்படியானால் , அதனை உணர்ந்து, அதனை பயிற்சியில் ஈடுபடுத்தி, அதனை உணர்வின் மொழியில் திரும்பத்திரும்பவும் சொல்லி, செயலிலும் புகுத்தி நான் உடல் அல்ல என்பதை உணருமாறு கூறப்பட்டது. நீ இந்த எண்ணத்தோடு மட்டும், செயல் புரிந்து அதனை பயிற்சி செய். நீ உடல், மனம் கடந்து இருந்தால் , உங்களின் அனைத்து துக்கம், பயம் போன்றவைகள் உங்களை விட்டு விலகும். நீங்கள் உங்கள் உடல் அல்லது மனம் போன்றவற்றைவிட உயர்ந்தநிலைக்கு சென்றால், உங்கள் துக்கம் நின்றுபோகும், உங்களின் அனைத்து துன்பங்களும் விலகிப்போகும். இந்த உண்மையைப்பற்றி நீங்கள் இன்னமும் அதிகமாக அறியும்போது நீங்கள் உடல் மற்றும் மனம் கடந்து நிற்பீர்கள்.
அதன்பின் அந்த சிறுவன் சிறிதளவு தன்னைப்பற்றியே அறிந்து கொண்டான். அவனிடம்,” இளவரசே, சகோதரரே , இன்று என்னென்னவற்றை செய்தீர்கள் ? இன்று காலையில் நீங்கள் செய்த செயல்களையெல்லாம் தயவு கூர்ந்து நாங்கள் அறியலாமா?.”
அவன் தன்னுள் தனது செயல்களை வரிசைப்படுத்த தொடங்கினான். “ நான் அதிகாலையில் விழித்தெழுந்தேன். குளித்தேன், மற்றும் இந்த வேலையை செய்தேன், அந்த செயல்களை செய்தேன். பின்னர் எனது காலை உணவை எடுத்துக்கொண்டேன். அரும் நூல்கள் சிலவற்றை படித்தேன், சில கடிதங்களை எழுதினேன். சில நண்பர்களை சந்தித்தேன். சில நண்பர்களை வரவேற்றேன். மற்றும் சுவாமிக்கு எனது மரியாதையை செலுத்த இங்கே வந்துள்ளேன்.”
இப்பொழுது இளவரசனிடம் கேட்கையில், “ இது அவ்வளவுதானா ? இதற்கு நீங்கள் பெரிதாக எதையும் செய்யவில்லையே ? அவ்வளவுதானா ? சும்மா மீண்டும் யோசித்துப் பாருங்கள்.” அவன் சிந்தித்தான் பின்னர் மேலும் இதே மாதிரியான சிலவற்றை கூறினான். “ அது மட்டுமல்ல. நீங்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில், ஏன் கோடிக்கணக்கான செயல்களைகூட இன்று காலையில் இருந்து செய்திருப்பீர்கள் அவைகள் அனைத்தையும் குறிப்பிட மறந்திருப்பீர்கள். தயவு கூர்ந்து நீங்கள் செய்தவைகளை எங்களுக்கு கூறுங்கள்.”
இந்த வார்த்தையைக் கேட்ட இளவரசன் திடுக்கிட்டதோடு, தான் பெயர் குறிப்பிட்ட சில செயல்களைத்தவிர தான் எதையும் செய்யவில்லை என்றான். “ இல்லை நீ கோடிக்கணக்கான செயல்களை செய்திருக்கிறாய்.” என்று அவனிடம் கூற, “ அது எப்படி?,” என்று அவன் வினவினான்.
“அந்த நேரத்தில் அவைகளை பார்த்தது யார் சுவாமி ? “ என்று அவன் கேட்க, “ நீ உன்னை பின்தொடரும் என் முகத்தையும், நமது பின்னால் ஓடும் கங்கையாற்றையும் பார்த்தாயா ? “ என்று கேட்க, “ ஆம். உண்மையாக”. “நல்லது, நீ கங்கையாற்றை பார்த்திருக்கிறாய், இந்த சுவாமியை பார்த்திருக்கிறாய். ஆனால் கண்களில் இருக்கும் ஆறு தசைகளை யார் அசைத்தது ? கண்களின் அசைவிற்கு ஆறு தசைகள் காரணம் என நீ அறிவியா ? அந்த தசைகளின் அசைவை ஏற்படுத்துவது யார் ? இது வேறு எவரும் அல்ல, வேறு புறக்காரணிகள் அல்ல, அது உங்களின் சொந்த சுயமாக மட்டிலுமே இருக்கும். பார்வைக்கான கண்ணின் தசைகளை அசைப்பது உங்களின் சுயமே.”
அந்த சிறுவன், “ ஓ , உண்மையாகவா, அது ,’நான்' ஆகவே இருக்கக்கூடும். வேறெதுவும் அல்ல.”
“ நன்று. இப்பொழுது பார்ப்பது யார், இந்த விரிவுரையில் பங்கேற்பது யார் ?” அந்த சிறுவன் “நான்” , அது “நானே”. “ நன்று. நீ பார்க்கிறாய். நீ இந்த விரிவுரையில் பங்கேற்கிறாய் எனில் யார் உனது குரல் நாளங்களை அதிரச்செய்வது எது ? அது நீயாகவே இருக்கக்கூடும். யார் இன்று காலை உணவை எடுத்துக்கொண்டது ?.” அந்த சிறுவன், “நான்” அது “நானே” என்றான். “நன்று. இன்று காலை நீ சாப்பிட்ட உணவை யார் ஜீரணித்து மலமாக மாற்றுகிறார்கள். யார் அது ? தயவு செய்து கூறு அதனை ஜீரணிப்பது நீங்களாகவே இருக்கும். அந்தகாலத்தில் ஒரு மனிதன் கீழே விழுந்துவிட்டால், அது இயற்கையின் நிகழ்வாக இல்லாமல் ஏதேனும் ஒரு அமானுஷ்யத்தின் செயலாக கருதப்படும். அறிவியல் இத்தகைய காரணங்களை ஏற்காது. அறிவியலும், தத்துவமும் காரண காரியங்களை அனைத்திலும் தேடும்.”
