எழுத்துக்கு எழுபது - எதிரொலி - 2
31. இரா.கோமகன்
எங்களிடையே காலம் போட்டிருக்கும் முடிச்சு, இறுக்கமானது, இதமானது, பவித்திரமானது. எல்லாவற்றையும் தாண்டி அது ஜென்ம பந்தம் என்கிறார் கோமகன்.
32. N. ஜெகநாதன்
இது ஒரு அற்புத ஆத்மா. உன்னத பிறப்பு. அடைந்தோர் மட டுமே உணரும் சூட்சமம்.
33. ரவிச்சந்திரன் ( க்ளிக் ரவி )
நான் திமிர் பிடிச்சவண்டா. அவ்வளவு சீக்கிரமா சோர்ந்து போகமாட்டேன். பழைய ஃபார்முக்கு வந்துண்டிருக்கேன் என்ற பாலகுமாரனின் டிரைவ் தான் எனக்குப்பிடித்தது என்கிறார் ரவிச்சந்திரன்.
34. முனைவர். K.P.வித்யாதரன்
நாம் சந்திக்க செல்லும்போது சில மந்திரங்களையும் அவர் சொல்லிக்கொண்டு இருப்பார். நாம் அவரை எதிர்கொள்ளவது என்பது வெறும் ஸ்தூலமாக அல்ல என்பதை நான் பலமுறை உணர்ந்துள்ளேன். அவரின் இருப்பே ஒரு சக்தி வளையத்தை உருவாக்குவதை நான் உணர்ந்திருக்குறேன். என்கிறார் வித்யாதரன்.
35. யதார்த்த ஜோதிடர் ஷெல்வி
பாலகுமாரன் எழுத்தாளர் என்பது ஒரு சட்டை. உண்மையில் அவர் வேறு. இதை உணர்ந்த பலர் அவருக்கு அருகே உண்டு. அந்த எழுத்து இனிப்பு. ஈர்க்கப்படுவீர்கள். மகரந்தம் இன்னும் ஆழ இருக்கிறது. நல்ல தலையெழுத்து உள்ளோர்க்கு உணரக்கிடைக்கும்.
36. நர்மதா இராமலிங்கம்
மானுடத்தின் துயரங்களிலிருந்தும் வாழ்வின் அவலங்களிலிருந்தும் தன்னை மீட்டெடுத்துக் கொள்வதும், தன்னுடைய மீட்சியை எல்லோருக்குமாக்குவதுமான எழுத்து தன்னுடைய முதல் பதிப்புரையில் எழுதியதை நினைவு கூர்கிறார் ராமலிங்கம்.
37. திருமகள் நிலையம் திருப்பதி
உடையார், கங்கைகொண்ட சோழன், பகவான் யோகிராம்சுரத்குமார் சரிதம் இம்மூன்று புத்தகமே அதிக விற்பனையாவதாக சொல்கிறார்.
38. அசோகன்
அசோகன் வாழ்க என்ற பாலகுமாரன் குரல் தன் 80 வது வயதில் ஒலிக்க வேண்டும் என்பதே தன் ஆசை என்கிறார்.
39. தமிழ் பண்டிதை ப.சு.சுலோச்சனா
இன்று உன்னைப் பார்த்து , நீ அங்கேயே பளிச் பளிச் என்று எழுதுகிற தத்துவங்களைப் படித்து உள்ளம் குளிர உன்னை வாழ்த்துகிறேன்.
40. கமலா பாலகுமாரன்
சாந்தாவிற்கும் தனக்கும் அசைக்க முடியாத ஒற்றுமை வர என் கணவரே காரணம் என்கிறார்.
41. சாந்தா பாலகுமாரன்
சூர்யாவை கருவில் சுமந்தப்போது யானை கர்ப்பம் என்று தி.ஜா. சொன்னதையும். பாலகுமாரனை let him do thapas என்று யோகி கட்டளையிட்டதையும் குறிப்பிட்டிருக்கிறார். உணர்வு பிரவாகமான கட்டுரை.
42. சிந்தாரவி
இளம் வயது குறும்பு, அவரின் படைப்பாற்றல், சித்திரத்திறமை, என பலதும் பகிர்கிறார்.
43. ஸ்ரீகௌரி கணேஷ்
பெரு மழையில் ஊர் ஒடுங்க வா போய் புயல் பார்க்கலாம் என்று பீச்சிற்கு கூட்டிப்போய் ஆளேயில்லாத மெரினாவில் , இடியும், மின்னலும், பேய்க்காற்றும் வீச எனக்கும் சூர்யாவுக்கும் இயற்கையை அனுபவிக்கக் கற்றுக் கொடுத்த அப்பா. என்கிறார் மகள். ஸ்ரீகௌரி கணேஷ்.
44. R. கணேஷ்
தனக்காய் தன் நலனுக்காய் இடையறாது பிரார்த்தனை செய்யும் மாமா பாலகுமாரனை வணங்கும் மருமகன் கணேஷ்.
45. சூர்யா பாலகுமாரன்
இயக்குனராக ....சத்தியத்தை ஸ்கீரின் ப்ளே ஆக்கியிருக்கும் கடிதம்.
46. சுகன்யா சூர்யா
எளிமை இருக்கும் இடத்தில் நேர்மை இருக்கும். நேர்மை இருக்கும் இடத்தில் தான் சந்தோஷம் இருக்கும். சந்தோஷம் இருக்கும் இடத்தில்தான் தெய்வம் இருக்கும். இது தெய்வங்கள் வாழும் வீடு. என்கிறார் மருமகள் சுகன்யா.
