'ஹிந்து' என்ற வார்த்தையின் மூலம் - பகுதி - 5
'ஹிந்து' என்ற வார்த்தையின் மூலம்
ஆங்கில மூலம் : பிரேம்நாத் மகாஜனி.
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்
அத்தியாயம் - 5
சமஸ்கிருத இலக்கியம்
சமஸ்கிருதத்திற்கு முன்பே பிராகிருதமே வழக்கு மொழியாக இருந்தது, அதிலிருந்தே ‘ஹிந்து' என்ற தற்கால வார்த்தை தோன்றியது. பிராகிருதத்திற்கும் வேத சமஸ்கிருத மொழிக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு.
பவிஷ்ய மஹாபுராணம் முதல் அத்தியாயம் , பாடல் 5 - ல் சமஸ்கிருதமே காலம் கடந்த இந்தியாவின் மொழியாக இருந்து வந்தது என்பதைக் குறிப்பிடுகிறது. உலகத்தின் பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் பகுதிகளில் மக்கள் இந்த மொழியை கடன்பெற்றிருந்தனர். “தந்தை”, “தாத்தா”, “சகோதரன்”, “கணவன்” போன்ற வார்த்தைகளின் வேர்களும் இம்மொழியில் உண்டு. அதேபோல் “ஜெயின்” என்ற வார்த்தையின் வேர் “செயின்” ( Sain ) என்பதிலும், “சஃப்டா சிந்து” ( ஏழுகடல் அல்லது ஏழு ஆறு ) என்ற வார்த்தையின் வேர் “அஃப்டா ஹிந்து” என்பது குராண்ந்திகாவின் ( Gurandika ) அடிப்படையை கொண்டது.
நாம் சற்றே முந்தைய இஸ்லாமிய காலத்திற்கு சென்றோமானால் நாம் ஹிந்து என்ற வார்த்தையை பின்வரும் சமஸ்கிருத புத்தகங்கள் மற்றும் வேதங்களில் அறிய இயலும்.
1.
பவிஷ்ய மஹாபுராணம்
பிரதிஸார்க் 5 ( 36 ) : கி.பி. 115.
2.
மேரு தந்தரா
பிரகாஷ், 227 – 33 ( 9 ) : 8 ஆம் நூற்றாண்டு.
3.
காளிகா புராணம். ( முரு தந்த்ராவை விட பழையது ).
4.
பிரிகாஸ்பதிஸாஸ்த்ரா.
5.
பாரிஜாத் ஹரணம்
நாடகம்.
6.
ராம் கோஷ்.
7.
பிரிகாஸ்பதி
அகம் ( 10 ஆம் நூற்றாண்டிற்கு
முந்தையது).
8.
ஷரண்காதர்
பதாதி.
9.
ஹேமந்த் கவி
கோஷ்.
10.
சப்த கல்பதரும்
கோஷ்.
11.
அத்புத் கோஷ்.
12.
மேதினி கோஷ்.
13.
மாதவியா திக்விஜய்.
14.
விருதா ஸ்மிருதி. ( ஸ்ரீதர் ராதே ).
பவிஷ்ய மஹாபுராணம் ( கி.பி.115 ) பாடல் 5 பின்வருமாறு கூறுகிறது.
“ஆரியர்களின் சிறந்த நாடு “சிந்துஸ்தான்” என்று அறியப்படுகிறது. “மிலேக்” (Mlech) நாடு சிந்துவிற்கு அப்பால் உள்ளது.” இந்த எல்லை நிர்ணயம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு விக்ரமாதித்யனின் பேரன் சாலிவாகனனால் ஏற்படுத்தப்பட்டது.
சமஸ்கிருதத்தில் உள்ள சிந்து இந்தூஸ் அல்லது ஆறு என்ற பொருளில் மட்டுமின்றி, கடல் மற்றும் கவசமாக இருக்கும் தெற்கு தீபகற்பத்தையும் குறிப்பிடுகிறது. இந்த ஹிந்து என்ற ஒற்றை வார்த்தை சிந்து நிலத்தின் எல்லைகள் அனைத்தையும் சுட்டிக்காட்டும் ஒன்றாகும். ( 10 ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய பங்களா சமஸ்கிருத இலக்கியம் ) இது ஹிந்துஸ்தானின் எல்லையை கீழ்கண்டவாறு நிர்ணயம் செய்கிறது.