“இங்கே நீ உணவை எடுத்துக்கொண்டு, கழிவறைக்கு சென்று அதன் கழிவை வெளியேற்றுகிறாய். அது ஜீரணமாவது உன்னாலேயே நிகழ்கிறது, வெளியில் உள்ள எந்த சக்தியும் வந்து அதனை ஜீரணிப்பதில்லை. அது உங்கள் சொந்த சுயமே ஆகும். ஜீரணத்தின் காரணம் உன்னுள் மட்டுமே உள்ளது, நீங்கள் இல்லாமலும் இல்லை.”
நன்று. இதுவரை கூறியவைகளை ஒப்புக்கொண்ட அந்த சிறுவனிடம் இப்பொழுது “ அன்பான இளவரசே. கொஞ்சம் சிந்தித்து பதில் அளியுங்கள். ஜீரணம் என்ற நிகழ்வு பல நூற்றுக்கணக்கான இயக்கங்களை கொண்டது. ஜீரண செயல்பாட்டில் உணவை மெல்லுதல், வாயில் உள்ள உமிழ்நீர் சுரத்தல் போன்ற பல செயல்கள் காரணமாகின்றன. அடுத்த செயலான ஆக்ஸிஜனேற்றம் நடந்து இங்கே ரத்தமானது உருவாக்கப்படுகிறது. அது நரம்புகளின் வழியே செல்கிறது. அதே உணவு தசைகள், எலும்புகள் மற்றும் ரோமங்களுக்கும் செல்கிறது. இதே சமயத்தில் உடலும் வளர்ச்சிக்கு ஆட்படுகிறது. இதுபோன்ற பல பெரும் செயல்கள் நடைபெறுகின்றன. இந்த உடலின் அனைத்து செயல்களும் உடலின் ஜீரணத்தோடு தொடர்புடையவை.”
“நீங்கள் உணவை எடுத்துக்கொண்டால், நீங்களே உங்கள் சுவாசத்திற்கு காரணம். நீங்களே ரத்தம் நரம்புகளின் வழியே பாய்வதற்கும் காரணம். நீங்களே உங்களின் ரோமங்கள் வளரக்காரணம். நீங்களே உங்கள் உடல் வளரக்காரணம். இங்கே எத்தனை விதமான செயல்கள், இயக்கங்கள், இவைகள் அனைத்தையும் நீங்கள் ஒவ்வொரு விநாடியும் செயல்படுத்தி வருகின்றீர்கள். “
அந்த சிறுவன் சிந்திக்கத் தொடங்கியதோடு அவன் கூறுகையில் , “ உண்மையாகவா , உண்மையாகவா ஐயா என் உடலில் , இந்த உடலில் ஆயிரக்கணக்கான செயல்களா அவைகளை அறிவு அறியாமல் இருக்கிறது. மனமானது அறியாமையில் இருக்கிறது. ஆயினும் இவைகள் நடைபெற்றே வருகின்றன. ஆயினும் இவைகளை நானே செய்துவருகிறேன். எனவே இவைகளை குறிப்பிடாமல் சிலவற்றை மட்டும் நான் செய்வதாக கூறியது எனது தவறே. மிக சில செயல்களே அறிவு அல்லது மனதின் மூலமாக நடைபெறுகின்றன. “
இதனை மேலும் தெளிவு படுத்திக்கொள்வோம். இந்த உடல் என்பது உங்களுடையது. அதில் இரண்டு விதமான செயல்கள் வெளிப்படுகின்றன. ஒன்று தன்னிச்சையானது மற்றொன்று நீங்கள் விருப்பப்பட்டு நடப்பது, விருப்பப்பட்டு நடக்கும் செயல்கள் அறிவு அல்லது மனதின் மூலம் நடைபெறுபவை, உதாரணமாக படித்தல், எழுதுதல், நடத்தல், பேசுதல் மற்றும் தண்ணீர் குடித்தல் போன்றவையாகும். இவைகள் மனம் அல்லது அறிவின் மூலம் நடைபெறுபவையாகும். இது தவிர்த்து பல்லாயிரக்கணக்கான செயல்கள் நேரடியாகவே நடைபெறுகின்றன அவைகள் மனம் அல்லது அறிவின் மூலமாக நடைபெறுவதில்லை அவைகள் சுவாசம், ரத்த ஓட்டம் மற்றும் ரோம வளர்ச்சி போன்ற மற்றவையாகும்.”