47. டாக்டர்.ராதிகா பாலகிருஷ்ணன்.
அவரின் சத்சங்கம் அவரின் அசுர பலம் என்கிறார்.
48. சு.சீதாராமன்
நீண்ட கடிதம்....வரலாற்று முக்கியத்துவம் பெறும் பதிவு. கடலோரக்குருவிகள் பற்றிய இனிய நினைவு.
49. சுபம் கணேசன்
மனதிற்கும் உடம்பிற்கும் ஒரு சக்தியை பிரவாகமாக பாய்ச்சும் தட்டு என்று அவரின் நெஞ்சில் தட்டிய தட்டினை குறிப்பிடுகிறார்.
50. கோதண்டராமன்
Imitation is the best way of recognition என்பதை விளக்கியுள்ளார். Whatever balakumaran says you do it என்று யோகி சொன்ன நிகழ்வையும் பகிர்ந்திருக்கிறார். கோதண்டராமன் சார்.
51. ஜெயகோபால்
யோகாவை பற்றிய அய்யனின் அக்கறை வெளிப்படுகிறது கடிதத்தில்.
52. D.R.லலிதா
பாலகுமாரனை தன் வைத்தியநாதனாக கொண்டாடும் கடிதம்.
53. அருள்மணி
பூர்வ ஜென்ம புண்யமிது என்ற பாடலில் முழுவாழ்க்கையையும் சொல்லிவிடுகிறார் அருள்மணி.
54. பாக்கியலக்ஷ்மி
அர்ப்பணிப்பு. அமதக்குடம் என்று தெரிந்தால்தானே அமுதம் பருக முடியும்.
55. சம்பத் லக்ஷ்மி பாலாஜி
குரு உணர்ந்த தருணம். யோகிராம்சுரத்குமார் தரிசனம். 18 வருடத்திற்கு முன்னரே சம்பத்லக்ஷ்மியின் வாழ்வை உணர்த்திய தீர்க்கதரிசனம்.
56. டாக்டர் மகேஷ்பதி
தன் மகள் தாரிணிக்கு ஐஸ்க்ரீம் தரும் அய்யா பாலகுமாரனின் அன்பும் ஆசியும் உணரவைக்கும் கடிதம்.
57. பாலாஜி ஸ்ரீனிவாசன்
குரு ஒரு பலம். யானை பலம். அவர் அன்பானவர். அவருடைய அன்புக்கு மிக நீண்ட கைகள்.
58. இந்திரா பாஸ்கர்
ஒரு விஷயம் தவறெனில் வன்மையாக கண்டிப்பார் அந்தக் கண்டிப்பிலும் அக்கறையே இருக்கும்.
59. சௌம்யா ரவிச்சந்திரன்
ஆலமரத்தின் விழுதுகளுக்கு பரஸ்பரம் அறிமுகமில்லையெனினும் அவைகள் ஒரே மரத்தை சார்ந்தவையே.
60. முனீஸ்வர சாஸ்திரிகள்
கடவுளைப் பார்த்தவர்களைப்பார் என்பது சேலம் ஸ்கந்தாச்ரம மகான் வார்த்தை.
61. Dr. S. பாலமுருகன்
அய்யனோடு நிகழ்த கோயில் பயண அனுபவங்கள்.
62. வடவள்ளி ரவிச்சந்திரன்
பாலகுமாரன் மனித வடிவில் தெய்வம் என்பதை விளக்கும் கடிதம்.
63. பூர்ணிமா மகேஷ்பதி
உங்கள் வீட்டுக் குழந்தைகளை ஒரு முறை பாலகுமாரனிடம் அழைத்து வந்து ஆசி பெறுங்கள் அது அவர்களை நல்வழிபடுத்தும் என்கிறார் பூர்ணிமா.
64. செல்விநாகராஜன்
குரு பக்தி என்ன செய்யும் இவரின் வாழ்வே எடுத்துக்காட்டு.
65. மோகனூர் பார்த்தசாரதி
பாலகுமாரன் ஐயா குரு. யோகிராம்சுரத்குமார் பரமகுரு.
66. R. வேணுகோபால்
பாலகுமாரன் , நோ பகவான்....நீங்கதான் எங்க எல்லோருக்கும் குரு என்றார். அதற்கு யோகியோ , நோ பாலகுமார்....நான் எல்லோருக்கும் சொல்லித்தர முடியாது. நான் உனக்கு சொல்லி தர்றேன். நீ மத்தவங்களுக்கு சொல்லிக் கொடு என்றார்.
67. ஜெயப்பிரதா
ஒரு அமெரிக்கவாழ் சகோதரியின் அன்பு.
68. Ravichandran
I cannot have experiences of my own, other than his realisation.....
69. கீதாஞ்சலி கார்த்திகேயன்
அகல்யா என்று மகளுக்கு பெயர் ஏன் சொல்கிறது கடிதம்.
70. வனிதா சந்திரசேகர்
சத்சங்கத்தின் கருணையே கடிதமாக.
Ayya yogi ram sarathkumar ki jai ungal eluthukal end garvathai kuraithu pengalai kandal oru punnagayudan ulamara vananga mudigiradhu. Nandri
ReplyDelete