“இமயமலையின் பிராந்திய இறையாண்மையிலிருந்து, இந்தியப் பெருங்கடல்வரை தெய்வங்களால் வழங்கப்பட்ட நாடு இந்துக்களின் இடம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தின் பெயர் HI ( ஹி ) மற்றும் Indu ( ந்து ) அதாவது ஹிமாலாயா ( பனி ) மற்றும் சிந்து ( கடல் ) ஆகிய இரண்டும் இணைந்த சொல்லாகும்.”
“ஹிந்து” என்ற வார்த்தை சமஸ்கிருத இலக்கியங்களிலோ, அகராதியிலோ, மஹாராஷ்டிராவின் ஆப்தே அவர்களின் நூலான பிரம்மாண்ட சமஸ்கிருத லெக்ஸிகோகிராஃபரிலோ வெளியிடப்படவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் மேலும், பெங்காலை சேர்ந்த தாரநாத் தாரக வாசஸ்பதி தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்துகையில், “சிவ சிவா ! ந ஹிந்துர் ந யவனஹா!” என்கிறார். ஹிந்து என்ற வார்த்தை சமஸ்கிருத இலக்கியங்களில் காணப்படாதபோதும் அதன் குறிப்புக்கள் பல சமஸ்கிருத புத்தகங்களில் காணப்படுகிறது.
பெரும் கவியான காளிதாஸ் கி.பி.375 ல் ஹிந்து என்ற வார்த்தையை இந்திய மக்களை அல்லது தேசத்தை குறிக்கும் சொல்லாக தனது புகழ்பெற்ற நாடகமான சாகுந்தலம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் இது ஹிந்து என்ற வார்த்தை இஸ்லாமிற்கு முந்தையது என்பதற்கான மிளிரும் ஆதாரமாகும்.
இந்தியா பனிபடர்ந்த ஹிமாலயத்தை அரணாக கொண்டது. ஹிம் ( Him ) என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு பனி என்று பொருள் மற்றும் து என்பது துர்க்கையின் பீஜமந்திரமாகும். அதன் பொருள் பாதுகாவலர் என்பதாகும். அல்லது எது நம்மை பிரச்சனைகளில் இருந்து காக்கிறதோ அல்லது நோயிலிருந்து காக்கிறதோ, அல்லது பனிபடர்ந்த இடத்தில் வசிப்பவர் என்பதே அதன் பொருளாகும். இவ்வாறு பனிபடர்ந்த இமயமலையினால் பாதுகாக்கப்பட்டவர்கள் “ஹிம்தூஸ்” என்றழைக்கப்பட்டனர். காலப்போக்கில் ம் என்பது ந் என்று அழைக்கப்பட்டு “ஹிந்து” எனப்பட்டது. எனவே இவ்வார்த்தை குறித்து நாம் அவமானப்படவோ, வெட்கப்படவோ ஏதுமில்லை.
நமது
நாடான ஹிந்துஸ்தான் மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டு உள்ளது. தெற்கில் இந்து மகா சமுத்திரம், மேற்கில் அரபிக்கடல், கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும்
பாரதத்தில் பாயும் பல பெரும் நதிகளான பிரம்மபுத்திரா, கங்கை,
ஜீலம் மற்றும் சிந்து மற்றும் இன்னும் பிறவற்றின் நதிநீரை ஹிமாலயமே தருகிறது.
பல நதிகள் இந்த நாடு முழுவதிலும் பல பக்கங்களிலும் ஓடுகின்றன.
இந்த நாடு மிகச்சரியாக பண்டைய காலத்தில் சிந்துஸ்தான் என்றே அழைக்கப்பட்டு
அது மருவி ஹிந்துஸ்தான் அல்லது ஹிந்து என அவெஸ்தானின் தாக்கம் மற்றும் சங்கமத்தினால்
இந்த நாட்டில் அழைக்கப்பட்டது.
மூலம்
தேடும் பயணம் தொடரும்....
நிறைய தரவுகள் அடிப்படையாக உள்ளது... ஆர்வமூட்டுகிறது. நன்றி
ReplyDelete