மக்கள் செய்யும் முக்கியமான தவறு யாதெனில் அவர்கள் தங்கள் அறிவு மற்றும் மனம் மூலம் செய்யப்படும் செயல்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள். மனமும், அறிவும் தொடர்புறாத மற்ற செயல்கள் அனைத்தையும் அவர்கள் கருத்தில் கொள்வதில்லை. அவர்கள் மொத்தமாகவே அவைகளை புறக்கணிக்கின்றனர். அவர்கள் தங்களின் சிற்றறிவு மற்றும் சிறிய அளவேயான மூளைக்குள் முடிவற்ற ஒன்றை சிறை வைக்க முயன்று அவர்கள் தங்களுக்கே மர்ம்மானவராகவும், மோசமானவராகவும் ஆகின்றனர். மக்களோ, “ ஓ , கடவுள் என்னுள்ளே இருக்கிறார்.” என்கிறார்கள். நன்று, சொர்க்கத்தின் சாம்ராஜ்ஜியம் உங்கள் உள்ளேயே உள்ளது, கடவுள் உங்களுக்குள் இருக்கிறார், விதைகள் கொண்ட அதன் கொட்டையே உங்களுக்குள் இருக்கிறது. அந்த விதையே நீங்கள் , கொட்டையின் ஓடு அல்ல. அந்த விதை உங்களுக்குள்ளே உள்ளது அல்லது நீங்கள் ஒன்றுமில்லாத ஓடாக இருக்கிறீர்கள்.
சில மக்கள் கூறுகிறார்கள். “ ஓ , ஐயா , நான் உண்கிறேன் மற்றும் இயற்கை செரிக்கிறது. ஓ , ஐயா, நான் இயற்கையானது தசைகளை நகர வைப்பதை பார்க்கிறேன். ஓ ஐயா, நான் இயற்கையே எனது குரல் நாளங்களை அதிர வைப்பதை கேட்டிருக்கிறேன்.”. சத்தியத்தின் பெயரால், சுதந்திரத்தின் பெயரால் கேட்கிறேன் நீங்கள் அந்த இயற்கையா அல்லது வெறும் உடலா , நீங்களே அந்த எல்லையற்ற கடவுள். நீங்கள் மூடநம்பிக்கை , முன்முடிவுகள் போன்றவற்றை துடைத்தெறிந்தால் நீங்கள் இந்த தகவலை உள்வாங்கி, அமர்ந்து சிந்தித்தால், ஆய்வு செய்தால் நீங்கள் ராமா என்று எதை அழைக்கிறீர்களோ அதே மனதை நீங்கள் அறிவீர்கள். நீங்களே விதையுள்ள கொட்டை, நீங்களே மொத்த இயற்கையாகவும் இருப்பீர்கள்.
உங்களில் பலர் இந்த வாதத்தின் வேகத்தை புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அந்த சிறுவன் , அந்த இந்திய இளவரசன் அதனை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. “நன்று” அவன் கூறினான். “ உண்மையாக , நான் அறிவைக் கடந்த ஒன்று என்பதை புரிந்து கொண்டேன்.” என்றபோது இளவரசனின் உதவியாளன் , “ ஐயா, எனக்கு தெளிவாக விளங்கவில்லை. எனக்கு இன்னமும் விளங்கவில்லை.” என்றான். அந்த உதவியாளன் கேட்டது நன்று, “ திருவாளர். இன்னாரின் இன்னாரே, நீங்கள் படுக்கைக்கைக்கு செல்கையில், நீங்கள் இறக்கிறீர்களா ? வாழ்கிறீர்களா ? “ என்று கேட்க, உதவியாளன் , “நான் வாழ்கிறேன். நான் இறக்கவில்லை.” “ உங்கள் அறிவு என்னாகிறது ?” அதற்கு அவன்,” நான் கனவிற்குள் சென்றாலும், உண்மையாக, அறிவு அங்கேயே இருக்கிறது.” “ உங்கள் ஆழ்நிலை உறக்க நிலையில் ( கனவுகள் அற்ற ஆழ்நிலை உறக்கம் ) அறிவு எங்கே இருக்கிறது, மனம் எங்கே உள்ளது?.”
அவன் சிந்திக்கத் தொடங்கினான். “நன்று. அது ஒன்றுமில்லாத வெறுமைக்குள் செல்கிறது. அங்கே அறிவோ, மனமோ இருப்பதில்லை.” “ ஆனால் நீ அங்கிருக்கிறாயா ? இல்லையா ?” அவன் கூறினான், “ ஓ, உண்மையாக , நான் அங்கிருக்க வேண்டும் ; நான் இறக்கமாட்டேன், நான் அங்கிருப்பேன்.” நன்று, ஆழ் உறக்கநிலையில், ஒரு துணியானது ஒரு குச்சியில் கட்டப்பட்டதைப்போலவோ, ஒரு மேலாடை ஒரு ஸ்டேண்ட்ல் எடுத்து மாட்டியிருப்பதைப்போல் அறிவானது இருப்பினும் அது எடுத்து வைக்கப்பட்டிருக்கும். நீங்கள் அங்கே இருப்பீர்கள். நீங்கள் இறக்க மாட்டீர்கள். அந்த சிறுவன் கூறினான், “ அறிவு அங்கே இருக்காது, நானும் இறக்கமாட்டேன். இதனை என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை.”
