'ஹிந்து' என்ற வார்த்தையின் மூலம் - பகுதி - 4

                                            'ஹிந்து' என்ற வார்த்தையின் மூலம்

   

ஆங்கில மூலம் : பிரேம்நாத் மகாஜனி.

தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்.


அத்தியாயம் – 4

எதனால் ஹிந்து ?

வரலாற்று ஆய்வாளர்கள் ஹிந்து நாகரீகத்தின் தடங்களை கலாச்சாரத்தை மற்றும் மதத்தை இந்தியாவை சூழ்ந்திருக்கும் நாடுகளான இலங்கை, பர்மா, மேற்காசியா , சைனா, ஜப்பான், கிழக்கிந்திய நாடுகள், இந்தோ - சீனா, போர்னியோ, இன்னும் பிறவற்றிலும் ஆராய்ந்தனர். ஐரோப்பிய வரலாற்றாய்வாளர்களின் கூற்றுபடி இந்தியர்களின் இந்த நாடுகளுடனான தொடர்பு கி.மு. 600 ல் இருந்தே இருப்பதாக அறியப்பட்டுள்ளது. ஆனால் மகாபாரதப்படி ( கி.மு. 3000 ) முன்பிருந்தே தொடர்புகள் இருக்க வாய்ப்புண்டு என்பதையும் அறிகிறோம். பாரத் ( இந்தியா ) என்பதே மஹாபாரதம் என்று அறியப்பட்டிருக்கிறது. இதன் எல்லைகள் இன்றைய இந்தியாவைவிட கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் மிகவும் பரந்து விரிந்து கிடந்த ஒன்றாகும். இன்றைய இந்தியாவின். தொல்லியல் துறையினர் இந்தியாவை சூழ்ந்திருக்கும் பல நாடுகளிலும் நம் தடங்களை கண்டறிந்துள்ளனர்.

வரலாற்றின் இன்னொரு முக்கிய அம்சமாக ஹிந்துக்களும், ஹிந்துஸ்தானும் இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஹிந்துஸ்தானை விரிவாக்கி பல காலனிகளையும், இராச்சியத்தையும் தென்கிழக்கு ஆசியாவில் அமைத்துள்ளது. ஜாவா, சுமத்ரா, பாலி, மலேயா, கம்போடியா, கிழக்கிந்தியா, இந்தோ சீனா மற்றும் போர்னியோ போன்ற அனைத்தும் அகண்ட இந்தியா அல்லது மஹாபாரதம் என்று அழைக்கப்பட்டது. இந்த காலனிகள் கிறிஸ்துவின் மறைவிற்குப்புன் கி.பி. 1 ஆம் நூற்றாண்டில் தொடங்கி 1500 வருடங்கள் தொடர்ந்தன. பர்மா மற்றும் இலங்கை போன்றவையும் சமீபத்தில் இந்தியாவின் பகுதிகளாகவே அறியப்பட்டுள்ளன.

ஆசியா முழுவதிலும் சந்தேகத்திற்கு இடமின்றி ஹிந்து மதமானது தனது தாக்கத்தை பண்டைய காலத்திலேயே செலுத்தியிருக்கிறது. குறிப்பாக வடக்கு மற்றும் மத்திய ஆசியாவில் ( தாஷ்கண்ட், யார்க்கண்ட், கைத்தான் மற்றும் பிற) சைனா, கொரியா, ஜப்பான், திபெத் , மங்கோலியா போன்ற நாடுகளிலும், தெற்கில் இலங்கை, கிழக்கில் பர்மா, சியாம், இந்தோ சீனா, ஜாவா, சுமத்ரா, போர்னியோ, பாலி, மலேயா , கம்போடியா போன்ற நாடுகளிலும், மேற்கில் சிரியா, ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் ஈராக் போன்ற நாடுகள் மஹாபாரதத்தின் பகுதியாகவே இருந்து இந்தியா என்று தற்போது அழைக்கப்படுகிறது என்று டாக்டர். ஸ்டையன் என்ற மகத்தான பண்டிதரும், தொல்லியியலாளர் தான் பல்வேறு நாடுகளில் மேற்கொண்ட அகழ்வாய்வு ஆராய்ச்சியின் அடிப்படையில் கூறுகின்றார்.