நன்று, இந்த சிறுவன் கேட்டுவிட்டான், “ ஆழ்நிலை உறக்கத்தை நீங்கள் அனுபவித்துவிட்டு எழுகையில் . நான் ஆழ்ந்த உறக்கத்தை அனுபவித்தேன். இரவில் எந்த கனவுகளும் இன்றி உறங்கினேன் என்று இத்தகைய அறிக்கையை நீங்கள் தருவீர்கள்தானே ?” அவன் “ஆம் “ என்றான். இது மிகவும் நுட்பமானது. அனைவரும் இதனை மிக கூர்ந்து கவனிக்க வேண்டும். “ நான் ஆழ்ந்து உறங்கினேன். நான் கனவுகளை காணவில்லை.ஆறுகளை காணவில்லை. மலைகளை காணவில்லை. அந்த நிலையில் தந்தை, தாய், வீடு, குடும்பம் போன்ற எதுவும் இல்லை. அனைத்தும் இறந்திருக்கும். அனைத்தும் காணாமல் போயிருக்கும். அங்கே ஒன்றுமில்லை. ஒன்றுமேயில்லை. நான் உறங்கினேன் அங்கே எதுவுமில்லை.” என்று நீங்கள் ஆழ்நிலை உறக்கத்தில் இருந்து எழுந்தவுடன் எப்போது சொல்வீர்கள். இது அந்த நிலையில் இருந்து வந்த மனிதனின் சாட்சியம். இத்தகைய நிலையில் ஒருவரும் இருப்பதில்லை. எனவேதான் அந்தநிலை குறித்து கூறிய மனிதனிடம் மாஜிஸ்ட்ரேட் அதனை ஒரு பேப்பரில் எழுதுமாறு கூறினார். மேலும் மாஜிஸ்ட்ரேட் அவனிடம், “ நன்று. இந்த அறிக்கை உண்மையா ? “ என்று கேட்க , “ ஆமாம். ஐயா” என்றான். “ நன்று, இந்த அறிக்கை நீ காதால் கேட்டதா ? அல்லது உனது சுய சாட்சியமா, நீ சாட்சியா ?” என வினவினார். அவன் , “ ஆமாம். ஐயா. நானே சாட்சியம். இது காதால் கேட்ட சேதியல்ல ? “ “ நீ சாட்சியமாக பேப்பரில் குறிப்பிட்ட இடம், மற்றும் நேரத்தில் ஒருவர். கூடவா இல்லை ? “ அவன் பதிலளிக்கையில் , “ ஆமாம் “ என்றான். “ என்ன நீ கூறுகிறாய் ? நீ மனிதன் இல்லையா ? “ “ ஆம். நான் மனிதன் தான்.” “ நல்லது, பின்னர் இந்த அறிக்கை உனது கூற்றின் படி உண்மையெனில், ஒரு மனிதன் கூட அங்கில்லை என்பது தவறாகிறது. அந்த ஒருவர் நீதானே அங்கே இருந்திருக்க வேண்டும். “
எப்போது நீ உனது ஆழ்நிலை உறக்கம் குறித்து சாட்சியம் அளிக்கிறாயோ அப்போதே நீ உறங்கவேயில்லை என்பதை அது உறுதிசெய்கிறது. அப்பொழுது ஒன்றுமில்லாத நிலையைப்பற்றி கூறுவது யார் ? நீ அறிவைக் கடந்த ஒன்று, உனது அறிவு தூங்கினாலும் நீ தூங்குவதில்லை. “நான் என்பது மனம், அறிவு கடந்த ஏதோவொன்று.”
இப்பொழுது அந்த சிறுவன், “ஐயா , நான் இது குறித்து புரிந்து கொண்டது யாதெனில், நான் இறை சக்தி, நான் எல்லையற்ற சக்தி கொண்டவன். அது ஒருபோதும் தூங்குவதில்லை. அது ஒருபோதும் மாறுவதில்லை. இளமையில் எனது உடல் வேறு, குழந்தையாக இருந்த மனத்தை நான் இப்பொழுது கொண்டிருக்கவில்லை. குழந்தைப்பருவத்தில் இருந்த உடல், மனம், அறிவு எதுவும் இப்பொழுது இல்லை. டாக்டர்கள் ஏழு வருடங்கள் கழித்து மொத்த உடல் அமைப்பும் மாறும் என்றும், ஒவ்வொரு கணமும் உடலானது மாறுதல் அடைகிறது என்றும் கூறுவர். ஒவ்வொரு விநாடியும் மனமானது மாறுகிறது. எண்ணங்கள், சிந்தனைகள் எவையெல்லாம் உங்களை சிறுவயதில் மகிழ்வித்தனவோ அவைகள் எல்லாம் இப்பொழுது எங்கே ? சிறிய வயதில் சூரியனை அழகான ஒரு கேக் என்றும் அவைகளை தேவதைகள் உண்ணும் என்றும், நிலாவை அழகிய வெள்ளியாகவும், நட்சத்திரங்களை வைர கற்களாகவும் நினைத்தீர்கள். இந்த சிந்தனைகள் இப்பொழுது எங்கே போயின ? உங்கள் மனமும், அறிவும் மொத்தமாக மாறுதலுக்கு ஆட்பட்டுவிட்டது. “ நான் குழந்தையாக இருந்தபோது, நான் சிறுவனாக இருந்தபோது, நான் வளர்ந்து எழுபது வயதை அடைந்தபோது” இதுபோன்ற குறிப்புகளை நீங்கள் தருகையில் அதில் உங்களின் சிறுவயது முதலே ஏதோவொன்று உங்கள் எழுபது வயதுவரை ஏதோவொன்று உங்களோடு இருந்திருக்கிறது. அதேபோல் , “நான் உறங்குகையில் , நான் ஆழ்நிலை உறக்கத்திற்கு சென்றுவிடுகிறேன்.” இத்தகைய குறிப்புகளும் “நான்” என்ற உண்மையான சுயமானது உங்களுக்குள் இருப்பதையும், அது கனவுலகிலும், ஆழ்ந்த உறக்கநிலையிலும், விழிப்புநிலையிலும் ஒன்றாகவே இருக்கிறது. நீங்கள் மயக்கமடைந்த நிலையில் இருக்கும்போதும், குளிக்கையிலும், எழுதும்போதும் அது ஒரேவிதமாகவே இருக்கிறது. இதனை சிந்தித்து, உள்வாங்கி குறித்து வைத்துக்கொள்ளுங்கள். மூன்று காலத்திலும் அது ஒன்றாகவே இருக்கும் மாற்றமடையாத ஒன்றே நீங்கள். நீங்கள் கடவுளை நேருக்கு நேராக சந்திக்கையில் உங்களை நீங்களே அறிவீர்கள். அப்போது உங்களின் நிஜமான அடையாளத்தை / முகவரியை குறிப்பிடுங்கள். உங்களிடம் கடவுள் உடனடியாக அறிமுகமாவார்.
அந்த சிறுவனும், இளவரசனும் தங்களை அறிய இயலும் என எதிர்பார்த்தார்கள். தாங்கள் மாற்றத்திற்கு ஆட்படாத, தூக்கத்தில் விழாத, நிலையான ஒன்று என்பதை உணர்ந்த்தோடு அவர்கள் கடவுளையும் அறிய விரும்பினார்கள். அப்பொழுது இளவரசனிடம் , “ சகோதரரே பல மரங்கள் இங்கே வளர்கின்றன. இந்த மரமானது வளர உதவும் சக்தியும் , அந்த மரம் வளர உதவும் சக்தியும் வேறுவேறா ?” அதற்கு இளவரசனோ, “ இல்லை, இல்லை இரண்டும் நிச்சயமாக ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்.” “ இப்பொழுது இந்த மரம் வளர உதவும் சக்தியும், அந்த விலங்குகள் வளர உதவும் சக்தியும் ஒன்றா ? “ அதற்கு பதிலளிக்கையில் , “ இல்லை, இல்லை, அது வேறுவேறாக இருக்க இயலாது. அவைகள் ஒன்றாகவே இருக்கக்கூடும்.” “ சரி நட்சத்திரங்களின் நகர்வுக்கு உதவும் சக்தியும், இந்த ஆறுகள் பாய்வதற்கு உதவும் சக்தியும் ஒன்றா ? வேறா ? “ அதற்கும் அவன், “ அவைகள் வேறாக இருக்க முடியாது. அவைகளும் ஒன்றாகவே இருக்கும்.”
நன்று. இந்த மரம் வளர உதவும் சக்தியும், உங்களின் உடல் வளர உதவும் சக்தியும், உங்களின் ரோமம் வளர உதவும் சக்தியும் வேறுவேறாக இருக்க இயலாது. இயற்கையின் பிரபஞ்ச சக்தி, பிரபஞ்ச இறைத்தன்மை அல்லது நாம் அறியாத ஏதோவொன்றே அது. நட்சத்திரங்களை ஒளிர செய்கிறது. எது உங்கள் கண்களை சிமிட்ட வைக்கிறது. எது ரத்த ஓட்டத்தை நரம்புகளில் ஓட வைக்கிறது அதனை நீங்கள் உங்களுடையது என்பீர்கள் அப்படியெனில் நீங்கள் யார் ? உணவினை செரிக்க வைக்கும் சக்தி எது ? அது அறிவையும், மனதையும் கடந்த ஒன்று. அந்த சக்தியே மொத்த பிரபஞ்சத்தையும் ஆட்சிசெய்கிறது. நீங்களும் கடவுளைப் போன்றவரே. அதே சக்தி, ஆற்றல், அதே பொருள் அதனை நீங்கள் எவ்விதமாக வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். அதுவே எங்கும் விரவி இருக்கிறது. அதுவே நீங்கள்.
அந்த சிறுவன் ஆச்சரியப்பட்டு கூறினான். “ உண்மையாகவா, உண்மையாகவா, நான் கடவுளை அறிய விரும்புகிறேன். நான் எது கடவுள் என்ற கேள்வியை முன்வைத்தேன். நான் எனது சொந்த சுயத்தையே கண்டறிந்தேன், எனது உண்மையான ஆத்மனே கடவுள். நான் கேட்டது மிக சாதாரண கேள்வி, நான் என்னையே முதலில் அறியவேண்டும். நான் யார் என்பதை அறிந்தால் கடவுளை அறிய இயலும்.” இவ்விதமாகவே கடவுள் அறியப்பட்டார்.