ஆரிய நாகரீகத்தையோ  ( கி.மு.4000 ) அல்லது இந்து சமவெளி நாகரீகத்தையோ ( கி.மு.2500 ) , மகாபாரதத்தையோ ( கி.மு.3000 ) அல்லது ஹரப்பா நாகரீகத்தையோ ஹிந்து நாகரீகத்தையோ மறுப்பதற்கு ஏதுமில்லை. இவையனைத்தும் ஹிந்து நாகரீகத்தின் பன்முகத்தன்மைகளேயாகும். இவைகளைகளையும் காலக்கிரம வரிசைப்படி வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஹிந்து நாகரீகத்தின் தடங்கள் அவெஸ்தான் ( கி.மு.5000 ), புத்தமதம் ( கி.மு.599 ), ஜைனமதம் ( கி.மு.623 ), சீக்கியம் ( கி.பி.1469 ) இதைப்போன்ற பல்வேறு இதே மாதிரியான நம்பிக்கைகளின் தொகுப்பான ஒரு கூட்டே நமது பெரும் ஹிந்து நாகரீகமாகும். இவைகள் அனைத்தும் ஹிந்துமதத்தில் இருந்து தனித்திருந்தவை அல்ல, ஹிந்துமத பார்வையில் ஒரேவிதமான பாடங்களே அவைகள்.

இத்தகைய தன்மையினாலேயே உலகத்தின் பல பகுதிகளில் இருப்பவர்களும் இந்து மத தாக்கத்திற்கு உள்ளாகி இதனை பின் தொடர்கின்றனர். ஹிந்து நாகரீகம் கிழக்கில், பர்மாவை கடந்து ஜப்பான் வரையும், பல சிறிய தீவுகளிலும் நீண்டிருக்கிறது. இந்தோனேஷியாவில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்களாக இருப்பினும் மக்கள் ராமாயணத்தை படிப்பதோடு , ராம் லீலா விழாவையும், பிற ஹிந்துக்கள் விழாவையும், சடங்குகளையும் பின்பற்றுகின்றனர். ராமாயணம் தாய்லாந்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டில் அயுத்தியா' என்பது ‘,அயோத்யா' ( ராமனின் தலைநகர் ) என்பதன் உச்சரிப்பேயாகும். இன்றும் தாய்லாந்தில் நடக்கும் பாவைக்கூத்தில் ராமாயண கதைகளே கூறப்படுவது நமக்கு பெருமை சேர்க்கும் செயல் அல்லவா ? ஹிந்து என்ற வார்த்தைக்கு திருடன், கொள்ளைக்காரன் என்பதல்ல பொருள் என்று நிரூபிக்க வேறென்ன ஆதாரங்கள் தேவை ?

வரலாற்றில் நமது நாட்டின் முந்தைய பெயர் குறித்த குறிப்புக்கள் தெளிவாக இல்லை. இந்திய நாகரீகத்தின் புகழ் என்பது வேதக்காலம் முதல் தொடங்கி இருக்கும் ஒன்றாகும். வரலாற்று ஆய்வாளர்கள் ஆரியர்களே ஹிந்து மத நிறுவனர்கள் என்று நிறுவ முற்படுகின்றனர். மத்திய ஆசியாவில் இருந்து ஆரியர்கள் வந்தார்கள் என்பதற்கும் எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லை. அவர்கள் வெளியே இருந்து வந்தவர்கள் அல்ல. அவர்களும் இந்தியர்களே அவர்களெல்லாம் இந்தியாவெங்கும் மேலிருந்து கீழாக பரவியவர்கள். அவர்கள் ஆரியர்களைவிட நாகரீகத்தில் முன்னேறி இருந்தனர் என்று ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தைச் சேர்ந்த டாக்டர். ரோமிலா தப்பார் விளக்கி சில வெளிச்சங்களை நமக்கு பாய்ச்சுகிறார். இத்தகைய பண்டைய நாகரீகத்தின் எச்சங்கள் மேற்கு மற்றும் வடக்கு இந்தியாவிலும் காணக் கிடைக்கின்றன. காஷ்மீர் மற்றும் இந்தோ கங்கை பாயும் சமவெளிகளிலும் இத்தடங்கள் உண்டு. இதன்மூலம் ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் அல்ல என்றும், அவர்கள் பனிப்பாறைகாலத்தின் காலமாற்றத்தின் கட்டாயத்தால் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்தவர்கள் என்பது உறுதியாகிறது.

சமீபத்தில் ராஜஸ்தானில் கிடைத்த தொல்லியல் அகழ்வாய்வு ஆராய்ச்சி முடிவுகள் ஹிந்து நாகரீகம் பலவற்றிற்கு முந்தையது என உணர்த்துகிறது. ( ஆதாரம் : இந்தியன் எக்ஸ்பிரஸ் 12-4-1972).