சத்தியத்தை அறிவதில் உள்ள ஒரே கடினமான வழி, மக்கள் தங்களின் குழந்தைத்தனமான விளையாட்டை விளையாடுகிறார்கள். குழந்தைகள் பலசமயம் தங்களுக்கென ஒரு விருப்பமான உணவுத்தட்டையே விரும்புவார்கள். அந்தக் குழந்தைகள் அந்த விருப்பமான தட்டில் உணவை பரிமாறினால் மட்டுமே உண்பேன் என்று அடம்பிடித்துக் கூறும். அந்தக் குழந்தைகள், “ நான் எனது தட்டில்தான் சாப்பிடுவேன். நான் எனது உணவை வேறெந்த ஒரு தட்டிலும் சாப்பிட மாட்டேன்.” என்று கூறும். ஓ குழந்தைகளே ! அந்த ஒரு தட்டு மட்டிலும் உங்களுடையதல்ல. உங்கள் வீட்டில் உள்ள அனைத்து தட்டும் உங்களுடையதே. இது ஒரு தவறு. மக்கள் தங்களை அறிந்து கொண்டால் அவர்கள் தங்களை அறிந்து கொள்வதோடு உண்மையான சுயமான எல்லாம்வல்ல இறைவனையும் அறிந்து கொள்வார்கள். அப்போது அவர்களின் மூளையில் தனது விருப்பமான தட்டிற்கு இடம் இருக்காது. “ என்னால் எவையெல்லாம் செய்யப்பட்டதோ அவையெல்லாம் எனது மூளையால் மட்டுமே செய்யப்பட்டவை. எது எனது அறிவு மற்றும் மனதால் செய்யப்பட்டதோ அவைகளும் என்னுடையதே. வேறேதும் என்னிடமில்லை. நான் கோருவது எனக்கு உணவு பரிமாறப்படும் அந்த குறிப்பிட்ட தட்டு மட்டிலுமே.” இங்கேதான் , இவ்விதம்தான் சுயநலம் உண்டாகிறது. அவர்களுக்கு அனைத்தும் இந்த தட்டின் மூலம் நடைபெற வேண்டும் என்றும் அதற்கு ஒரு அடையாளத்தை உருவாக்குகின்றனர். இதற்கு காரணம் சுயநலம். அனைத்து கவலைகளுக்கும், துன்பங்களுக்கும் இதுவே காரணமாகிறது. இத்தகைய தவறான எண்ணங்களை விடுத்து, உங்கள் சுயமே அனைத்துமாக இருக்கிறது என்பதை உணருங்கள். உங்கள் சுயநலம் மற்றும் அகங்காரத்தை விட்டு நீங்கள் இந்த கணத்தில் மகிழ்வோடு இருந்தால் இந்த மொத்த பிரபஞ்சத்தோடும் இயைந்து இருப்பீர்கள். இளவரசனிடம் , “ எது உன்னுடைய இடம் ? “ என்று கேட்கப்பட்டது. அவனும் ஒரு பெரு நகரத்தின் பெயரை கூறினான். ஓ சிறுவனே, அந்த பெரு நகரம் மட்டுமல்ல, மொத்த மாகாணம், மொத்த நாடும் உன்னுடையதே. நீ வசிக்கும் மாநகரம் மட்டுமல்ல, இந்த அழகிய நிலப்பரப்பு, இந்த உயரிய ஹிமாலயம் அனைத்தும் உன்னை சேர்ந்ததே இந்த சிறிய நகரம் மட்டுமல்ல.
அறிவும், மூளையும் நீங்கள் வாழும் நகரத்தை உங்களுடையது என்று கூறி மற்றவற்றை புறக்கணிப்பதைப் போல், உங்கள் சுயத்தையும், ஆத்மனையும் புறக்கணிக்கிறது. இந்த பரந்துவிரிந்த உலகம், பிரபஞ்சம், பால்வீதிகள் அனைத்தும் உன்னுடையவையே. உங்களின் பிறப்புரிமையை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கவலை, துன்பங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
மக்கள் சுதந்திரம் மற்றும் இரட்சிப்பு குறித்து பேசுவார்கள். முதலில் எது உங்களைப் பிணைத்திருக்கிறது ? என்பதை உணருங்கள். நீங்கள் சுதந்திரம் மற்றும் இரட்சிப்பைப் பெற விரும்பினால், உங்கள் பிணைப்பின் காரணத்தை அறியவேண்டும். இது குரங்கை பிடித்த கதையாகவே இருக்கும். இந்தியாவில் குரங்குகளை வினோதமான முறையில் பிடிப்பார்கள். ஒரு குறுகிய வாய் உடைய ஒரு பாத்திரத்தில் சில உணவுப்பொருட்களையும், சில பருப்புகளையும் போட்டு வைப்பார்கள். குரங்குகள் வந்து அந்த பாத்திரத்தில் கைகளை விட்டு கைகள் நிறைய பருப்புகளை அள்ளும், அதன் கைகள் பருப்புகளை அள்ளியவுடன் பெருத்து அந்த பாத்திரத்தில் இருந்து வெளிவர இயலாமல் தவிக்கும். இவ்விதமாகவே குரங்குகள் பிடிபடும்.
நாம் முதலில் எது நம்மை பிணைத்திருக்கிறது என்பதை அறிய வேண்டும். இந்த பரந்து விரிந்த பெரும் உலகத்திலும், அழகான வனங்களிலும் குறுகிய வாய் உடைய பாத்திரங்கள் உண்டு. அந்த குறுகிய வாயைக் கொண்ட பாத்திரம் என்ன ? அது உங்கள் மூளை. உங்கள் சிறிய மூளை. குறுகிய வாயைக் கொண்ட பாத்திரம். அதில் மூளை அல்லது அறிவின் மூலமாக கிடைக்கப்பெற்ற சில பருப்புகள் உண்டு. “ நானே அந்த மனம், நானே அறிவு “ என அனைவரும் கூறி இந்த பருப்புகளின் மீதான தனது பிடியை அதிகமாக்கிக் கொள்கிறார்கள். அதுவே உங்களை அடிமையாக்குகிறது. அதுவே உங்களை துன்பம், பயம், பதட்டம் மற்றும் பலவிதமான பிரச்சனைகளுக்கும் காரணமாகிறது. அதுவே உங்களைப்பிணைத்து இந்த உலகத்தின் சகல துன்பங்களுக்கும் காரணமாக அமைகிறது. நீங்கள் இரட்சிப்பை, சுதந்திரத்தை விரும்பினால் உங்கள் கைகளின் பிடிகளை விடுவியுங்கள். இந்த வனம் முழுவதும் உங்களுடையதே. நீங்கள் மரம்விட்டு மரம்தாவி பலவிதமான பழங்களையும், பருப்புகளையும் உண்ணலாம். அனைத்தும் உங்களுக்கானதே. உங்களின் சுயநல அறியாமையை விரட்டுங்கள். நீங்களே உங்களுக்கு சொந்தமான மீட்பர்.
ஏராளமாக இருக்கும் இடத்தில் பஞ்சத்தை ஏற்படுத்துதல்
( இது நியாமா ? இல்லை, அது நியாமில்லை, அது மாறவில்லை )
ஏராளமான பொய்களைக் கொண்டு பஞ்சத்தை ஏற்படுத்தல்
இதுவே உன் எதிரி, உனது இனிமையான சுயத்திற்கு இழைக்கப்படும் கொடூரம்
அவ்வாறு இருக்கக்கூடாது, அதனை செய்யாதீர்கள்
உள்ளடக்கத்தை உங்களுக்குள் புதைக்கும் நீங்கள்
கழிவையும், அசுத்தத்தையையுமே செய்கிறாய்
அசிங்கமாகவும், மோசமாகவும் இருக்காதீர்கள்.
இந்த அச்சமே அனைத்து வளங்களையும் உங்களை மூளை என்னும் சிறிய சிறைக்குள் இடுகிறது.
நீங்கள் உங்கள் மூளை எல்லையற்ற சக்தியை கொண்டது என்பதையும், இங்குள்ள அனைத்துடனும் உங்கள் ஒருமைத்தன்மையை நீங்கள் உணர்ந்து கொண்டால் , அது உங்களை இந்த மொத்த உலகத்தோடும் ஒத்திசைவை ஏற்படுத்தும்.
ஓ, நாம் நீண்ட காலம் காத்திருக்க முடியாது
நாமும் கப்பலை எடுத்துக்கொள்வோம், ஆத்மா ( இங்கே அறிவே ஆத்மா எனப்படுகிறது)
மகிழ்ச்சியான நாம், தடமில்லாத கடலில் இறங்குவோம்
அறியாத கரைகள் பற்றிய அச்சமின்றி பரவச அலைகளில் பயணிப்போம்
வீசும் காற்றின் மத்தியில் ( ஓ ஆத்மாவே நீ என்னை அழுத்துகிறாய், நானோ உன்னை அழுத்துகிறேன் )
நாம் கடவுளின் பாடலை பாடுகிறோம்
இனிமையான சுய ஆய்வு எங்களது மந்திரத்தை கோஷமிடுகிறது
சிரிப்பும், முத்தங்களும் உடனுண்டு
( மற்றவர்கள் கண்டனம் செய்யட்டும், மற்றவர்கள் தங்கள் பாவத்திற்கும் , மன உளைச்சலுக்கும், அவமானத்திற்கும் அழட்டும், )
ஓ ஆத்மாவே , நீ என்னை எந்த
ஆச்சாரியனையும் விட மகிழ்விக்கிறாய் , ஓ ஆத்மாவே , நாமும் கடவுளை நம்புகிறோம்
ஆனால் கடவுளின் மர்மத்தில் நாம் தாமதிக்கிறோம்
ஓ ஆத்மாவே , நீ என்னை மகிழ்விக்கிறாய்
இந்த கடல்கள் அல்லது மலைகளில் பயணித்தல், அல்லது இரவில் எழுந்திருத்தல்
எண்ணம், அமைதியான எண்ணம் காலம், வெளி மற்றும் இறப்பு போன்றவை நீரின் ஓட்டத்தைப் போன்றது.
எல்லையற்றதின் பகுதிகளே எனை உண்மையாக தாங்குங்கள்
நான் யாருடைய காற்றை சுவாசிக்கிறேன், அதன் சிற்றலைகள் கேட்கின்றன, என்னை முழுவதுமாக விட்டுவிடுங்கள் என்று,
கடவுளே உன்னில் என்னை நீராட்டுங்கள்
நானும் என் ஆத்மாவும் உன்னுடைய வரம்பில் இருக்க வேண்டும்
ஓ ஆழ்நிலையே,
பெயரிடப்படாத மூச்சின் இழைகளே
ஒளியின் ஒளியே, பிரபஞ்சத்தை வெளியேற்றுகிறது, நீயே அதன் மையமாக இருக்கிறாய்.
நீயே நல்ல, அன்பான சத்தியத்தின் மையம்
நல்லொழுக்கம், ஆன்மீக நீர்த்தேக்கத்தின் நீரூற்று
( எனது ஆழ்நிலை ஆத்மாவே - தீராத தாகமே – அங்கே காத்திருக்கவில்லையா ? எங்கோ எங்களுக்காக மகிழ்வோடு காத்திருப்பது சரியானதா தோழரே ? )
நட்சத்திரங்கள், சூரியன்கள், வட்டமிடும் பிற அமைப்புகள்
அவைகளின் சுழற்சி சரியான , பாதுகாப்பான, ஒருங்கிணைவோடு இருக்க
விண்வெளியின் வடிவமற்ற, பரந்த தன்மையின் குறுக்காக
நான் எப்படி சிந்திக்க வேண்டும், நான் எனது சுயம்விட்டு சென்றால் எப்படி நான் சுவாசிப்பது, நான் எப்படி பேசுவது,
இந்த உயர்ந்த பிரபஞ்சத்தை நான் எப்படி தொடங்குவது ?
நான் இறை சிந்தனையில் சுருங்குகிறேன்,
இயற்கையின் அற்புதங்கள், காலம், வெளி மற்றும் மரணம்
இவைகளில் திணறி, திரும்பி அழைக்கிறேன்
ஓ , ஆத்மாவே நீ உண்மையானவன்
நீ காலத்தை பொருத்துகிறாய், மரணத்திடம் புன்னகைக்கிறாய்
விண்வெளியின் பரந்த தன்மையை நிரப்புகிறாய்
நட்சத்திரம் அல்லது சூரியனைவிட அது பெரியது
எல்லலையற்ற, ஓ ஆத்மாவே உனது முன்னோக்கிய பயணத்தில்
நமது அன்பைவிட வேறெது பரவலாக இருக்கும் ?