ஹிந்து என்ற வார்த்தை அனாதியானது. ஹிந்து என்ற வார்த்தை இருந்தபோதும், அவ்வார்த்தை எதையும் ரையறுத்து கூறவோ, பெயரிட்டு அழைக்கவோ தேவையற்ற காலத்திலிருந்தே அந்த வார்த்தை இருந்தது. உண்மையில் ஹிந்து என்ற சமூகமே ஞானம் பெற்ற , நாகரீகமடைந்த சமூகமாக பண்டைய காலத்திலிருந்து வந்தது. அது உலகத்தின் பல பகுதிகளுக்கு பரவியதன் தடங்கள் இன்றும் உலகின் பல பகுதிகளில் காண கிடைக்கின்றன. உலகத்தின் பல்வேறு நம்பிக்கைகள் காலப்போக்கில் இந்த நிலத்தில் நம்மோடு தொடர்பு கொண்டபோது , நாம் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே ஹிந்து என்ற வார்த்தை சிந்து என்ற நதியின் பெயரில் இருந்து தருவிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. அது நமது வரலாற்றில் நமது ஜென்ட் அவெஸ்தான் நாகரீக காலத்திலிருந்தே இணைந்திருந்தது. அதாவது கிறிஸ்துவின் பிறப்பிற்கு ஐந்து அல்லது ஆறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது.

ஹிந்து என்ற மதம் என்பது உலகத்தின் பண்டைய காலத்து மதம், அது பலகாலமாக பல கால இடர்பாடுகளைக் கடந்து நிற்கும் ஒற்றை மதமாகும். மற்ற மதங்கள் அதன்பின்னர் வளர்ந்தவையேயாகும். அவைகள் அந்தந்த மதங்களின் தலைவர்களால் வழங்கப்பட்டவை. மற்ற மதங்கள் அனைத்தும் ஹிந்து மதத்தின் கிளைகள் என்பது மிகைப்படுத்தல் அல்ல, நிஜம். கவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் குறிப்பிடுகையில் கொடுமையும், அநீதியும் உலகத்தில் அதிகரிக்கும்போதும் , சாதாரண மனிதன் துன்பத்திற்கு உள்ளாகி ஒடுக்கப்படுகையிலும், இறைவன் மனித வடிவில் வருவார் என்றிருக்கிறார். அவ்விதமாக மனித வடிவில் வரும் இறைவன் மனிதத்தையும், சனாதன தர்மத்தையும் காத்து தீயவர்களையும் அழிப்பேன் என்றிருக்கிறார். கடவுளின் இத்தகைய புதிய வடிவம் , ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி ஏதோவொரு மதத்தின் பெயரால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அந்த தீர்க்கதரிசனம் அழைக்கப்படுகிறது. புதிய மதம் என்று எதுவுமே இல்லை உண்மையில் பழைய கள் புதிய மொந்தையில் என்பதே நிதர்சனமான நிஜம்.

ஹிந்து வேதங்கள் என்பவை சந்தேகத்திற்கு இடமின்றி புனிதமான காலத்தால் முந்திய நூல்களே ஆகும். அதில் பல ஞானமும், அறிவியல் மற்றும் தத்துவங்களும் இருக்கின்றன என்ற சர் ஜான் வுட்ராஃபி தனது நூலான இந்தியா நாகரீகமடைந்ததா ? ( Is India civilized ? ) என்ற நூலில் ஹிந்து மதம் குறித்து குறிப்பிடுகிறார். அதில் உலகத்தில் வேறெந்த மதமும் தர்க்கரீதியாக வாழ்க்கையையும் ஆன்மாவையும் சமமாக பாவித்து ஹிந்து மதத்தைப்போல் விளக்கியதில்லை என்றும், ஹிந்து மதம் உலகையும், கடவுளையும் ஒத்திசைக்கும் கொள்கைகளை கொண்டுள்ளது என்றும் விளக்கியுள்ளார்.

மூலம் தேடும் பயணம் தொடரும்....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Post a Comment

Popular posts from this blog

திருப்பம் தந்த திருப்பட்டூர்

எழுத்துக்கு எழுபது - சரஸ்வதி சுவாமிநாதன்

சத்தியம் என்ற சொல் - எழுத்துச்சித்தர் பாலகுமாரன்