நமது அபிலாஷைகள், விருப்பங்கள், இலட்சியங்கள், கனவுகள் எது ? ஓ , ஆத்மாவே
உனது இலட்சிய கனவு என்ன ? பரிசுத்த திட்டம் , முழுமை, வலிமை என்ன ?
எவ்வளவு இனிமையான விருப்பத்தை பிறருக்காக இழக்கிறாய் ?
பிறருக்காக அனைத்து துன்பங்களையும் ஏற்கிறாய் ?
முன்பே கணக்கிட்டபடி, ஓ ஆத்மாவே , எப்போது காலம் கனியும் ?
பல வானிலைகளைக் கடந்த கடற்பயணம் முடிந்தது
கடவுளை அடையும் குறிக்கோளும் நிறைவேறியது
நட்போடு, அன்பு பரிபூரணமானது, மூத்த சகோதரனைக் கண்ட
இளைய சகோதரன் அவனது பாசத்தின் கரங்களில் உருகிறான்.
உண்மையான சுயத்தில் நட , பயணப்படு, அனைத்து மூடநம்பிக்கைகளையும் ஒழி, இந்த உடலின் மூடநம்பிக்கைகளையும் தான். இந்த சிறிய உடலின் மனோவசியத்தை விரட்டு, நீங்கள் உங்களின் உண்மையான சுயத்தை, மூளை மற்றும் உடலால் வசியப்படுத்தி உள்ளீர்கள். அதனை விரட்டி பயணியுங்கள். எது நித்தியமோ, எது உண்மையோ அதனை நோக்கி முன்னேறுங்கள். அந்த உண்மையான சுயத்தை நோக்கி நகருங்கள் அதுவே இந்தியாவைவிட அதிகமான பாதை.
இந்தியாவைவிட அதிகமான பாதை !
இதுபோன்ற தொலைதூர பறத்தலுக்கு உனது சிறகுகள் சிறந்ததா ?
ஓ ஆத்மாவே, இது போன்ற பயணங்களை மேற்கொள்கிறீர்களா ?
இதுபோன்ற தண்ணீரில் வெளியேறுகிறீர்களா ?
சமஸ்கிருதத்திற்கும், வேதங்களுக்கும் கீழே ஒலிக்கிறதா ?
உங்களின் வளைவுகளை கட்டவிழித்து விடுங்கள்.
உங்கள் கடுமையான பாதை, கரையோரங்களை கடந்து செல்லுங்கள்
உங்கள் கழுத்தை நெரிக்கும் பிரச்சனைகளில் இருந்து தேர்ச்சிபெறுங்கள்
இந்தியாவைவிட அதிகமான பாதை !
பூமி மற்றும் வானத்தின் ரகசியமே !
உங்களிடமிருந்தே கடல் நீர், சிற்றோடை மற்றும் ஆறுகள் !
உங்களிடமிருந்தே காடுகளும், வயல்களும், வலுவான மலைகளும் !
உங்களிடமிருந்தே சிகப்பு விடியலும், சாம்பல் பாறைகளும் !
உங்களிடமிருந்தே மேகம், மழை, பனி !
ஓ ! பகல் - இரவுகளே உங்களுக்கான பாதை !
உங்களின் உடலை விட்டு உயருங்கள் , நீங்களே அனைத்துமாவீர்கள் , இவைகளுக்கான வழிகளையும் நீங்கள் பெறுவீர்கள். இவையனைத்தும் நீங்கள்தான் என்பதையும் உணர்வீர்கள்.
ஓ சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களே ! சிரியஸ் நட்சத்திரம் மற்றும் வியாழனே !
உங்களுக்கான பாதை !
பாதை, உடனடியான பாதை ! எனது நரம்புகளில் இரத்தம் கொதிக்கிறது !
தொலைவில், ஓ ஆத்மாவே ! நங்கூரத்தை உடனடியாக மேலேற்று !
நங்கூரத்தின் கயிறுகளை துண்டித்துவிடு – இழுத்துச் செல் – ஒவ்வொரு மணல்துகளையும் அசையுங்கள் !
நீண்டகாலமாக பூமியில் நிற்கும் மரமாக நாமில்லையா ?
வெறும் முரடனைப் போல சாப்பிட்டும், குடித்தும் நாம் நீண்டகாலமாக வளரவில்லையா ?
நீண்ட காலமாக புத்தகங்களைக் கொண்டு , இருட்டாகி திகைக்கவில்லையா ?
ஆழமான நீர்நிலைகளுக்கு மட்டிலும் பயணிக்கவும்,
பொறுப்பற்ற ஆத்மா, ஆராய்ந்து நான் உன்னுடன், நீ என்னுடன் இருக்கிறாய் என்கிறது
இதுவரை கடற்படைகள் பயணிக்க துணியாத இடத்திற்கும் நாங்கள் கட்டுபட்டிருக்கிறோம்
நாங்கள் கப்பலுக்கும், எங்களுக்கும் ஆபத்து தருபவைகளையும் மேற்கொள்வோம்
எனது துணிவான ஆத்மாவே !
ஓ, தொலைவிற்கும் தொலைவு நோக்கி பயணியுங்கள் !
ஓ, துணிவான மகிழ்ச்சி, ஆனால் பாதுகாப்பானது ! அவையனைத்தும் கடவுளின் கடல்கள் அல்லவா ?
ஓ தொலைவிற்கும் தொலைவு நோக்கி பயணியுங்கள் !
ஓம் ! ஓம் !! ஓம் !!!
“
அருமையான தகவல்கள்.. சத்தியத்திற்கான ஒளி விளக்குகள்
ReplyDelete